நடிகை சாய் பல்லவிக்கு இவருடன் திருமணமா? இந்த திகதியா?

 


திறமையான தென்னிந்திய நடிகைகளில் ஒருவர் சாய் பல்லவி. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அமரன் திரைப்படம் ரூ. 340 கோடிக்கும் மேல் வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஆனது. இதை தொடர்ந்து D55 மற்றும் விஜய் சேதுபதி - மணி ரத்னம் படம் கைவசம் உள்ளது. 

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சாய் பல்லவி தற்போது பாலிவுட் சென்றுள்ளார். இவர் நடிப்பில் வெளிவரவிருக்கும் முதல் இந்தி திரைப்படம் Ek din. இப்படத்தில் அமீர் கான் மகனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். 

இதை தொடர்ந்து ராமாயணா பார்ட் 1 மற்றும் பார்ட் 2 திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் சீதா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சமீபத்தில் நடிகை சாய் பல்லவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார். அந்த நிகழ்ச்சியில், "எப்போது திருமணம்?" என கேள்வி கேட்கப்பட்டது. "இப்போதைக்கு திருமணம் இல்லை, கண்டிப்பாக இல்லை. நான் சிங்கிளாகதான் இருக்கிறேன்" என கூறியுள்ளார். திருமணம் குறித்து சாய் பல்லவி பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் த்ரிஷா என்னென்ன gift கொடுத்தார் தொரியுமா?

 

நடிகர் விஜய் அவரது மனைவி சங்கீதாவிற்கு முதன் முதலில் என்ன பரிசு கொடுத்தார் தெரியுமா? இதை அவர் ஒரு பேட்டியில் நெகிழ்ச்சியுடன் கூறி இருப்பார். 

விஜய் மற்றும் சங்கீதா தம்பதி இருவரும் மிகவும் சிறந்த ஜோடி என்று நினைத்துக்கொண்டிருக்கும் சமயத்தில் இவர்களின் விவாகரத்து செய்தி அதிர்ச்சியை கொடுத்தது.

இருந்தும் இவர்கள் இருவரும் தங்களுக்குள் இருக்கும் அன்யோன்னியம் பற்றி பேசிய பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சங்கீதாவிற்கும் விஜய்க்கும் 1999ல் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா என இரு பிள்ளைகள் இருக்கின்றனர்.

விஜய் மனைவி சங்கீதா விஜய்க்கு வேறு ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாகவும், கடந்த சில ஆண்டுகளாகவே தானும் விஜய்யும் உணர்ச்சி ரீதியாக பிரிந்து வாழ்வதாகவும் கூறி மனு தாக்கல் செய்திருந்தார்.


இப்படி இருக்க விஜய் மற்றும் சங்கீதாவின் பேட்டி தற்போது வைரலாகி வருகின்றது. 


சங்கீதா, சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய்யுடன் சேர்ந்து வாழ்ந்த போது ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் விஜய் பற்றி சில விடயங்கள் பகிர்ந்துள்ளார். 


அதாவது சங்கீதாவிற்கு விஜய் திருமணத்திற்கு முன்னர் ஒரு வைர மோதிரம் வாங்கி கொடுத்ததாக கூறினார். இந்த பரிசை விஜய் தனக்கு நிச்சயதார்த்ததிற்கு முன்னர் கொடுத்ததாக சங்கீதா கூறி இருக்கிறார். 


அதிலும் எந்த முக்கியமான நிகழ்வு வந்தாலும் விஜய் தனக்கு சர்ப்ரைஸ் செய்வார் என்றும், தானும் பதிலுக்கு சர்ப்ரைஸ் செய்வேன் என்றும் கூறி இருக்கிறார்.

இப்படி பாசமாக இருந்த தம்பதி பிரிந்த விடயம் கவலை தருகிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

திருமணத்திற்கு முதல் விஜையின் கள்ளகாதல்

 


நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடி இருக்கும் நிலையில், அவர் தளபதி பற்றி பேசிய பழைய பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது. 


தமிழ் சினிமாவின் மிகவும் அன்பான தம்பதியினர் என்று ஒருகாலத்தில் போற்றப்பட்ட விஜய் - சங்கீதா உறவு இப்போது நீதிமன்ற படிகளை தொட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகால திருமண வாழ்க்கை இப்படி ஒரு திருப்புமுனையை சந்திக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. சங்கீதா தாக்கல் செய்துள்ள விவாகரத்து மனுவில் தன் கணவருக்கும் மற்றொரு நடிகைக்கும் இடையே திருமண உறவை மீறிய நெருக்கம் இருப்பதாக கூறியிருப்பதாக தெரிய வருகிறது. மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் பிரிந்து வாழ்வதாக குறிப்பிட்டிருந்தார். 


