ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டாவின் பிரம்மாண்ட திருமண ஏற்பாடுகள்.. ஒரே நாளில் 2 திருமணம்..

 


விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமணம் பேசுபொருளாகியுள்ளது. இவர்களுடைய திருமணம் இன்று உதய்பூரில் உள்ள பிரம்மாண்ட மாளிகையில் நடைபெறுகிறது.

இதுகுறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஷ்மிகா - விஜய் திருமணம் நடக்கும் மாளிகைக்கு ஒரு நாளைக்கு ரூ. 1 லட்சத்திற்கும் மேல் வாடகை என கூறப்படுகிறது.


மேலும் வெளிவந்த தகவலின்படி, விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஒரே நாளில் இரண்டு முறை திருமணம் செய்யவுள்ளனர். காலையில் தெலுங்கு பாரம்பரியப்படியும், மாலையில் கொடவா பாரம்பரியப்படியும் திருமணம் நடக்கிறது.

சரிகமப சங்கமம்.. 10 வருட கொண்டாட்டம்! இந்த வார ப்ரோமோ

 

ஜீ தமிழின் சரிகமப Li'l Champs Season 5 நிகழ்ச்சியில் இந்த வாரம் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான ஒரு விஷயம் நடக்க இருகிறது.

சரிகமப ஷோ 10 வருடங்களை நிறைவு செய்வதால் அதை கொண்டாடும் விதமாக போட்டியாளர்களின் சங்கமம் நடக்கிறது.

வரும் சனி மற்றும் ஞாயிறு இரவு 7 மணிக்கு இந்த சங்கமம் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.

தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோ இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

பாக்யராஜ் உடன் என்ன சண்டை? துரோகத்தை பற்றி பேசிய நடிகர் சுந்தர்ராஜன்


இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் பிரபலமானவர் ஆர்.சுந்தர்ராஜன். அவர் தற்போது விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் அண்ணாமலை என்ற ரோலில் நடித்து வருகிறார்.

தற்போது சுந்தர்ராஜன் அளித்த பேட்டி ஒன்றில் பாக்யராஜ் தனக்கு செய்த துரோகம் பற்றி பேசி இருக்கிறார். ஒன்றாம் வகுப்பில் இருந்தே அவர்கள் இருவரும் ஒரே ஸ்கூலில் தான் படித்தார்களாம். அவ்வளவு சின்ன வயதில் தொடங்கிய நட்பு, சினிமாவில் நுழைந்தபின் பாக்யராஜ் செய்த துரோகத்தால் தற்போது வரை அவரிடம் பேசாமல் இருப்பதாக சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

அவன் இவன் என உரிமையுடன் பேசும் அளவுக்கு இருக்கும் ஒரே நண்பன் பாக்யராஜ் தான் எனவும் அவர் கூறியுள்ளார்.

சினிமாவில் இயக்குனர் ஆக வேண்டும் என்கிற ஆசையில் ஒன்றாக தான் சென்னைக்கு கிளம்பி வந்தோம். ஒரு கட்டத்தில் 16 வயதினிலே படத்தில் பாரதிராஜாவுக்கு அசிஸ்டன்ட் ஆக ஒருவர் வேண்டும் என கேட்டார்கள்.

என்னை தான் போக சொன்னார் அந்த நபர். ஆனால் நான் பாக்யராஜை போக சொன்னேன். அப்போதே அவன் நன்றாக ஆங்கிலம் பேசுவான். அதனால் தான் அவன் இயக்குனர் ஆனால் நானும் இயக்குனர் ஆகிவிடுவேன் என நினைத்தேன்.

இருவரும் ஒன்றாக சேர்ந்து இயக்குனராக ஒரே படத்தை இயக்க போகிறோம் என அப்போது வரை நான் நினைத்துக்கொண்டிருந்தேன். இருப்பினும் அது பற்றி பேசியது இல்லை.

அதன் பிறகு ஹீரோவாக பாக்யராஜ் நடிக்க தொடங்கிவிட்டார். புதிய வார்ப்புகள் படத்தில் ஹீரோவாக அவர் நடிக்க தொடங்கியபோது இரவோடு இவராக சென்றுவிட்டார். காலையில் எழுந்து பார்த்தால் அவன் இல்லை.


