ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா வெற்றி: டிரம்ப் அறிவிப்பு


 ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்கா முழுமையான வெற்றியைப் பெற்றுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' (Operation Epic Fury) இராணுவ நடவடிக்கை மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இதன் மூலம் ஈரானுக்கு எதிரான தாக்குதலில் அமெரிக்கா வெற்றி பெற்றுவிட்டதாக அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

கடந்த 11 நாட்களில் அமெரிக்க இராணுவம் ஈரானை கிட்டத்தட்ட அழித்துவிட்டது என்றும், குறிப்பாக அந்நாட்டின் விமானப்படை முற்றாகச் சிதைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானிடம் தற்போது போரிடுவதற்கு எதுவுமில்லை எனத் தெரிவித்துள்ள டிரம்ப், அந்நாட்டின் 90% ஏவுகணைகள் மற்றும் 86% ட்ரோன்கள் அமெரிக்காவினால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகத் புள்ளிவிபரங்களுடன் தெரிவித்துள்ளார்.

ஈரானின் பயங்கரவாத ஆட்சியால் ஏற்பட்ட அச்சுறுத்தலைத் தடுக்கவே இந்தத் தீர்மானமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.



ஈரானில் இனி அழிப்பதற்கு எதுவுமில்லை எனக் கூறியுள்ள டிரம்ப், தான் எப்போது வேண்டுமானாலும் இந்தத் தாக்குதலை நிறுத்துவதற்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.






கணவரை விவாகரத்து செய்த ஹன்சிகா!

 


தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் ஹன்சிகா மோத்வானி. 

2000 களில் வெளியான ஷக்கலக்க பூம் பூம் என்ற தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார், அதன்பின் சில ஆண்டுகள் கழித்து ஹிந்தியில் கதாநாயகியாக அறிமுகமானார். 

ஹிந்தியை தொடர்ந்து தெலுங்கிலும் நடித்து வந்தவர் கடந்த 2011 ஆம் ஆண்டு தனுஷின் மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். 

அதன்பின் எங்கேயும் காதல், வேலாயுதம், அரண்மனை, ரோமியோ ஜுலியட், சிங்கம் 2 என தொடர்ந்து பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து வந்தார். 

நடிகை ஹன்சிகா கடந்த 2022 ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சோஹேல் கதுரியா என்பவரை காதலித்து திருமணம் செய்தார். 

ஆனால் திருமணம் ஆன சில வருடங்களிலேயே ஹன்சிகா - சோஹேல் திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. தற்போது மும்பை பந்தாரா குடும்பநல நீதிமன்றம் இந்த தம்பதிக்கு பரஸ்பர சம்மதத்தின் அடிப்படையில் விவாகரத்தை வழங்கியுள்ளனர். 


ஹன்சிகா தனது விவாகரத்து விஷயத்தில் கணவர் சோஹேல் கதுரியாவிடம் இருந்து ஜீவனாம்சமாக எதுவும் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.




விஜய் - த்ரிஷாவுக்கு திருமணம்! பாடகி சுசித்ராவின் பரபரப்பு பேட்டி

 


சமந்தா பாணியில் த்ரிஷா- விஜய் திருமணம் நடைபெறவிருப்பதாக நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளதாக பாடகி சுசித்ரா கொடுத்துள்ள பேட்டி தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் சமந்தா மற்றும் இயக்குநர் ராஜ் நிடிமோரு கோவை ஈஷா யோகா மைய வளாகத்தில் உள்ள லிங்க பைரவி கோயிலில் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இவர்களின் திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

தற்போது விஜய்- சங்கீதா விவாகரத்து சர்ச்சையால் இணையமே போர்களமாக மாறியுள்ளது. நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக குற்றம் சாட்டி நடிகர் மற்றும் த.வெ.க தலைவர் விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரியுள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் விஜய்கு ஆதரவாக பேசி கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.



கல்யாண நாளில் நடிகைகளுடன் சேட்டை செய்த ஆர்யா!

 

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ஆர்யா, ஜிம் வொர்க்கவுட், சைக்கிளிங் உள்ளிட்ட பல விஷயங்களை செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்து வருகிறார். 45 வயதாகும் ஆர்யா, நடிகை சாயிஷாவை 2019 இல் காதலித்து திருமணம் செய்து ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். 

தற்போது மிஸ்டர் எக்ஸ், வேட்டுவம் உள்ளிட்ட படங்களில் நடித்தும் வருகிறார். மார்ச் 10 ஆம் திகதி அன்று ஆர்யா - சாயிஷா தங்களின் 7 ஆவது ஆண்டு திருமண நாளை கொண்டாடினர். 

இந்நிலையில், திருமண நாளின்போது, தன்னுடைய ஆர்யா40 படத்தில் நடித்து வரும் நடிகை நிகிலா விமல் மற்றும் வைஷ்ணவி சைதன்யாவுடன் இணைந்து ஜிம் ஒர்க்கவுட் செய்துள்ள புகைப்படத்தையும், சேட்டை செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ளார். 

ஆர்யாவின் இந்த பதிவு வைரலாக, ஜிம்மில் நடிகைகளுடன் அரட்டை அடிப்பதை நடிகர் சதீஷ் பார்த்துள்ளார். 

இதன்பின் ஆர்யாவின் பதிவிற்கு, நானெல்லாம் ஜிம்முக்குப் போனா, வந்த வேலையை மட்டும்தான் பார்க்குறது ஆர்யா டார்லிங் என கோபமான எமோஜியை போட்டு ஜஸ்ட் ஃபார் யுவர் ஜெனரல் நாலேட்ஜ் என்று கூறி ஆர்யாவின் மனைவி சாயிஷாவின் எக்ஸ் தள பக்கத்தை டேக் செய்துள்ளார். 

இதனை பார்த்த நெட்டிசன்கள், வயித்தெரிச்சலில் பொண்டாட்டிக்கிட்ட மாட்டிவிட்டீங்களே சதீஷ் என்று கலாய்த்தபடி கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.






என்னுடைய கர்ப்பம் தான் இதற்கு காரணம்!

 


தென்னிந்திய சினிமா நடிகை திரிஷா இப்போது சமீப காலமாக அடிக்கடி செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். 

தமிழ் சூப்பர் ஸ்டார், தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவர் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த விவகாரம் வைரலாகி வரும் நிலையில், விஜய் - திரிஷா இடையே காதல் உறவு என்ற ஊகங்கள் இப்போது ஹாட் டாபிக் ஆகியுள்ளது. 

சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு விஜயும் திரிஷாவும் ஒரே காரில் வந்ததுடன், ஒரே நிற பட்டு உடைகள் அணிந்து ஜோடியாகக் காணப்பட்டனர். 

இந்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலானது. இருவரும் மணமக்களை வாழ்த்தி மேடையில் நின்ற வீடியோக்களும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்கீதா, விஜயிடமிருந்து விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். 

தனக்கு நியாயம் கிடைக்காவிட்டால் அந்த நடிகை யார் என்று வெளியிடுவேன்" என்று சங்கீதா கடுமையான கருத்துகளை தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. 