இந்த வழக்கு ஏப்ரல் 20 அன்று விசாரணைக்கு வரவுள்ளது சமீபத்தில் ஒரு திருமண விழாவில் விஜயும் திரிஷாவும் ஒரே மாதிரியான உடையில் ஜோடியாக வந்தது இணையத்தில் பரபரப்பை கிளப்பியது. இருப்பினும் இதுவரை இரு தரப்பிலும் இருந்து எந்த உறுதியான தகவலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக வெற்றிக் கழகம் வழியாக அரசியல் அரங்கில் காலடி எடுத்துவைக்க தயாராகும் விஜய்க்கு இந்த தனிப்பட்ட விவகாரம் ஒரு கடினமான சவாலாக மாறியுள்ளது. 


வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, இந்த சர்ச்சை அவரது அரசியல் பயணத்தில் தடையாக மாறுமா என்ற கேள்வி கட்சி வட்டாரங்களிலேயே எழுந்துள்ளது என்று சொல்லப்படுகிறது. சங்கீதா வாழ்நாள் ஜீவனாம்சம் கோரியுள்ளதாக வெளிவரும் தகவல்கள், இந்த வழக்கு எளிதில் முடிவுக்கு வராது என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்த வழக்கு நீண்ட காலம் நீடிக்கும் என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த சூழலில் சங்கீதா பழைய பேட்டி ஒன்று இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது. 


நிச்சயதார்த்தத்திற்கு முன்பே விஜய் தனக்கு வைர மோதிரம் கொடுத்து ஆச்சரியப்படுத்தியதாகவும், திருமணத்திற்கு முன்பும் பின்பும் இருவரும் ஒருவருக்கொருவர் சர்ப்ரைஸ் கொடுத்துக்கொண்டதாகவும் சங்கீதா கூறியிருந்தார். அந்த இனிமையான நினைவுகளுடன் வாழ்ந்து வந்த ஜோடிக்கு, இன்று அதுவே கசப்பான சம்பவங்களாக மாறி உள்ளது. இனி வரும் நாட்களில் நீதிமன்றம் என்ன தீர்ப்பு சொல்லும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. சினிமா, அரசியல், குடும்பம் என மூன்று முனைகளிலும் ஒரே நேரத்தில் போராடும் விஜய்யின் அடுத்த அத்தியாயம் எப்படி இருக்கும் என்று காலம் தான் பதில் சொல்லும்.





விஜையின் கள்ளகாதல் அம்பலமான தருணம்

 


சிவகுமார் இந்திய சினிமாவின் மார்கண்டேயன் என அழைக்கப்படுபவர். இவர் தன் மகன்கள் சூர்யா, கார்த்தி நடிக்க வந்ததில் இருந்து சினிமாவிலிருந்து ஓய்வு பெற்றார். 

அதன் பிறகு எந்த ஒரு படம், சீரியல் என எதிலும் தலை காட்டாமல் இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் சிவகுமார் அவர்கள், மனைவி வீட்டு சாப்பாடு போல், ஹோட்டல் சாப்பாடு என்பது நடிகை போல, நமக்கு வீட்டு சாப்பாடு தான் முக்கியம், மனைவி தான் முக்கியம் என கூறியுள்ளார். 

இந்த கருத்தை அப்படியே ரசிகர்கள் விஜய் பக்கம் திருப்பி சிவகுமார் விஜய்யை தான் மறைமுகமாக தாக்கியுள்ளார் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

விஜய் - திரிஷா திருமணம் உறுதி?



தன் கணவர் விஜய் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக கூறி அவரது மனைவி சங்கீதா விவாகரத்து மனுதாக்கல் செய்தது தற்போது பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. 

சங்கீதா அப்படி செய்த சில நாட்களிலேயே, நடிகர் விஜய், நடிகை திரிஷாவுடன் ஜோடியாக திருமண நிகழ்ச்சிக்கு சென்றது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும், விஜய் - திரிஷா திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒரு வீடியோவை ரசிகர் ஒருவர் இருவருக்கும் திருமணம் நடக்கவுள்ளது என்று கூறி ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். 