அதன் பின் ஒரு லெட்டர் வந்தது. ஊருக்கு போ, கடையை பார்த்துக்கொள்.. நான் படம் இயக்கும்போது கூப்பிடுறேன் என அந்த லெட்டரில் எழுதி இருந்தார். நான் ஒரு inland லெட்டர் வாங்கி அதில் 'நன்றி' என ஒரே வார்த்தை மட்டும் நடுவில் எழுதி அனுப்பிவிட்டேன்.


அவர் வாழ்க்கையில் நான் குறுக்கிடுவேன் என நினைத்திருக்கலாம். ஆனால் என் வாழ்க்கையே போனது அவனால் தான் என நான் அப்போது நினைத்தேன். அந்த வயசில் அப்படி நினைத்தேன்.

இந்த வாரம் ஓடிடியில் வரும் படங்கள் என்னென்ன.. முழு லிஸ்ட் இதோ

 

ஓடிடியில் வாரம்தோறும் என்ன புது படம் வர போகிறது என ரசிகர்கள் தற்போதெல்லாம் தீவிரமாக காத்திருக்க தொடங்கிவிட்டார்கள்.

அந்த வகையில் இந்த வாரம் முக்கிய ஓடிடி தளங்களில் என்ன புது படங்கள் வரப்போகிறது என்கிற பட்டியலை பார்க்கலாம்.

எட்டி உதைத்ததில் கீழே விழுந்து தலையிலும், கையில் செம அடி...

 



ஜீ தமிழில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று வீரா. இந்த சீரியலில் முக்கிய ஜோடியாக நடிக்கும் மாறன், வீரா ஜோடி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தவர்களாக உள்ளனர்.

இந்த ஜோடி வந்தாலே கலகலப்பாகவும், ரசிக்கும் விதமான காதல் காட்சிகளால் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

கதை சூப்பராக இருக்க இந்த சீரியல் தற்போது தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. மகாநதி சீரியல் புகழ் சுவாமிநாதன் மற்றும் நீ நான் காதல் சீரியல் நடிகை வர்ஷினி இருவரும் தான் வீரா சீரியல் தெலுங்கு ரீமேக்கில் ஜோடியாக நடித்து வருகிறார்கள்.

இந்த சீரியலின் கதைக்களம் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக செல்ல அவ்வப்போது படப்பிடிப்பு தள வீடியோக்களை அதில் நடிக்கும் கலைஞர்கள் பகிர்வது வழக்கம்.



அப்படி ஒரு கடத்தல் காட்சியில் நடிக்கும் போது கீழே விழுந்து கையில் அடிபட்ட வீடியோவை நடிகை சங்கவி தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அவரது நடிப்பிற்கு ரசிகர்கள் கடினமான உழைப்பாளி, நல்ல நடிகை என பாராட்டி வருகிறார்கள்.

மீனா கேட்ட எதிர்ப்பாராத கேள்வி, ஷாக்கில் நின்ற சரவணன்...

 


விஜய் தொலைக்காட்சியில் கூட்டுக் குடும்பத்தின் அழகை காட்டும் வகையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2.

அப்பா மகன்களின் பாசத்தை உணர்த்தும் கதையாக சீரியல் ஒளிபரப்பாக இந்த வாரம் பரபரப்பு இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது.

மயில் தனது அம்மாவும் மோசமாக பேச பணம் இருந்தால் தன் வாழ்க்கை தானே பார்த்துக் கொள்ளலாம் என மீனாவிடம் ஒரு வேலை கேட்க பின் அவருக்கு தெரிந்தவரின் வீட்டில் வேலைக்கு சேர்த்துவிடுகிறார்.

அங்கு முதலில் பாட்டியை பார்த்துக்கொள்ளும் வேலையில் மட்டும் சேர ரூ. 10,000 சம்பளம் பேசினார்கள். சமையலுக்கும் இப்போது மயில் ஓகே சொல்ல ரூ. 17, 000 ஆயிரம் சம்பளம் வாங்க இருக்கிறார்.

திருமணம் செய்யப்போகும் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா இருவருக்கும் உள்ள வயது வித்தியாசம்... எவ்வளவு தெரியுமா?

