இந்தியாவில் நாய்குட்டியால் மணப்பெண் ஒருவர் தனது திருமணத்தையே நிறுத்தியுள்ளது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்தவர் மணப்பெண் தான்யா கேசர்வானி. இவரும் சுமித் கேசர்வானி என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர்.
இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்ததால் வீட்டை எதிர்த்து கடந்த ஜனவரி மாதம் ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
பின்பு குடும்பத்தினர் வந்து சமாதானப்படுத்திய தங்களது முறைப்படி திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 18ம் தேதி ஃபதேபூர் மாவட்டத்தில் உள்ள காகாகோட்வாலி பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
பெண் வீட்டார் திருமண மண்டபவத்திற்கு வந்த நிலையில், தங்களுடன் மணமகளின் செல்லப்பிராணியான நாயையும் அழைத்து வந்துள்ளனர்.
முதல் நாள் திருமண சடங்குகள் அனைத்தும் மகிழ்ச்சியாக நடந்த நிலையில், மறுநாள் காலை நகை அணிவிக்கும் சடங்கு நடைபெற்றுள்ளது.
திருமண மண்டபவத்தின் அருகில் கட்டப்பட்டிருந்த நாய் குரைத்துக் கொண்டிருந்துள்ளது. இதனால் எரிச்சலடைந்த மணமகன் குடும்பத்தை சேர்ந்த இளைஞர் நாயை தாக்கியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண் வீட்டினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். கடைசியாக வாக்குவாதம் மிகப்பெரிய கைகலப்பாகவும் மாறியுள்ளது.
கம்புகளை வைத்து தாக்கியத்தில் பலருக்கும் காயம ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்பு காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர்.
மணப்பெண் நாயை அடித்ததை பொறுத்துக் கொள்ள முடியாமல் திருமணத்தையும் நிறுத்தியுள்ளார். பின்னர் இரண்டு குடும்பத்தினரும் பேசியும் திருமணத்தில் நல்ல முடிவு எடுக்கமுடியவில்லை.
.jpg)