அதை திரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணன் லைக் போட்டது பலரது கவனத்தையும் ஈர்த்தது மட்டுமில்லாமல், எரிகிற தீயில் எண்னை ஊற்றுவதுபோல் இந்த விவகாரத்தை மேலும் சூடு ஏற்றியிருந்தார்

இந்நிலையில் மீண்டும் திரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன் ஒரு சம்பவத்தை செய்துள்ளார். அதாவது, விஜய் - திரிஷாவை இணைத்து வைத்து இன்னொரு வீடியோவும் இணையத்தில் வைரலாகியிருக்கிறது. அதற்கு கொச்சையாகவே சிலர் பேசியிருக்கிறார்கள். அதற்கும் திரிஷாவின் அம்மா உமா லைக்கிட்டிருப்பது அடுத்தக்கட்ட விவாதமாக மாறியிருக்கிறது.

மாத இறுதியில் அதிஷ்டம் காணபோகும் மூன்று ராசிகள்...! இன்றைய ராசிபலன்



 நவகிரகங்களின் தளபதியான செவ்வாய் பகவான், வரும் ஏப்ரல் இரண்டாம் திகதி மீன ராசிக்குள் நுழைந்து ஏப்ரல் 18 ஆம் திகதி உதயமாவார்.


அஸ்தமன நிலையில் இருந்து செவ்வாய் உதயமாவதால் அதன் பலம் அதிகரித்து சில ராசிக்காரர்களுக்கு யோகமான பலன்கள் கிடைக்கவுள்ளன.


ஜாதகத்தில் செவ்வாய் வலுப்பெறுவதன் மூலம் புதிய வீடு, வாகன சேர்க்கை மற்றும் உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அவ்வாறு பயனடைப்போகும் ராசிகள் யார் என்பதை இந்த பதிவில் காணலாம்.

மிதுனம் 

மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் செவ்வாய் உதயமாகவுள்ளார்.

இதனால் இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் நல்ல பெயர்களைப் பெறுவார்கள்.

அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம்.

கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.

ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.

வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் எதிர்பார்த்த வேலை கிடைக்கும்.

வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.

தொழிலதிபர்கள் தொழிலில் கொடிகட்டிப் பறப்பார்கள்.


மிதுனம் 

மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் செவ்வாய் உதயமாகவுள்ளார்.

இதனால் இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் நல்ல பெயர்களைப் பெறுவார்கள்.

அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம்.

கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.

ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.

வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் எதிர்பார்த்த வேலை கிடைக்கும்.

வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.

தொழிலதிபர்கள் தொழிலில் கொடிகட்டிப் பறப்பார்கள். 

தனுசு 

தனுசு ராசியின் நான்காவது வீட்டில் செவ்வாய் உதயமாகவுள்ளார்.

இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் காண்பார்கள்.

நல்ல பொருள் வசதிகளைப் பெறுவார்கள்.

தைரியமும், வீரமும் அதிகரிக்கும்.

புதிய வீடு மற்றும் வாகனம் வாங்கும் யோகம் உருவாகும்.

வேலையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.

பரம்பரை சொத்துக்களால் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறக்கூடும்.

தாயாரின் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து அவரது உடல்நலம் மேம்படும்.

சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கும் கமல்!

 


சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்றுள்ள திரைப்படம் தாய் கிழவி. இப்படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியிருந்தார். 

முதல் படத்திலேயே மாபெரும் வெற்றியை தன்வசப்படுத்திய சிவகுமார், அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து சேயோன் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை உலகநாயகன் கமல் ஹாசன் தயாரிக்கிறார். அண்மையில் இப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளிவந்து நல்ல வரவேற்பு பெற்றது. 

இந்த நிலையில், சேயோன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து உச்ச நட்சத்திரம் ஒருவர் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் வேறு யாருமில்லை, நடிகர் கமல் ஹாசன்தான். ஆம், சேயோன் திரைப்படத்தில் கமல் ஹாசன் விருமாண்டி கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதுமட்டும் உறுதியானால் கண்டிப்பாக சேயோன் படத்தின் பிசினஸ் மிகப்பெரிய அளவில் உயரும் என்கின்றனர். மேலும் இது தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் மாபெரும் ட்ரீட்டாக அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

கேது பெயர்ச்சியால் உருவாகும் கிரகண யோகம்!

 


யுகாதி பண்டிகை முடிந்த கையோடு கேது சந்திரன் இணைப்பு நடைபெற இருக்கிறது. இது ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் பலன் பெறும் ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 


வேத ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளி தங்கள் ராசியை மாற்றி வருகின்றன. குறிப்பாக மார்ச் மாதத்தில் பல கிரகங்கள் தங்களது நிலையை மாற்றுகின்றன. அந்த வகையில் மார்ச் 30 ஆம் திகதி கேது சந்திரன் சேர்க்கை நடைபெற இருக்கிறது. இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் கிரகண யோகம் உருவாக்குவது இது அசுப யோகமாக கருதப்பட்டாலும், சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்க உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 


மிதுனம் 


கேது சந்திரன் சேர்க்கையால் மிதுன ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் நன்மை கிடைக்கும். கடின உழைப்புக்கான பலன்களைப் பெறுவீர்கள். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும். உங்கள் வாழ்க்கை பொன்னாக மாறும். நிதி நிலைமை கணிசமாக மேம்படும். பணியிடத்தில் உங்கள் உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். மகிழ்ச்சி பெருகும். ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வீர்கள். வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவீர்கள். 