 


பிரபலங்கள் என்றாலே ஸ்பெஷல் தான், அதிலும் மக்கள் கொண்டாடிய பிரபலங்கள் நிஜத்தில் இணைகிறார்கள் என்றால் அது மக்களுக்கு மிகுந்த சந்தோஷம்.

அப்படி திரையில் பார்த்து ரசித்த ஒரு சூப்பர் ஜோடி தான் இப்போது நிஜத்தில் இணைய உள்ளனர். அவர்கள் யார் என்பது உங்களுக்கே தெரியும், விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா தான்.

படங்களில் நடித்த போது காதல் ஏற்பட தங்களது காதலை ரகசியமாக வைத்துக்கொண்டிருந்தவர்கள் இப்போது தம்பதிகளாக மாற உள்ளனர்.

உதய்பூரில் திருமண கொண்டாட்டங்கள் அட்டகாசமாக நடந்து வருகிறது. சில புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

நடிகை பிரிகிடா சகா கோட் சூட்டில் ட்ரெண்டி போட்டோஷூட்

 



நடிகை பிரிகிடா சகா வெப் சீரிஸில் டீச்சர் ஆக நடித்து பிரபலம் ஆகி அதன் பின் படங்களில் நடிக்க தொடங்கியவர். தற்போது வளர்ந்து வரும் நடிகையாக தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார்.

பிரிகிடா சகா ஆரம்பகட்டத்தில் ஹோம்லியாக மட்டுமே நடித்தார். இன்ஸ்டாவில் அவர் வெளியிடும் போட்டோக்களும் ஹோம்லியாகவே இருக்கும்.

தற்போது அவரும் கிளாமர் பக்கம் சென்றுவிட்டார். கிளாமர் ஆகவும் இன்ஸ்டாவில் போட்டோக்கள் வெளியிட தொடங்கி இருக்கிறார்.

நடிகை நந்திதா விருது விழாவுக்கு தாராள கவர்ச்சி உடையில் வந்த ஸ்டில்கள்

 



அட்டகத்தி, எதிர்நீச்சல், முண்டாசுப்பட்டி தொடங்கி தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்தவர் நந்திதா ஸ்வேதா. தற்போது அவர் தமிழ் சினிமாவில் அவர் நடிக்கும் படங்களும் குறைந்துவிட்டது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த filmfare விருது விழாவில் நந்திதா கலந்துகொண்டிருக்கிறார். அங்கு அவர் தாராள கவர்ச்சி உடையில் தான் சென்றிருக்கிறார்.



ஜல்லடை உடையில் நடிகை அஞ்சு குரியன் ஹாட் போட்டோஷூட்

 


நடிகை அஞ்சு குரியன் தமிழ், மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர். 

சமீபத்தில் அவர் ஓஹோ எந்தன் பேபி என்ற படத்தில் நடித்திருந்தார். 

அஞ்சு குரியன் இன்ஸ்டாவில் வெளியிடும் கவர்ச்சி போட்டோக்களுக்கு என்றே பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. 

இன்ஸ்டாவில் அவருக்கு 3 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள். 

தற்போது அவர் ஜல்லடை உடையில் செம ஹாட் ஆக போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்கள் வைரல் ஆகி இருக்கிறது.

பல கோடியில் சம்பாதிக்கும் நடிகர்களுக்கு தமன்னா எவ்வளவு தெரியுமா

 


நடிகை தமன்னா ஒருகாலத்தில் தென்னிந்திய சினிமாவில் தான் முன்னணி ஹீரோயினாக இருந்தார். தற்போது ஹிந்தியிலும் அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.

குறிப்பாக அவரது கவர்ச்சி டான்ஸ் பாடல்கள் மிகப்பெரிய ஹிட் ஆகின்றன.

சமீபத்திய பேட்டியில் தமன்னா ஒரு விஷயம் பேசி இருக்கிறார். "நடிகர்கள் என்னதான் கோடிகளில் சம்பாதித்தாலும், அதை சரியாக முதலீடு செய்து அதை பல மடங்கு ஆக்குவது எப்படி என பார்க்க வேண்டும்."