இந்த கருத்துகள் வைரலான நிலையில், விஜய் - திரிஷா ஒரே காரில் காணப்பட்டதால், சமூக வலைதளங்களில் அந்த நடிகை திரிஷா தான் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்த சூழலில், திரிஷாவின் பழைய எங்கேஜ்மென்ட் ரத்தான விவகாரம் மீண்டும் வைரலாகி வருகிறது. 2015 இல் சென்னை வியாபாரி வருண் மணியன் உடன் திரிஷாவுக்கு எங்கேஜ்மென்ட் நடந்தது. ஆனால் சில மாதங்களிலேயே அது ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து திரிஷா ஒரு பேட்டியில் கூறியது இப்போது மீண்டும் வைரலாகி உள்ளது. 

என்னுடன் எங்கேஜ் ஆன நபர், பல கட்டுப்பாடுகளை வைத்தார். திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்த வேண்டும் என்றார். அதனால் நான் அவருடன் திருமணம் செய்ய வேண்டாம்" என்று முடிவு செய்தேன். 

நான் கர்ப்பமானால் மட்டுமே சினிமாவில் இருந்து பிரேக் எடுப்பேன். என் கர்ப்பம் மட்டுமே நான் சினிமாவில் நடிப்பதை தடுக்க காரணமாக இருக்கும். 

இல்லையென்றால் என் கடைசி மூச்சு வரை நடிப்பேன். ஹீரோயின் ரோல்கள் வராவிட்டாலும், எனக்கு ஏற்ற கேரக்டர் ரோல்கள் செய்வேன். ஆனால் நடிப்பை ஒருபோதும் விட்டுவிட மாட்டேன்." 


இந்த பழைய கருத்துகள் இப்போது மீண்டும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. 


மறுபக்கம், தற்போது திரிஷா மீது எழும் கருத்துகளுக்கு மத்தியில் அவர் இன்ஸ்டாகிராமில் போட்ட பதிவு வைரலாகி உள்ளது. தன் செல்ல நாய் இஸ்ஸி கிருஷ்ணன் (Izzy Krishnan) தூங்கும் போது தோகை ஆட்டுவதை வீடியோவாக போட்டுள்ளார். அதில் "Currently chasing cats in dreamland" என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். இந்த போஸ்ட் இப்போது வைரலாகி, பலரும் விளக்கம் தேடி வருகின்றனர். 


விஜய் - திரிஷா ஜோடியாக 5 படங்களில் நடித்துள்ளனர். அதில் 'கில்லி', 'திருப்பாச்சி', 'லியோ' போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்கள் உள்ளன. இந்த பழைய ஜோடி மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளது.





எல்லாவற்றையும் விட்டுட்டு வந்துவிட்டேன்

 


நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கிய பிறகு சினிமாவில் இனி நடிக்கமாட்டேன் என அதிரடியாக அறிவித்துவிட்டார். 

அவரது கடைசி படமான ஜனநாயகன் ரிலீஸில் பல்வேறு சிக்கல்கள் வந்து, இன்னும் சென்சார் சான்றிதழே கிடைக்காமல் இருக்கிறது. 

மறுபுறம் விஜய்யின் மனைவி சங்கீதா தொடுத்திருக்கும் விவாகரத்து வழக்கு, த்ரிஷா உடன் இணைத்து வரும் வதந்திகள் என விஜய் பல சிக்கல்களை சந்தித்து வருகிறார். 

இந்நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் நேர்காணலை நேற்று (10) விஜய் ஆரம்பித்தார். 

எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்து விட்டேன். இனி அரசியலை தவிர எனக்கு வேறு ஒன்றும் இல்லை" என விஜய் கூறினாராம்.

இன்றைய ராசி பலன்

 



இன்று (11) விருச்சிகம் ராசியில் கேட்டை பின்பு மூலம் நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று கும்ப ராசியில் புதாதித்ய, சதுர்கிரகி யோகம் உருவாகும் நாள். இன்று மேஷ ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. 


மேஷ ராசி பலன் 


மேஷ ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று உங்களுடைய வருமானம் திருப்திகரமாக இருக்கும். பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு அதிகரிக்க கூடிய நாள். நீங்கள் சுப காரியங்கள் மும்முறமாக பங்கேர்ப்பீர்கள். இந்த ராசி அதிபதி லாப ஸ்தானத்தில் சந்ததிப்பது உங்களுக்கு வேலையில் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வுக்கான நல்ல வாய்ப்பை ஏற்படுத்தும். இன்று குரு மிதுனத்தில் வக்ர நிவர்த்தி அடைகிறார். உங்கள் வேலை, வீட்டு வேலைகளை சரியாக திட்டமிட்டு முடிப்பது அவசியம். 


ரிஷப ராசி பலன் 


ரிஷப ராசி சேர்ந்தவர்களுக்கு செல்வம், மகிழ்ச்சி பெறக் கூடிய நாள். இன்று குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். ஒரு பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். அவர்களின் ஆலோசனை உங்கள் செயல்பாடுகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். இன்று மாலை நேரத்தில் உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபடுவீர்கள். உங்களின் புதிய முயற்சிகளில் குறிப்பிடத்தக்க வெற்றியை தரும். இன்று நீங்கள் நிர்ணயித்த இலக்கை அடைய சாதகமான சூழல் நிலவும். 


மிதுன ராசி பலன் 


மிதுன ராசி சேர்ந்தவர்களுக்கு உங்கள் வேலையில் முன்னேற்றமும் உயர் பதவியை அடைய வாய்ப்பு உள்ளது. இன்று உங்கள் பிள்ளைகளிடம் இருந்து நல்ல செய்திகளை பெறுவீர்கள். உங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும். உங்களுக்கு பிடித்தமான உணவுகளை சுவைக்க வாய்ப்பு கிடைக்கும். ஆடம்பரம், ஆடை, ஆபரணங்கள் மீது நாட்டம் குறையும். உங்களுடைய வேலை மற்றும் தொழில் தொடர்பாக சமூக ஊழியர்களின் ஆதரவு மற்றும் பங்கேற்பு பெறுவதற்கு. இன்று எந்த விஷயத்திலும் சோம்பலை கைவிட்டு சுறுசுறுப்பாக செயல்படவும். 


கடக ராசி பலன் 


கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலை அல்லது தொழில் தொடராக பயணம் இருக்குல்ல வாய்ப்பு உண்டு. உங்களுக்கு குழந்தைகளிடமிருந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று ஏதேனும் ஒரு வழிகளில் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். சிலரிடமிருந்து பரிசு கிடைக்க வாய்ப்பு உண்டு.. சில நாட்களாக இருக்கும் கடினமான மன உணர்வு நண்பர்களின் சந்திப்பால் தீரும். இன்று மாணவர்கள் படிப்பிலும், விளையாட்டு போட்டியில் சிறப்பாக செயல்படுவீர்கள். இன்று சரியான அளவில் ஓய்வு மற்றும் தூக்கத்தை எடுத்துக் கொள்வது அவசியம். 