விருச்சிகம் 


விருச்சிக ராசிக்காரர்களுக்கு கேது சந்திரன் பெயர்ச்சி நேர்மறையான மாற்றங்களை வழங்கும். யுகாதிக்குப் பின்னர் உங்களுக்கு நல்ல காலம் தொடங்கும். நிதி ரீதியாக சிறந்த நிலையை அடைவீர்கள். கடன் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். இழந்த பணம் மீண்டும் கைக்கு கிடைக்கும். பழைய முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கும். குடும்பத்தில் நிலவி வந்த சிறு சிறு பிரச்சனைகள் தீரும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் அமையக்கூடும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். அரசு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. 


தனுசு 


தனுசு ராசிக்காரர்களுக்கு கேது சந்திரன் சேர்க்கை சுப பலங்களைத் தரும். இதுவரை உங்களுக்கு இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். குடும்பத்துடன் ஆன்மீகத் தலங்களுக்கு செல்வீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். நகை, வீடு, சொத்து சேர்க்கை நடைபெறும். மாணவர்கள் கல்வியில் சிறந்த பலன்களை எதிர்பார்க்கலாம். உயர் கல்விக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். வெளிநாடு ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். தொழிலில் அசுர வளர்ச்சி கிடைக்கும். சிறிய தொழில் செய்து வருபவர்கள் பெரிய அளவில் தொழிலை விரிவாக்கம் செய்வீர்கள். 


மீனம் 


கேது சந்திரன் பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவீர்கள். திருமணமாகாதவர்கள் நல்ல இடத்தில் வரன் தேடி வரும். உங்கள் காதல் அடுத்த கட்டமான திருமணத்திற்குச் செல்லும். பணியிடத்தில் தலைமைப் பதவிகள் அல்லது புதிய பொறுப்புக்களை பெறுவீர்கள். ஏற்கனவே செய்த பழைய முதலீடுகளில் இருந்து எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவீர்கள். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். வருமானம் பல வழிகளில் பெருகும். நிதிநிலைமை மேம்படும்.

வெற்றி மீது வெற்றிகளை குவிக்கப்போகும் கடகம்!

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது நவகிரகங்களின் இருப்புக்கு ஏற்றவகையில் அவர்களின் வாழ்வில் பல்வேறு விடயங்களிலும் நேரடியான ஆதிக்கத்தை கொண்டிருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.

அந்தவகையில், ராசிபலன் மீது ஆர்வம் மற்றும் நம்பிக்கை கொண்டவர்கள் குறிப்பாக தமிழ் புத்தாண்டு ஆரம்பிக்கின்றது என்றாலே ராசிபலனை தெரிந்துக்கொள்வதில் அதிக ஈடுபாடு காட்டுவார்கள்.

2026 ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு சித்திரை 1 (ஏப்ரல் 14, 2026) திங்கட்கிழமை அதிகாலை 2.29 மணிக்கு பிறக்கிறது.

இந்நிலையில், 2026 ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டுப் ராசிப்பலன் கணிப்புகளின் பிரகாரம் கடக ராசியில் பிறந்தவர்களுக்கான சிறப்பு பலன்கள் குறித்து இந்த காணொளியில் முழுமையாக தெரிந்துக்கொள்ளலாம்.

அடத்தியான முடி வளர்ச்சிக்கு சிறந்த கறிவேப்பிலை ஆயுர்வேத எண்ணெய்!


அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது.


ஆனால் அதனை பெற்றுகொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவே உள்ளது.


இந்நிலையில், எவ்வித செயற்கையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இயற்கையான முறையில் நீளமான கூந்தலை எவ்வாறு பெறலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்


கறிவேப்பிலை - 3 கைப்பிடி

தேங்காய் எண்ணெய் - 3 ஸ்பூன்

தயிர் - 2 ஸ்பூன்

முதலில் கறிவேப்பிலையை நன்கு கழுவி உலரவைத்து வெயிலில் நன்கு காயவைத்து எடுத்துக்கொள்ளவும்.