இல்லை என்றால் இறுதியில் எதுவுமே இல்லாமல் போய்விடும்" என தமன்னா கூறியுள்ளார்.

சந்தோஷப்படும்படி மயில் வாழ்க்கையில் நடந்த விஷயம், என்ன தெரியுமா?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2





 இந்த கதையில் இப்போது எந்த ஒரு பரபரப்பான கதைக்களம் இல்லை. இந்த வார புரொமோவில் பாண்டியனை கோமதி வெறுப்பேற்றும் காட்சிகள் தான் இடம்பெற்றன, கதையிலும் எந்த ஒரு திருப்புமுனை கதைக்களமும் இப்போது வரை இல்லை.

இன்றைய எபிசோடில், மீனா-கோமதியின் பாண்டியன் பற்றிய பேச்சுகள் இடம்பெறுகிறது. அந்த சமயம் ராஜி-கதிர் வெளியே கிளம்ப வர அவர்களுடன் ஒரு சில காட்சிகள்.

வீட்டைவிட்டு வெளியே வந்த கதிர்-ராஜியை கண்டு குமார் அப்படியே பார்த்துக்கொண்டு நிற்க வெளியிலேயே அவர்களின் ரொமான்ஸ் நடக்கிறது. பின் அப்பத்தாவிற்கு டாடா காட்டிவிட்டு சென்றுவிடுகிறார்கள்.

அடுத்து அப்பத்தா கோவிலுக்கு சென்று தனது மகன்கள் ஏற்பாடு செய்த பெண் வீட்டாரிடம் தனது பேரனுக்கு இந்த கல்யாணத்திற்கு விருப்பம் இல்லை என்று கூறி நிச்சயதார்த்தத்தை நிறுத்த கூறுகிறார்.

வீட்டில் பாக்கியம் எங்களுக்கு தோசை மாவு வேண்டும் என கூற மயில் கையில் இருந்த தோசையை அம்மாவிடம் கொடுத்துவிட்டு பசியோடு சென்றுவிடுகிறார். பின் வேலை செய்யும் இடத்திற்கு வந்தவருக்கு ஒரு சந்தோஷமான விஷயம் நடக்கிறது.

பிகினி ஆடை!! நீச்சல் குள புகைப்படத்தை பகிர்ந்த நடிகை வேதிகா..


 நடிகை வேதிகாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம்,கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் மதராஸி என்ற திரைப்படம் மூலமாக திரையில் தோற்றினர். இதனை அடுத்து வேதிகா சில வெற்றி படங்களில் நடித்திருந்தாலும், பாலா இயக்கிய ‘பரதேசி’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றார்.

அதை தொடர்ந்து, யாக்ஷினி என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். மேலும் பேட்ட ராப், ஃபியர், கனா, கஜானா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் வேதிகா, டூபீஸ் ஆடையணிந்து நீச்சல் குள புகைப்படத்தை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் நடிகை வேதிகா.


குடிபோதையில் இளம் நடிகருடன் நெருக்கமாக இருந்த நடிகை குஷ்பூ.. அலேக்காக தூக்கி சென்ற நடிகர்..உடைந்த ரகசியம்..


தமிழ் சினிமாவில் 80-90களில் கனவு தேவதையாக  வலம் வந்த நடிகை தான் குஷ்பு.

இவர் தனது பன்முகத் திறமையால் திரையுலகில் நிலைத்து, தற்போது அரசியல் மற்றும் சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

‘வருஷமெல்லாம் 16’, ‘சின்னத்தம்பி’ உள்ளிட்ட படங்களில் கார்த்திக், பிரபு, கமலஹாசன், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

இவரது புகழுக்கு ரசிகர்கள் கோயில் கட்டி ஆராதனை செய்தனர். சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்கள், தயாரிப்பு என பல தளங்களில் கலக்கும் குஷ்பு, நடிகர் சுந்தர் சி-யை மணந்து இரு பெண்களுக்கு தாயாக உள்ளார்.

தற்போது தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பொறுப்பு வகிக்கிறார்.இந்நிலையில், பிரபல பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன், குஷ்பு குறித்து அதிர்ச்சியூட்டும் கருத்துகளை தெரிவித்துள்ளார்.