சிம்ம ராசி பலன் 


சிம்ம ராசியை சேர்ந்த பொருட்களுக்கு இன்று வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடத்தும் நிகழ்ச்சியில் ஈடுபடுவீர்கள்.இது உங்களுக்கு மகிழ்ச்சியை தரக்கூடியதாக இருக்கும். உங்கள் தொழில் தொடர்பான முயற்சிகள் வருமானத்தை அதிகரிக்கும். எதிர்பாராத விதமாக அதிக பணம் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உண்டு. இதனால் உங்களுடைய மன உறுதி அதிகரிக்கும். சனி வக்கிர நிறைவு காரணமாக இன்று நீங்கள் சில சிக்கலை சந்திக்க வாய்ப்பு உண்டு. குறிப்பாக செரிமானம் மற்றும் வாயு பிரச்சினைகள் அசௌகரியத்தை ஏற்படுத்தும். அதனால் உங்கள் உணவுப் பழக்கத்தைக் கட்டுப்படுத்துங்கள். 


கன்னி ராசி பலன் 


கன்னி ராசி சேர்ந்தவர்களுக்கு உங்கள் வேலை தொடர்பாக கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும். இன்று நுட்பமான வேலை மற்றும் உங்கள் எழுத்து முன்னேற்றத்தையும் வருமானத்தையும் அதிகரிக்கும். இன்று எந்த சூழ்நிலையிலும் கோபத்தை தவிர்க்கவும். குழந்தைகளின் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். ஏதேனும் ஒரு சொத்து வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உங்கள் சகோதரர்களுடன் இருக்கும் கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். 


துலாம் ராசி பலன் 


துலாம் ராசி சேர்ந்தவர்களுக்கு உங்கள் விருப்பங்கள் நிறைவேற கூடியதாக இருக்கும். இன்று உங்களுடைய பணி பாராட்டை பெற்று தரும். சில விஷயங்கள் உங்களுக்கு சங்கடத்தை தரக்கூடியதாக அமையலாம். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். எதிர்பாராத திடீர் செலவுகள் ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை. இன்று நீங்கள் ஆன்மீகம், இலக்கியம் தொடர்பான விஷயங்களில் மார்க்கம் அதிகரிக்கும். சும்மா சமூக பணி அல்லது நிகழ்வுகளில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டுவீர்கள். 


விருச்சிக ராசி பலன் 


விருச்சிக ராசி சிறந்தவர்களுக்கு இன்று ராசி அதிபதி செவ்வாய் பலத்தை தரும் வகையில் அமர்ந்துள்ளார். இளம் சந்திரனுடன் சேர்ந்து இருப்பதால் இன்று உங்கள் பெற்றோரின் ஆசிர்வாதம் மற்றும் துணை கிடைக்கும். இன்று நீங்கள் சில மாற்றங்கள் செயலை செய்ய வாய்ப்பு உண்டு. இன்று சிலரின் உதவியால் நீண்ட காலமாக உங்களுக்கு வர வேண்டிய பணம் வர வாய்ப்பு உண்டு. இன்று இன்று பிள்ளைகளின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள். 


தனுசு ராசி பலன் 


தனுசு ராசியை சேர்ந்தவர்களுக்கு இன்று குருவின் பார்வை மற்றும், சனியின் அமைப்பு உங்களுக்கு சிரமங்களை தர வாய்ப்பு உண்டு.. வேலைகள் கடின உழைப்பு தேவைப்படும். உங்கள் பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும். சொத்து தொடர்பாக குடும்பத்தில் இருக்கும் தகராறுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்பதால், சூழலை அனுசரித்து செல்லவும். இன்று உங்கள் நிதி நிலை சற்று சங்கடத்தை தரக்கூடியதாக இருக்கும். வரும் நாட்களில் உங்களின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்தவும். இன்று உங்கள் குடும்பத்தினருடன் ஆலோசனை செய்து பெரிய முதலீடு செய்ய திட்டமிடுவீர்கள். 


மகர ராசி பலன் 


மகர ராசியை சேர்ந்தவர்களுக்கு இன்று புதன் மற்றும் ராகுவின் அமைப்பு உங்கள் மனதில் சக்தி மற்றும் மரியாதையை அதிகரிப்பார். இந்த குருவின் அமைப்பை உங்கள் செயல்பாடு, செல்வநிலையை மேம்படுத்துவர். இந்த குடும்பத்தில் உங்கள் புகழ் அதிகரிக்கும். எதிரிகளை எளிதாக முடிக்க முடியும்.இன்று உங்கள் மனதில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். செயல்பாடுகளில் வெற்றி, மகிமையை நல்ல மாற்றங்கள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகளில் நிறைவேறும். 


கும்ப ராசி பலன் 


கும்ப ராசியை சேர்ந்தவர்களுக்கு இன்று வேலையில் கூடுதல் பொறுப்புகள் இதற்கெல்லாம் நேரிடும். ஆன்மீக நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உங்கள் செல்வநிலை அதிகரிக்க கூடிய நாள். இன்று எந்த ஒரு செயலுக்காகவும் உங்கள் மனமில்லை நிதானமாக பராமரிப்பதும், இன்று உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடுகளை விலக்கி நிதானமாக செயல்படுவது அவசியம். இன்று நீங்கள் இதன் ஒரு ஆன்மீக நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். சிலர் புனித யாத்திரை செல்ல திட்டமிடுவார்கள். 


மீன ராசி பலன் 


மீன சேர்ந்தவர்களுக்கு இன்று வேலையில் கூடுதல் பொறுப்பு எதிர்கொள்ள வாய்ப்பு உண்டு. குறிப்பாக ஆன்மீக நடவடிக்கைகளில் அதிக ஈடுபாடு காட்டுகிறார்கள். வருமானத்தை அதிகரிக்க கூடிய நாள். இன்று அதிகப்படியான கோபத்தை எதிர்க்கவும். உங்கள் மனைவியுடன் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய நாள். இன்று புதிய சொத்து வாங்குவது அல்லது விற்பதன் மூலம் லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு. அதே சமயம் முடிவு விஷயங்களில் நிதானத்தை கடைபிடிக்கவும். வணிகத்தில் முதலீடுகளை, தயக்கமின்றி செய்யுங்கள்; அது எதிர்காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.



விஜய்யின் இனிஷியலை தூக்கி எறிந்த மகன்!

 


நடிகர் விஜய் மகன் ஜோசப் சஞ்சய் தற்போது சினிமா உலகில் இயக்குநராக தனது பயணத்தை தொடங்கியிருக்கிறார். அவர் இயக்க உள்ள படத்தின் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், சமீபத்தில் வெளிவந்த ஒரு சிறிய விஷயம் கூட சமூக வலைதளங்களில் பெரிய விவாதமாக மாறியுள்ளது. 'விஜய்' இனிஷியல் இல்லாமல் கையொப்பம் பொதுவாக தமிழ் சினிமாவில் பல நடிகர்களின் குழந்தைகள் தங்களது தந்தையின் பெயரின் முதலெழுத்தை பயன்படுத்துவது வழக்கம். 