சென்னை ஹோட்டல் ஒன்றில் மது போதையில் குஷ்பு தள்ளாடியபடி வந்ததாகவும், இளம் நடிகர் ஒருவர் அவரை அலேக்காக தூக்கி வந்து காரில் ஏற்றி அழைத்துச் சென்றதாகவும், இதனை தான் கண்முன் பார்த்ததாகவும் பாண்டியன் கூறியுள்ளார்.

“இப்படி இருந்த குஷ்பு இன்று தேசிய மகளிர் ஆணையத்தில் இருக்கிறார். இந்தப் பதவிக்கு அவர் தகுதியானவரா?” என கேள்வி எழுப்பி, பெண்கள் நலனுக்காக உண்மையாக பாடுபடும் ஆயிரக்கணக்கான பெண்களை முன்னிலைப்படுத்தியுள்ளார்.

“மறுத்தால் வழக்கு தொடரட்டும்,” என சவால் விடுத்த அவரது பேட்டி இணையத்தில் வைரலாகி, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.இந்த குற்றச்சாட்டுகள் குறித்து குஷ்பு தரப்பில் இருந்து இதுவரை பதில் இல்லை.

இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் தீவிர விவாதத்தை ஏற்படுத்தி, குஷ்புவின் பொது இமேஜ் மற்றும் அவரது பதவியின் மீதான கேள்விகளை எழுப்பியுள்ளது. பெண்கள் முன்னேற்றத்திற்காக பணியாற்றும் ஒருவரின் கடந்த காலம் குறித்த இத்தகைய கருத்துகள், சமூகத்தில் பரவலான கவனத்தை ஈர்த்து வருகிறது.

நடிகை சதாவை கதறவிட்ட தெருநாய்கள்... வெளியான பரபரப்பு வீடியோ



ஜெயம் படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலம் ஆனவர் சதா. அந்த படத்திற்கு பிறகு சில படங்களில் அவர் நடித்தார்.

சமீப காலமாக அவரை படங்களில் பார்க்க முடியாத நிலையில் Wildlife போட்டோகிராபியில் அதிகம் ஆர்வம் இருப்பதால் அதில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது சதா கதறி அழுது வீடியோ வெளியிட்டு இருக்கிறார். எல்லா தெரு நாய்களையும் பிடித்து காப்பகத்தில் அடைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொடர்பாக தான் சதா வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

50 வயது, ஆண்களிடம் நேரடியாக அதை கேட்பேன்.. நடிகை ஷில்பா ஷெட்டி வெளியிட்ட பரபரப்பு பேச்சு


பாலிவுட் சினிமாவில் 90களில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ஷில்பா ஷெட்டி. இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தமிழில் இவர் குஷி, மிஸ்டர் ரோமியோ போன்ற படங்களில் நடித்து இருக்கிறார்.

ஷில்பா தொழிலதிபர் ராஜ் குன்ரா என்பவரை 2009ல் திருமணம் செய்து கொண்டார். ஷில்பா ஷெட்டிக்கு ஷமிதா ஷெட்டி என்ற தங்கை இருக்கிறார். 46 வயதாகும் ஷமிதாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் கபில் ஷர்மா ஷோவில் பங்கேற்ற ஷில்பா ஷெட்டி தனது தங்கை ஷமிதாவுக்காக தீவிரமாக மாப்பிள்ளை தேடுவதாக கூறி உள்ளார்.

அதில்," நான் பல ஆண்களிடம் நேரடியாகவே சென்று உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா என்று கேட்பேன். நான் ஏன் அதை கேட்கிறேன் என பலரும் யோசிப்பார்கள். அப்போது எனது தங்கைக்காக என கூறுவேன். இதில், என்ன வெட்கம்" என ஷில்பா கூறி உள்ளார். 

நடிகை ஹன்சிகா விவாகரத்தா... இணையத்தில் வைரலாகும் தகவல்


நடிகை ஹன்சிகா மோத்வானி தனது நெருக்கமான தோழியாக இருந்த பெண்ணின் முன்னாள் கணவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இது சர்ச்சையாக, நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர்.

திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில், தற்போது நடிகை ஹன்சிகா தனது கணவரை விட்டு பிரிந்துவிட்டதாக தொடர்ந்து செய்திகள் உலா வருகிறது. கடந்த சில வாரங்களாக இந்த செய்திகள் வருவதை நாம் பார்த்து வருகிறோம்.

ஹன்சிகா தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார். இதனால் இவர்களுடைய பிரிவு உறுதி செய்யப்பட்டுவிட்டது என தகவல்கள் வெளிவந்தன.

இந்நிலையில், நடிகை ஹன்சிகா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் தற்போது வெளியிட்டு இருக்கும் பதிவு படுவைரலாகி வருகிறது.

இதில், இந்த வருடம் நான் கேட்காத ஒரு பாடம் கிடைத்துவிட்டது என ஹன்சிகா பதிவு செய்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள், விவாகரத்து குறித்துதான் மறைமுகமாக ஹன்சிகா இப்படி பதிவு செய்துள்ளார் என கூறி வருகிறார்கள்.

ஆனால், ஹன்சிகாவின் விவாகரத்து குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கர்ப்பமாக இருக்கும் போது தயாரிப்பாளரால் கஷ்டப்பட்டேன்!! நடிகை ராதிகா ஆப்தே ஓபனாக சொன்ன அதிர வைக்கும் தகவல்


பாலிவுட் சினிமாவை தாண்டி ஹாலிவுட் நடிகையாக பிரபலமாகி நடித்துக்கொண்டிருப்பவர் தான் நடிகை ராதிகா ஆப்தே. போல்ட்டான காட்சிகளில் நடித்து வருபவர் தான் நடிகை ராதிகா ஆப்தே.

சமீபத்தில் நேஹா துபியாவின் Freedom to Feed என்ற நேர்காணலில் போது, தான் கர்ப்பமாக இருக்கும் போது நடந்த மோசமான சம்பவத்தை பகிர்ந்திருக்கிறார்.

அதில், நான் கர்ப்பமாக இருந்தபோது படப்பிடிப்பு தளத்தில் இறுக்கமான ஆடையணிய வேண்டும் என்று தயாரிப்பாளர் வலியுறுத்தினார்.

அதனால், எனக்கு வலி மற்றும் அசெளகரியமான சூழல் ஏற்பட்டபோது மருத்துவரை பார்க்கக்கூட அனுமதிக்கவில்லை. ஆனால், ஹாலிவுட்டில் அப்படி இல்லை, அங்கு அனைவரும் ஆதரவாக இருப்பார்கள் என்றும் ராதிகா ஆப்தே பகிர்ந்துள்ளார்.

நம்பி வந்த இளம் நடிகை.. படுக்கை அறையே கதி என கிடக்க வைத்த இயக்குனர்


சினிமா உலகம் என்றாலே பளபளப்பு, புகழ், பணம் என்று பொதுமக்கள் கற்பனை செய்தாலும், அதன் திரைமறைவில் நடக்கும் சில சம்பவங்கள் அந்த பிம்பத்தை உடைத்து, அங்கு நல்லவர்களை விட கெட்டவர்களே அதிகம் என்பதை உணர்த்துகின்றன. 

பணத்திற்காகவும், புகழ் வெளிச்சத்திற்காகவும் எதையும் செய்யத் தயாராக இருப்பவர்கள் என்ற எண்ணம் மக்களிடம் பதிந்திருக்கிறது. இதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், அவ்வப்போது வெளிவரும் சம்பவங்கள் சினிமாவின் இருண்ட பக்கத்தை அம்பலப்படுத்துகின்றன. 

அப்படியொரு சம்பவமாக, மலபார் தேசத்தில் இருந்து தமிழ் சினிமாவை நம்பி வந்து நொந்துபோன ஒரு நடிகையின் அனுபவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு, வெளிநாட்டு நடிகை ஒருவர் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான ஒருவர் தன்னை ஹோட்டல் அறையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக வெளிப்படையாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

அவர் பல பேட்டிகளில், அந்த நடிகரின் ‘பர்ஃபாமென்ஸ்’ பற்றியும், வேறு நடிகர்கள் அதற்கு சிறந்தவர்கள் என்றும் குறிப்பிட்டார். இதுபோன்ற வெளிப்படையான பேச்சுகள், சினிமாக்காரர்கள் என்றாலே எதையும் செய்யத் துணிவார்கள் என்ற எண்ணத்தை மக்களிடம் விதைத்து, அவர்களின் பார்வையை உறுதிப்படுத்துகின்றன. 