 ஆனால் ஜேசன் சஞ்சய் தனது புதிய படத்திற்கான டைட்டில் கார்ட் மற்றும் கையொப்பங்களில் தந்தையின் பெயரை குறிக்கும் எழுத்தை பயன்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. அதற்கு பதிலாக அவர் "Jason Sanjay S" என்ற முறையில் கையொப்பமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதில் வரும் 'S' என்பது அவரது தாய் சங்கீதா (Sangeetha Sornalingam) பெயரை குறிக்கிறது என சமூக வலைதளங்களில் பலர் கூறி வருகின்றனர். குடும்ப சர்ச்சை நடுவில் பேசப்படும் விஷயம் கடந்த சில மாதங்களாக நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா குறித்து பல்வேறு வதந்திகளும் விவாதங்களும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில் ஜேசன் சஞ்சய் தனது தந்தையின் பெயரை பயன்படுத்தாமல் தாயின் பெயரை குறிப்பது போன்ற தகவல் வெளியாகியிருப்பது ரசிகர்கள் மத்தியில் மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால் விஜய்யின் பிள்ளைகள் இருவருமே அவரை விட்டு பிரிந்து அம்மாவுடன் மட்டும்தான் இருக்கிறார்கள். 

அம்மாவுக்கு தான் அவர்களுடைய சப்போர்ட் இருக்கிறது என்று தெரிகிறது என பலருக்கு கருத்து தெரிவித்து வருகிறார்கள். 

தனியாக தொடங்கிய சினிமா பயணம் சஞ்சய் தனது சினிமா பயணத்தை தந்தையின் ஆதரவை பெரிதாக பயன்படுத்தாமல் தொடங்க முயற்சி செய்கிறார் என்று கூறப்படுகிறது. சினிமா படிப்பை வெளிநாட்டில் முடித்த பிறகு அவர் இயக்குநராக உருவாக வேண்டும் என்ற நோக்கத்தில் தனியாகவே முயற்சி செய்து வருகிறார். சில காலமாக அவர் London நகரத்தில் வசித்து வந்ததாகவும், அங்கிருந்து படிப்பு மற்றும் சினிமா தொடர்பான பணிகளில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

லண்டனில் இருந்தாலும் சென்னை அல்லது பிற நகரங்களுக்கு சஞ்சய் பெரும்பாலும் தனியாகவே வந்து சென்று வருகிறார். 

குடும்பத்தின் பெரும் பிரபலத்தையும், தந்தையின் அரசியல் மற்றும் சினிமா பின்னணியையும் பயன்படுத்தாமல் தனது பாதையை தனியாக உருவாக்க வேண்டும் என்பதே அவரது நோக்கம் என்று சிலர் கூறுகின்றனர். இந்த காரணத்தாலேயே அவர் வெளிப்படையாக தனது தந்தையின் பெயரை பயன்படுத்தாமல் இருக்கிறார் என்ற கருத்தும் இணையத்தில் பரவி வருகிறது. 

முதல் படத்திற்கான எதிர்பார்ப்பு இப்போது ஜேசன் சஞ்சய் இயக்க உள்ள முதல் படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே ஆர்வம் அதிகமாக உள்ளது. தந்தை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பதால், அவரது மகன் இயக்குநராக வருவது எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. இந்த நிலையில் 'Jason Sanjay S' என்ற கையொப்பம் வெளியான தகவல், அவரது குடும்ப பின்னணி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய விவாதங்களையும் மீண்டும் சமூக வலைதளங்களில் கிளப்பியுள்ளது. இதனால் நடிகர் விஜயின் குடும்பத்தைச் சுற்றி ஏற்கனவே பேசப்பட்டு வந்த விஷயங்களுடன் சேர்ந்து, ஜேசன் சஞ்சயின் இந்த முடிவும் தற்போது புதிய பேசுபொருளாக மாறியுள்ளது.



விஜய்,ரஜினி தாண்டி - இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் 'தமிழ் நடிகர்' யார்?

 


இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் இரண்டே பேர் தான் என்பது நமக்கு தெரிந்த விடயம். அதில் ஒன்று விஜய் மற்றொன்று ரஜினி.

இவர்கள் 200 கோடி ரூபாவை சம்பளமாக பெறுகிறார்கள். ஆனால் இவர்கள் சம்பளத்தையும் தாண்டி இன்னுமொரு நடிகரும் அதிக சம்பளம் வாங்குகிறார் என்பது பலருக்கும் தெரியாது.

இவர்கள் 200 கோடி என்றால் அவர் இவர்களை விட அதிகம் என்னும் போது சிந்தித்து பாருங்கள் அது எவ்வளவு அதிகமாக இருக்கும் என்று. இந்த நடிகர் நடிகர் ஒரு நாள் கால்ஷீட்டிற்கு மட்டும் ரூ. 15 கோடி வரை ஊதியம் பெற்றிருக்கிறார்.

அந்த நடிகர் வேறு யாரும் இல்லை கமல்ஹாசன் தான். இவர் நடித்த கல்கி திரைப்படம் 1000 கோடி வசூலை தாண்டியது. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய யூகி சேது அவர் ஒரு நாளைய்க்கு சம்பளமாக ஒரு மில்லியன் டாலர் வாங்கிறார் என கூறி இருந்தார்.

நாட்கள் கால்ஷீட்டிற்கு ரூ.150 கோடி என்றால் ஒரு நாளைக்கு 1 மில்லியன் டாலர் தான் விளக்கமளித்ததாகவும் அப்போது இடைமறித்த கமல் பட தயாரிப்பாளர் 20 நாட்கள் அல்ல 10 நாட்கள் தான் கால்ஷீட் என்று கூறியதாகவும் யூகி சேது தெரிவித்தார்.

இதன்படி பார்த்தால் கமல் ஒரு நாளைய்க்கு 2 மில்லியன் டாலர் பெறுகிறாராம். அப்படி பார்த்தால் ஒரு நாளைய்க்கு இவரது சம்பளம் 15 கோடி என கூறப்படுகின்றது.


பெர்லினில் புதிய தீர்மானம்

 


ஜெர்மனியின் பெர்லின் நகரில் பெண்கள் இனிமேல் பொதுமக்கள் பயன்படுத்தும் நீச்சல் குளங்களில் ஆண்களைப் போலமேல் உடை இல்லாமல் (topless) நீந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

பெண்கள் மேல் உடை அணிய வேண்டும் என்ற விதிமுறை பாலின பாகுபாடு எனக் கூறி முன்வைக்கப்பட்ட புகார்களைத் தொடர்ந்து இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாலின சமத்துவக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஆண்கள் மார்பைப் மறைக்காமல் நீந்த அனுமதிக்கப்பட்டால், பெண்களுக்கும் அதே உரிமை இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டின் அடிப்படையில் பெர்லின் நகரின் அனைத்து பொதுநீச்சல் குளங்களிலும் இந்த புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் பெண்கள்மீது எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்துவதற்காக அல்ல, அவர்களின் விருப்பத்தை மதிப்பதற்காக மட்டுமே என்று அதிகாரிகள் கூறுகின்றனர். 

பெண்கள் விரும்பினால் மேல் உடை அணிந்தும், விரும்பாவிட்டால் அணியாமலும் நீந்தலாம். இதன் மூலம் நீண்ட காலமாக இருந்த இரட்டை தரநிலை நீக்கப்பட்டுள்ளது.

மீனத்தில் உச்சம் பெற்ற சுக்கிரன் : சுக்கிர திசையால் செல்வத்தை குவிக்கப்போகும் டாப் 3 ராசிகள்!

 


சுக்கிர பெயர்ச்சியினால் அதிர்ஷ்டத்தின் உச்சத்திற்கு செல்லும் 5 ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

சுக்கிர பெயர்ச்சி

ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன், அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு இவற்றிற்கு காரணகாரராகவும் இருக்கின்றார்.

ரிஷப மற்றும் துலாம் ராசியின் அதிபதியாக இருக்கும் சுக்கிரன் மாதத்திற்கு ஒருமுறை தனது நிலையை மாற்றிக் கொள்கின்றார். ஆனால் மிகவும் அரிதாக ஒரு மாதத்தில் இரண்டுமுறை ராசியினை மாற்றுகின்றார்.

ஒரு நபரின் ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருந்தால், செழிப்பான வாழ்க்கையை வாழ்வாராம். கடந்த 3ம் தேதி குரு பகவான் மீன ராசிக்கு நுழைந்து, மாளவ்ய ராஜயோகம் உருவாகியுள்ள நிலையில், இந்த ராசி சுக்கிரன் உச்சம் பெறும் ராசியாக இருக்கின்றது.

மீன ராசியில் சுக்கிரன் உச்சப்பெற்றிருப்பதால், இதன் தாக்கம் 12 ராசியினருக்கும் காணப்படும். ஆனால் இதில் 5 ராசியினர் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அவர்கள் யார் யார் என இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

மீனம்

மீன ராசியில் முதலாம் வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ள நிலையில், ஏராளமான நன்மைகளை இந்த ராசியினர் பெறுகின்றனர். நீண்ட காலம் நிலுவையில் இந்த வேலைகளும் வெற்றியடையும். திருமணமாகாதவர்கள் நல்லதொரு வரன் கிடைக்கும். வீடு வாகனம் வாங்கும் நிலையும், ஆடம்பரமான பொருட்களை வாங்கும் நிலையும் ஏற்படும்.

கன்னி

கன்னி ராசியின் 7 ஆவது வீட்டில் சுக்கிரன் உச்சமடைவதால்,இவர்களின் பொருளாதார நிலையில் அசுர வளர்ச்சி உண்டாகும். புதிய தொழில் தொடங்குவதற்கான யோம் கூடிவரும்.

சுக்கிரனின் ஆசியால் இதுவரை காலமும் திருமண வாழ்க்கையில் இருந்துவந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபரிகளுக்கு அதிக லாபம் உண்டாகும். வெளிநாட்டு வேலை கிடைப்பதற்கு அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.

பல வழிகளிலும் வருமானம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். குறிப்பாக பரம்பரை சொத்துக்கள் கைக்கு வரக்கூடிய பிராப்தம் உருவாகும்.

மிதுனம்

மிதுன ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் இடம்பெயர்ந்துள்ளதால், இந்த ராசியினரின் வாழ்வில் எதிர்பாராத பல நல்ல திருப்பங்கள் உருவாகப்போகின்றது. தொழில் விடயத்தில் சாதக பலன்கள் கிடைக்கும்.

எதிர்பாராத வகையில் வரும் பண வரவால் மகிழ்ச்சி உண்டாகும் இவர்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குறிப்பாக சுக்கிரன் ஆசியால் ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான நேரத்ததை செலவிடுவதற்கான வாய்ப்புகள் அமையும். கணவன் மனைவி உறவில் இதுவரையில் இருந்து வந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

நடுவீட்டில் பெண்ணின் புடவையை அவிழ்ந்து அரங்கேறிய கொடூரம்! கணவரிடம் தொகுப்பாளர் கேட்ட கேள்வி










 

தமிழா தமிழா நிகழ்ச்சியில் விவாகரத்து மனநிலை வரை சென்று மீண்டும் சேர்ந்து வாழும் தம்பதிகள் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.

தமிழா தமிழா

தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.

இந்த வாரத்தில் விவாகரத்து மனநிலை வரை சென்று மீண்டும் சேர்ந்து வாழும் தம்பதிகள் என்ற தலைப்பில் பல உண்மையை அரங்கத்தில் கூறியுள்ளனர்.

இதில் பெண் ஒருவர் ஜாதி மாறி திருமணம் செய்துள்ளதால் தனது கணவர் வீட்டில் அவர்கள் செல்லும் கோவிலுக்கு கூட தன்னை அழைத்து செல்வதில்லை என்று ஆதங்கத்தை கொட்டியுள்ளார்.

மற்றொரு பெண் கூறிய விடயம் மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. அதாவது பெண் கட்டியிருந்த புடவை பிடிக்காததால் அவரது அண்ணி நடுவீட்டில் வைத்து புடவையை கழற்றியுள்ளார். இதனை கணவரும் இதுநாள் வரையிலும் கேட்கவில்லையாம்.

இதனைக் கேட்ட தொகுப்பாளர் கோபத்தில் உச்சத்தில் குறித்த நபரை சரமாரியாக கேள்வி எழுப்பி சத்தம் போட்டுள்ளார்..






மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகிறது ‘ஆரண்ய காண்டம்’ திரைப்படம்

 


தமிழ் திரையுலகில் ஒரு மிக முக்கியமான திரைப்படமாக போற்றப்படும் ‘ஆரண்ய காண்டம்’, 16 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில், ஜாக்கி ஷெராஃப், ரவி கிருஷ்ணா, சம்பத் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

0

ஒரே நாளில் நடக்கும் பரபரப்பான கேங்க்ஸ்டர் மோதல்களை மையமாக கொண்ட இத்திரைப்படம், தேசிய விருதுகளையும் வென்று சாதனை படைத்தது.


இந்நிலையில், ‘ஆரண்ய காண்டம்’ திரைப்படம் வரும் மார்ச் 13ஆம் தேதி மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவுப்பு வெளியாகி உள்ளது.

சர்ச்சைகளுக்கு மத்தியில் த்ரிஷா போட்ட புதிய பதிவு!

 


நடிகை த்ரிஷா மற்றும் விஜய் ஜோடியாக ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டது பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியிருக்கும் நிலையில் தனது இன்ஸ்ட்டா கிராம் பக்கத்தில் த்ரிஷா வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.

விஜய் -த்ரிஷா சர்ச்சை

நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக குற்றம் சாட்டி நடிகர் மற்றும் த.வெ.க தலைவர் விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரியுள்ளார்.

அவர் குறித்த நடிகையுடன் வெளிநாட்டுக்கு செல்வது, நிகழ்ச்சிக்கு செல்வது என வெளியில் செல்லும்போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது குடும்பத்திற்கு பெரிய அவமானத்தையும் தனக்கு மனஅழுத்தத்தையும் ஏற்படுத்தியது என சங்கீதா மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

நிலையில், விஜய் ரசிகர்கள் இதுவரையில் விஜய்கு ஆதரவாக பேசி சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.