ஆனால், இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், பொதுமக்கள் பெரும்பாலும் நடிகைகளை மட்டுமே குறைகூறுகிறார்கள். ஆனால், “வாய்ப்பு கொடுக்கிறேன், வாழ்க்கை கொடுக்கிறேன்” என்று கூறி, தங்கள் காம இச்சைக்கு நடிகைகளைப் பயன்படுத்தும் நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் பற்றி பெரிதாக பேசுவதில்லை. 

இந்த சூழலில், மலபார் பகுதியைச் சேர்ந்த ஒரு நடிகை தனது பதின்ம பருவத்தில் சினிமாவில் கிடைத்த வாய்ப்பை விடக்கூடாது என நினைத்து, கதையை முழுமையாகக் கேட்காமலேயே நடிக்க ஒப்புக்கொண்டார். ஆரம்பத்தில் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த பின்னர், இயக்குநர் படத்தில் பலான காட்சிகள் இருப்பதாகக் கூறியுள்ளார். “அம்மா திட்டுவாங்க, அப்பா அடிப்பாரு” என்று பதறிய நடிகையை, “இந்த படத்தில் நடித்தால் விருதுகளும் பாராட்டுகளும் குவியும்” என்று இயக்குநர் சமாதானப்படுத்தி, நடிக்க வைத்துள்ளார். 

இங்கே தான் நடிகை தவறு செய்துவிட்டார். அவர் ஒப்புக்கொண்டதும், படப்பிடிப்பு பெரும்பாலும் பெட்ரூம் காட்சிகளை மையமாகக் கொண்டு நடந்துள்ளது. 

மேலும், ஒவ்வொரு டேக்கிற்கு முன்பும் “நடித்துக் காட்டுகிறேன்” என்று சொல்லி, நடிகையை இயக்குநர் உடல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். வலியை பொறுத்து, அவரது அத்துமீறல்களை அமைதியாக சகித்து நடித்துள்ளார் நடிகை. படம் முடிந்து, இறுதியாக வெளியான பதிப்பைப் பார்த்தபோது, எடுக்கப்பட்ட பலான காட்சிகளில் பாதி கூட இல்லை. 

“என்ன சார், எடுத்தது பாதியில கூட இல்லையே?” என்று கேட்டதற்கு, “சென்சாரில் தூக்கிவிட்டார்கள்” என்று இயக்குநர் சாதாரணமாக பதிலளித்து, நடிகையை அமைதிப்படுத்தியுள்ளார். 

இப்போது அந்த நடிகை இதுகுறித்து புலம்பி வருவதாகவும், அதைக் கேள்விப்பட்டவர்கள் “இப்போது புலம்பி என்ன பயன்?” என்று கேலி செய்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த சம்பவம், சினிமாவில் புதிதாக வருபவர்களை எவ்வளவு எளிதாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. பாலியல் தொல்லைகளை எதிர்கொள்ளும் நடிகைகள் சிலர் மட்டுமே துணிச்சலுடன் பேசுகிறார்கள்; பலர் பட்டும் படாமலும் மழுப்பிவிடுகிறார்கள். 

ரோஸ் மில்க் நடிகையுடன் ஆடையின்றி காதலன்.. கம்பி நீட்டிய நடிகர்.. கதறும் மொழு மொழு நடிகை..


கோலிவுட் வட்டாரத்தில் தற்போது பரபரப்பாக ஒரு பேச்சு அடிபடுகிறது. நடிகைகள் திருமணப் பேச்சு எடுத்தாலே, அவர்களை காதலிக்கும் நடிகர்கள் கம்பி நீட்டி விடுகிறார்களாம்! 

நடிகர்களை காதலிக்கும் பல முன்னணி நடிகைகளுக்கும் திடீரென ஒரு கட்டத்தில் பிரேக்கப் செய்து பிரியும் நிலை ஏற்படுவதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. சினிமாவில் ஒரு சில பிரபலங்கள் மட்டுமே உண்மையாக காதலித்து, காதலித்த பெண்ணை திருமணம் செய்துகொண்டு கடைசி வரை சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். 