ஆனால் தயாரிப்பாளர் ஏஜிஎஸ் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு விஜய் நடிகை த்ரிஷா உடன் ஒரே நிறத்தில் ஆடை அணிந்து ஒரே காரில் வந்தது மாத்திரமன்றி விஜயுடன் ஒன்றாக நின்று புகைப்படமும் எடுத்துக்கொண்டதால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. 

குறித்த விடயம் சங்கீதா அளித்த புகாரை நிரூபிப்பது போல இருப்பதாக நெட்டிசன்கள் கடுமையாக தாக்கி பதிவிட்டு வருகின்றனர்.

புதிய பதிவு

இந்நிலையில், செம எதையும் காதில் வாங்காதது போல், த்ரிஷா ஒரு பதிவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அதில் விஜயுடன் வந்த அதே ஆடையுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு "Thank you for always being my go-to people" என குறிப்பிட்டு தன்னை ஆதரிப்பவர்களுக்கு நன்றி கூறி உள்ளார். குறித்த பதிவு இணையத்தில் படுவைரலாகியுள்ளது.

,மார்ச் 6 இற்கு பிறகு சனியால் வரும் கண்டம்

 


2026 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடந்தது,  இதனால் பாதிப்புக்குள்ளாகும் ராசிகள் என்ன பரிகாரம் செய்யலாம் என்பதையும் பதிவில் பார்க்கலாம்.

சரிப்பெயர்ச்சி 2026

ஜோதிடத்தில் சனி பகவான் முக்கிய இடத்தில் இருக்கிறார். எல்லா கிரகங்களிலும் மிக மெதுவாக தன்னுடைய பயணத்தை நகர்த்தி செல்பவர் சனி பகவான் தான்.

இவர் நீதியின் கடவுளாக ஜோதிடத்தில் பார்க்கப்படுகின்றர். இதனால் இவர் கர்ம காரகன் என்றும் நீதிமான் என்றும் அழைக்கப்படுகிறார்.

இந்த நிலையில் பஞ்சாங்கத்தின்படி சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு மார்ச் 6 அதிகாலை 8:31 மணியளவில் இடப்பெயர்ச்சி இடம்பெற்றது.

சனியின் இந்த பெயர்ச்சி சில ராசிகளுக்கு துன்பத்தை கொடுக்கும். அந்த ராசிகள் யார் என்பதை பதிவில் பார்ப்பதோடு அவர்கள் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதையும் பார்க்கலாம்.

மீனம்

• மீன ராசியின் முதல் வீட்டில் சனி பகவான் பெயர்ச்சியடைகிறார். இதனால் உங்களுக்கு ஜென்ம சனி தொடங்குகிறது. 

• இந்த காலத்தில் உடல் நலம் பாதிக்கப்படும் அதில் கவனம் தேவை. 

• தேவையற்ற அலைச்சல்கள், மன அழுத்தம், மன உளைச்சல், பதற்றம், வேலைப் பளு போன்றவை அதிகரிக்கலாம்.

• குடும்ப உறுப்பினர்களிடையே பிரச்சனைகள் வெடிக்கும். 

• பேசும் போது பேச்சில் நிதானம் வேண்டும். 

மேஷம்

• மேஷ ராசிக்கு ஏழரை சனியின் முதல் கட்டமான விரய சனி தொடங்குகிறது.

• பணத்தை சிக்கனமாக செலவு செய்யுங்கள். 

 இன்னுமொருவரிடம் பணம் கொடுக்கும் போது எச்சரிக்கையாக இருப்பது அவசியம். 

 நிதி இழப்புகள், பொருளாதார நெருக்கடிகளை சந்திக்க நேரிடலாம்.

 உங்களுக்கு இந்த கால கட்டத்தில் மன அழுத்தம் அதிகமாகும். 

 வேலையில் தடை, எடுக்கும் காரியங்களில் பின்னடைவு, முயற்சிகளில் தோல்வி வரும். 

கும்பம்

கும்ப ராசிக்கு ஏழரை சனியின் கடைசி கட்டமான பாத சனி தொடங்குகிறது.

 உங்களுக்கு கால்களில் நோய் அல்லது அடி விழும். 

குடும்பத்தில் சிறிய பிரச்சனை கூட பெரிதாகலாம். 

 இந்த காலகட்டத்தில் நேர்மையாகவும், உண்மையாகவும் இருந்தால் சனி பகவானின் முழுமையான ஆசி முழுமையாக கிடைக்கும். 

 ஆரோக்கியததில் சிறப்பு கவனம் செலுத்துவது அவசியம். 



• சிம்ம ராசிக்கு தற்போது அஷ்டம சனியின் காலம் தொடங்குகிறது.


• எந்த விடயத்திலும் தடைகள் தாமதங்கள் வரும். 


• வாகனப்பயணங்களின் போது நீங்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்


குடும்பத்துக்காக உயிரையும் கொடுக்க துணியும் டாப் 3 ராசிகள்... இவங்க கிடைப்பதே வரம் |



பொதுவாகவே ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, விசேட ஆளுமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என்று ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே தங்களின் குடும்பத்தின் மீதும் உறவுகள் விடயத்திலும் அதீத அக்களை கொண்டவர்களாக இருப்பார்கள்.

அப்படி குடும்பத்தை பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்லும் குணம் கொண்ட உன்னத ஆன்மாக்களாக அறியப்படும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே போர் குணம் கொண்டவர்களாகவும், தங்களின் குடும்பத்துக்காகவே வாழும் தன்மையுடையவர்களாகவும் இருப்பார்கள்.

ஆனால் இவர்கள் தங்களின் பாசத்தை வார்த்தைகளால் நிரூபிக்க ஒருபோதும் முயற்ச்சிக்கவே மாட்டார்கள். அதுவே தங்களின் அன்புக்குரியவர்களுக்கு ஒரு ஆபத்து என்றால் உயிரை கொடுக்க தயாராக இருப்பார்கள். 

இவர்பகள் குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்காகவும், தேவைகளை நிறைவேற்றுவதற்காகவும் தங்களின் மகிழ்சியை கூட தியாகம் செய்யும் குணத்தை நிச்சயம் கொண்டிருப்பார்கள். இந்த ராசியினர் கூட இருந்தால் இவர்களின் துணையை மட்டுமல்ல நண்பர்களை கூட யாராலும் நெருங்கவே முடியாது.

கடகம்

அன்பு மற்றும் ஆடம்பரத்தின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படும் கடக ராசிக்காரர்கள் இயல்பாகவே பாசத்துக்கும் தாய்மை உணர்வுக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்களின் அன்புக்குரியவர்களுக்காக எதையும் செய்ய தயாராக இருப்பார்கள். 

அக்கறையான இயல்பும் எளிதில் உணர்ச்சிவசப்படும் தன்மையும் கொண்ட இவர்கள் ஒருவர் மீது பாசம் வைத்துவிட்டார்கள் என்றால், இவர்களுக்காக யாரையும் எதிர்த்து நிற்க தயங்க மாட்டார்கள்.

இவ்வளவு கடிகமான சூழ்நிலையில், உறவுகளை விட்டுக்கொடுக்காத உன்னத குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும். இவர்களை பொருத்தமட்டில் குடும்பம் தான் வாழ்வில் மிகவும் முக்கியம். 

விருச்சிகம்

விருச்சிக ராசியினர் இயல்பிலேயே தங்களின் மர்மமான குணத்துக்கும் ரகசிய தன்மைக்கும் பெயர் பெற்றவர்களாகவும், தங்களின் தனிப்பட்ட விடயங்களை யாரிடடும் பகிராதவர்களாகவும் இருப்பார்கள்.

ஆனால் இவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களைப் பாதுகாக்கவும், இவர்களுக்காக போராடவும் ஒருபோதும் தயங்கவே மாட்டார்கள். இவர்களை பொருத்தவரையில் உண்மையான அன்பு என்பது ஆபத்தில் துணை நிற்பது தான். 


இந்த ராசியினர் ஆணாக இருந்தாலும் சரி , பெண்ணாக இருந்தாலும் சரி தங்களின் குடும்பத்துக்காக எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் உழைக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் குடும்பத்தவர்களை யார் சீண்டினாலும் அவர்களுக்கு வாழும் போதே நரகத்தை காட்டும் அளவுக்கு பழிதீர்கும் குணம் இவர்களிம் இருக்கும்.


சர்ச்சைகளுக்கு மத்தியில் த்ரிஷா போட்ட புதிய பதிவு!

 

நடிகை த்ரிஷா மற்றும் விஜய் ஜோடியாக ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டது பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியிருக்கும் நிலையில் தனது இன்ஸ்ட்டா கிராம் பக்கத்தில் த்ரிஷா வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.

விஜய் -த்ரிஷா சர்ச்சை

நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக குற்றம் சாட்டி நடிகர் மற்றும் த.வெ.க தலைவர் விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரியுள்ளார்.

அவர் குறித்த நடிகையுடன்  வெளிநாட்டுக்கு செல்வது, நிகழ்ச்சிக்கு செல்வது என வெளியில் செல்லும்போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது குடும்பத்திற்கு பெரிய அவமானத்தையும் தனக்கு மனஅழுத்தத்தையும் ஏற்படுத்தியது என சங்கீதா மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

ராஜயோகம் இவர்களுக்கா

 



சனி அஸ்தமனம் இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ள நிலையில் அதிர்ஷ்டத்தினைப் பெறும் 4 ராசிகளைக் குறித்து தெறிந்து கொள்வோம்.


சனியின் அஸ்தமனம்


ஜோதிடத்தில் சனி பகவான் முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகின்றது. இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை பெயர்ச்சி அடையும் சனி பகவான், நேற்று கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார்.


இதனைத் தொடர்ந்து மார்ச் 13ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 7.13 மணிக்கு மீன ராசியில் அஸ்தமனமாகின்றார். இதன்படி சுமார் 40 நாட்கள் அஸ்தமன நிலையில் சனிபகவான் இருக்கின்றார்.


பின்பு ஏப்ரல் 22ம் தேதி புதன்கிழமை அதிகாலை 4.40 மணிக்கும் மீண்டும் மீன ராசியில் உதயமாகின்றார். சனிபகவானின் அஸ்தமனம் பல ராசிகளுக்கு கடுமையான நிலை ஓரளவிற்கு குறைகின்றது.


இத்தருணத்தில் சில ராசிகள் எதிர்மறையான தாக்கத்தினை பெறுகின்றனர். ஆனால் ஒரு சில ராசியினர் இந்த 40 நாட்கள் நேர்மறையாக விளைவுகளால் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர்.


மேஷம்



சனி பகவான் மேஷ ராசியில் 12வது வீட்டில் அஸ்தமனமாவதால், வீண் செலவுகள் குறைந்து நிதி நிலைமை மேம்படுகின்றது.


உடல்நல பிரச்சனைகள் குறைந்து ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் தேவையற்ற வாக்குவாதத்தினை ஈடுபட வேண்டாம்.


விருச்சிகம்


சனி பகவான் விருச்சிக ராசியில் 5ம் வீட்டில் அஸ்தமனமாகும் நிலையில், தன்னம்பிக்கை அதிகரித்து, தடையான வேலைகள் மீண்டும் தொடங்குகின்றது.


வேலை மற்றும் தொழில் இவற்றில் முன்னேற்றம் இருப்பதுடன், பதவி உயர்வு, புதிய பொறுப்பு கிடைக்கவும் வாய்ப்புள்ளது. கடன் பிரச்சனை தீர்ந்து, செலவுகள் குறைகின்றது. தொழிலில் புதிய மற்றும் பெரிய ஒப்பந்தங்களும் கிடைக்கும்.


கும்பம்



கும்ப ராசியில் சனி பகவான் 2வது வீட்டில் அஸ்தமனமாவதால், இக்காலக்கட்டத்தில் புதிய தொழில் தொடங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளது.


சொத்து விடயத்தில் சாதகமான தீர்ப்பினை பெறுவதுடன், உடன் பிறந்தவர்களின் ஆதரவும் கிடைக்கின்றது. செலவு குறைந்து, கடின உழைப்பிற்கு ஏற்ப வெற்றியும், பாராட்டும் கிடைக்கும். அதுமட்டுமின்றி புதிய வருமானத்திற்கும் வழி கிடைக்கும்.





ஒரே நிற ஆடையில் த்ரிஷாவுடன் வந்த விஜய்

 

நடிகர் விஜய்யின் மனைவி விவாகரத்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது த்ரிஷாவுடன் ஒரே நிற ஆடையில் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வந்த நடிகர் விஜய், தற்போது தனது சினிமா நடிப்பினை விட்டுவிட்டு அரசியலில் கவனம் செலுத்தி வருகின்றார்.

இவரது தவெக கட்சிக்கு மக்களின் ஆதரவு அதிகமாக இருந்து வரும் நிலையில், இவருக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்போது கட்சி மாநாட்டில் வந்து மக்களிடம் பேசிவரும் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை பெரும் சர்ச்சையில் செல்கின்றது.

இவர் திருமணத்திற்கு மீறிய உறவில் வேறொரு பெண்ணுடன் இருப்பதாக மனைவி சங்கீதா விவாகரத்து பதிவு செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது விஜய் த்ரிஷாவுடன் தான் இருக்கின்றார் என்று அரசியல் பிரபலங்கள் முதல் சமூக வலைத்தளங்கள் வரை பேசப்பட்டது தற்போது உண்மையாகியுள்ளது.

ஆம் பிரபல தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷ் மகனின் திருமண நிகழ்ச்சிக்கு விஜய் வருகை தந்துள்ளார். இதில் ஹைலைட் என்னவெனில் அவர் நடிகை த்ரிஷாவையும் தன்னுடன் அழைத்து வந்துள்ளார்.