ஆனால், இன்றைய அவசர யுகத்தில் காதலுக்கு மரியாதை இல்லாமல் போய்விட்டது என்றும், பலரும் காஜுயை கழித்து கொள்ளவே அலைவதாக சினிமா வட்டாரங்கள் முணுமுணுத்துக் கொள்கின்றன.

சமீபத்தில் ஒரு முன்னணி நடிகை, தனது காதலரால் ஏமாற்றப்பட்டு கண்ணீருடன் பிரிந்த சம்பவம் கோலிவுட் வட்டாரங்களில் ஹாட் டாக்காக பேசப்படுகிறது. 

பல வருடங்களாக காதலித்து வந்த அந்த நடிகை, தற்போது காதலரை விட்டு கண்ணீருடன் பிரிந்துவிட்டார் என்கின்றனர். நடிகையை சில ஆண்டுகளாக நன்றாக அனுபவித்துவிட்டு, தற்போது போரடித்துவிட்டதால், நடிகர் இன்னொரு இளம் நடிகையுடன் ரகசியமாக தொடர்பில் இருப்பது தெரிய வந்ததே இந்த பிரேக்கப்பிற்கு காரணம் எனவும் கூறுகின்றனர். 

பால் போன்ற மேனி அழகைக் கொண்ட அந்த நடிகையை பார்த்ததுமே, அந்த நடிகருக்கு ஃபயர் பற்றிக்கொண்டதாம். அதுவும், நடிகையுடன் உச்சகட்ட காட்சியில் நடிக்க அல்வா போல சான்ஸ் கிடைத்ததும், நடிகையும் தாராளமாக நடிகருடன் இணைந்து கெமிஸ்ட்ரியை வொர்க்கவுட் செய்ய, இருவருக்கும் மனதளவில் சில விஷயங்கள் ஒத்துப்போக, இருவரும் சில ஆண்டுகள் ஒன்றாக இருந்தனர். 

ஆனால், தற்போது இளம் நடிகை ரோஸ் மில்க் பேபியுடன் நடிகருக்கு ஏற்பட்டுள்ள ரகசிய காதல் நடிகைக்கு தெரிந்ததும் தான் பிரச்சனை வெடித்தது என்கின்றனர் கோலிவுட் வாசிகள். 

உச்ச கட்டமாக, ரோஸ் மில்க் நடிகையுடன் ஆடையின்றி காதலன் இருக்கும் புகைப்படங்கள் சிலவும் அம்மணியின் கண்களை எட்டியிருக்கிறது.

நடிகையை காதலர் ஏமாற்றி வருகிறார் என்கிற சேதியை, நடிகருக்கு பிடிக்காத சிலர் நடிகையின் காதுகளில் விழும்படி கொளுத்திப்போட, நடிகை காதலர் தன்னை ஏமாற்றுகிறாரா இல்லையா என்பதை சோதிக்க, திருமணம் செய்துகொள்ளலாம் என டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்துவிட்டாராம். 

ஆனால், இப்போதைக்கு வேண்டாம் என கடந்த சில மாதங்களாக நடிகர் தள்ளிப்போட்டுக் கொண்டிருக்க, நடிகை கார்னர் செய்ததும் இது செட்டாகாது என நடிகையை அந்த நடிகர் கழட்டிவிட்டு விட்டதாக கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன. 

ஏற்கனவே, முதல் காதலரும் இப்படித்தான் திருமண பேச்சை எடுத்ததும் அப்பாவுக்கு பயந்துவிட்டு நடிகையை கழட்டிவிட்டு எஸ்கேப் ஆனார். இப்போது ரொம்பவே நம்பிக்கையாக இருந்த காதலரும் மோசம் செய்துவிட்டாரே என ரூமை பூட்டிக் கொண்டு 2 நாட்கள் ஷூட்டிங் ஏதும் போகாமல் நடிகை கதறி அழுததாகவும் பேச்சுக்கள் புகைந்து வருகின்றன.

இந்த சம்பவம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகைகளின் காதல் வாழ்க்கை ஏன் இப்படி முடிகிறது என பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.