மேலும் இருவரும் ஒரே நிறத்தில் ஆடையணிந்து வந்து குறித்த திருமண நிகழ்வில் கலந்து கொண்ட காணொளி இணையத்தில் பயங்கர ட்ரெண்டாகி வருகின்றது.

ஏனெனில் இதே போன்று தான் ஜெயம் ரவி மற்றும் கெனிஷா இருவரையும் இணைத்து சமூகவலைத்தளங்களில் பேசிக்கொண்டிருக்கையில், ஒரே நிறத்தில் ஆடையணிந்து திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு தங்களது பழக்கத்தினை உறுதி படுத்தியதுடன், தற்போது திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றனர்.

தாய் கிழவி படம்: பங்காரு அடிகளார் ஆன்மீகச் சர்ச்சையும்... அதிரடி தவெக அரசியல் விசில்களும்!

சினிமாவில் எதார்த்தமான கிராமத்து கதைகளுக்கும், நையாண்டி கலந்த நகைச்சுவைகளுக்கும் எப்போதும் தனி மவுசு உண்டு.

அந்த வரிசையில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், ராதிகா சரத்குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. 

குறிப்பாக, படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு முக்கியக் காட்சிகள்-ஒன்று ஆன்மீக ரீதியாகவும், மற்றொன்று அரசியல் ரீதியாகவும்-ரசிகர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.

பக்தர்களின் குமுறலும் சர்ச்சையும்

திரைப்படங்களில் மதக் குறியீடுகளையோ அல்லது ஆன்மீகப் பெரியவர்களையோ கேலி செய்வது என்பது சமீபகாலமாக பெரும் விவாதங்களை உருவாக்கி வருகிறது. 'தாய் கிழவி' படத்திலும் அதுபோன்ற ஒரு சூழல் உருவாகியுள்ளது.

படத்தில் ஒரு குடிகாரக் கதாபாத்திரம், கருப்புசாமி கோவிலுக்குத் தீபம் ஏற்றி வருபவராகக் காட்டப்படுகிறார். ஒரு கட்டத்தில் அவர் தன்னை ஒரு சாமியாராக மாற்றிக்கொண்டு, தனக்குத் தானே 'கங்காரு அடிகளார்' என்று பெயரிட்டுக்கொள்வதாகக் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பெயர், மேல்மருவத்தூர் ஆன்மீக குரு மறைந்த பங்காரு அடிகளார் அவர்களின் பெயரைச் சற்று மாற்றியது போல இருப்பதால், அவரது பக்தர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஒரு குடிகாரக் கதாபாத்திரம் தன்னை மாற்றிக்கொள்ளும்போது இத்தகைய பெயரைப் பயன்படுத்துவது உள்நோக்கம் கொண்டது" என்பது பக்தர்களின் வாதம். எத்தனையோ பெயர்கள் இருக்கும்போது, ஒரு குறிப்பிட்ட ஆன்மீகத் தலைவரை நினைவுபடுத்தும் வகையில் பெயரிடுவது தேவையற்றது என்றும், இது பலருடைய மனதைப் புண்படுத்தும் செயல் என்றும் சமூக வலைதளங்களில் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.

தியேட்டரை அதிரவைத்த 'தவெக' வசனம்

மறுபுறம், படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு அரசியல் நையாண்டி காட்சி, இளைஞர்களிடையே பயங்கரமான வரவேற்பைப் பெற்றுள்ளது. ராதிகாவின் மகன்களை அறிமுகப்படுத்தும் காட்சி அது.

அதில் ஒவ்வொரு மகனையும் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியோடு ஒப்பிட்டு அறிமுகப்படுத்துகிறார்கள்:

"இவர் திமுக..."


"இவர் அதிமுக..."


"இவர் பாஜக..."


இப்படிப் பிரதானக் கட்சிகளின் பெயர்களை வரிசையாகக் கூறிக்கொண்டே வரும்போது, கடைசியாக ஒரு கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தி, "இவர் தவெக (தமிழக வெற்றிக் கழகம்)" என்று சொன்னவுடன் தியேட்டர்களில் விசில் சத்தம் காதைப் பிளக்கிறது.

குறிப்பாக, நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவரது கட்சியின் பெயரான 'தவெக' என்பதைப் படத்தில் பயன்படுத்தியிருப்பது விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்றைய இளைஞர்கள் மத்தியில் நிலவும் அரசியல் ஆர்வத்தையும், விஜய் மீதான ரசிக மனோபாவத்தையும் அந்த ஒரு நிமிட விசில் சத்தம் உறுதிப்படுத்துகிறது. 

தமிழகத்தின் இரு பெரும் திராவிடக் கட்சிகளை விட அதிகமாக, ஒரு புதிய கட்சிக்குத் திரையரங்கில் கிடைக்கும் இந்த வரவேற்பு, இளைஞர்கள் மத்தியில் விஜய்க்கு உள்ள செல்வாக்கை காட்டுகிறதா அல்லது ரசிக மனோபாவத்திற்காக விசில் அடித்து என்ஜாய் செய்ய மட்டுமே பயன்படுத்தப்படுகிறதா என்பதை தேர்தல் ரிசல்ட் வரும்போது பார்க்க முடியும்.

படைப்புச் சுதந்திரமா? எல்லை மீறலா?

தாய் கிழவி' திரைப்படம் ஒரே நேரத்தில் இரண்டு துருவங்களைத் தொட்டுள்ளது. ஆன்மீக உணர்வுகளைக் கேலி செய்வதாக ஒரு தரப்பினர் கொதிப்பதும், அதே சமயம் சமகால அரசியல் மாற்றங்களைப் பிரதிபலிப்பதாக இளைஞர்கள் கொண்டாடுவதும் சமகாலச் சினிமாவின் போக்கைக் காட்டுகிறது.

சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது சமூகத்தின் கண்ணாடியாகவும் இருக்கிறது. ஆனால், அந்தக் கண்ணாடியில் விழும் பிம்பங்கள் யாருடைய மனதையும் காயப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் கருத்தாக உள்ளது. 'கங்காரு அடிகளார்' போன்ற குறியீடுகள் தவிர்த்திருக்கப்பட வேண்டியவை என்றாலும், 'தவெக' போன்ற அரசியல் வசனங்கள் மக்களின் நாடித்துடிப்பை உணர்த்தும் சுவாரசியமான பதிவு என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

முடிவாக சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் வந்துள்ள இந்தப் படம், தனது கதையினால் மட்டுமல்லாமல், இதுபோன்ற சர்ச்சைக்குரிய மற்றும் சுவாரசியமான காட்சிகளினாலும் மக்களிடையே பேசுபொருளாகியுள்ளது. ஆன்மீக பக்தர்களின் ஆதங்கம் தணியுமா அல்லது இந்த விவாதம் இன்னும் நீடிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதனிடையே 5வது நாள் பாக்ஸ் ஆபீசில் தாய் கிழவி 19 கோடியே 30 லட்சம் ரூபாய் ஈட்டி சாதித்துள்ளது. படத்தின் பட்ஜெட்டான 10 கோடியை ஒப்பிட்டால் இது டபுள் மடங்கு வசூல்.