பின் கறிவேப்பிலை நன்கு காய்ந்ததும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து ஒரு கிண்ணத்தில் கறிவேப்பிலை பொடி, தேங்காய் எண்ணெய் மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.

இதற்கடுத்து இவற்றை முடியின் உச்சந்தலை முதல் நுனி வரை நன்கு தடவி ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும்.

ஒரு மணி நேரம் கழித்து மென்மையான ஷாம்பு கொண்டு கூந்தலை அலசிக்கொள்ளலாம்.

இதனை வாரத்திற்கு ஒரு முறை என தொடர்ந்து பயன்படுத்தி வர முடி நன்கு நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.

குழந்தை பெத்துக்கொண்டது அவங்க தப்பு!

 


நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி சரத்குமார், போடா போடி படத்தின் மூலம் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து பிரபலமானார். அதன்பின் தெலுங்கு, தமிழ் மொழிகளில் வில்லி ரோலிலும் நடிக்க ஆரம்பித்த வரலட்சுமி, எஸ் சரஸ்வதி என்ற படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். 


இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தில் இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். படத்தின் பிரமோஷனுக்காக பல பேட்டிகளில் கலந்து கொண்டு பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார். 


சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், நம் நாட்டில் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள், ஆனால் உடலுறவு குறித்து பேச மறுக்கிறார்கள். அதுகுறித்து பேசினாலே ஐயோ கூடாது என்கிறார்கள். உலகிலேயே மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள இந்தியாவில் உடலுறவு குறித்து பேச மறுப்பது எனக்கு அதிர்ச்சியாகவுள்ளது. 


ஆனால் உடலுறவு வைத்துக்கொண்டு குழந்தைகளை பெற்றுக்கொண்டே இருக்குகிறீர்கள். ஏதோ தொழிற்சாலைப்போல் குழந்தைகளை பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதன்பின் குழந்தைகளை பெற்றுவிட்டோம், அதனால் கஷ்டப்படுகிறோம் என்று கூறுகிறார்கள். எதற்காக குழந்தை பெற்றுக் கொள்கிறீர்கள் என்று நான் கேட்கிறேன். 


முதலில் திட்டமிடுங்கள், உங்களிடத்தில் குழந்தையை பராமரிக்க போதுமான நிதி ஆதாரம் இருக்கிறதா என்பதை முடிவு செய்துவிட்டு அதன்பின் குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள். குழந்தைகளை பெற்றுவிட்டு அதன்பின் அவர்களை வளர்க்க திட்டமிடாதீர்கள். 


இன்று பொருளாதாரம் மாறிக்கொண்டே இருப்பதால் குழந்தைகளை நல்லபடியாக வளர்க்க பொருளாதார ரீதியாகவே மிகவும் சவாலானது. உங்களால் குழந்தைகளை பராமரிக்கக் கூடிய அளவிற்கு நிதி ஆதாரமில்லாமல் குழந்தைகளை பெற்றுவிட்டு, பணத்திற்காக மற்றவர்களிடம் போய் நிற்காதீர்கள். 


சிலர் என்னிடத்தில் வந்து குழந்தைகள் உள்ளது, எங்களுக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்கிறார்கள். என்னை கேட்டால், அவர்கள் குழந்தை பெற்றார்கள், அவர்கள் செய்த தவறுக்கு நான் ஏன் உதவ வேண்டும்? என்னிடம் வேலை பார்ப்பவர்களிடம் கூட, திருமணம் செய்துக்கொள்ளுங்கள், ஆனால் பொருளாதார ரீதியாக நீங்கள் மிகவும் உறுதியான பின் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறுகிறேன். 


நீங்கள் குழந்தையை பெற்றுவிட்டு அதற்கு உதவி செய்யச்சொல்லி என்னிடம் வந்து நிற்காதீர்கள், நீங்கள்தான் உங்கள் குழந்தையை பார்க்க வேண்டும். சிலர் தாத்தா சாகறேன்னு சொன்னார், பாட்டி சாகறேன்னு சொன்னார்கள். அதனால் தான் குழந்தை பெற்றுக்கொண்டேன் என்று எல்லாம் கூறுகிறார்கள். அதற்காக நாம் நம் வாழ்க்கையை சீரழிக்க முடியாதுதானே. எமோஷனல் பிளாக்மெயில் இங்குள்ளது என்பதையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். அதற்காக எல்லாவற்றிற்கும் நாம் தலையாட்டிக் கொண்டே இருக்கக்கூடாது என்று வரலட்சுமி பேசியுள்ளார்.





ஆபாச படங்களில் நடித்த பிரபல நடிகை?



மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ஸ்வேதா மேனன். கேரள மாநிலம் கோழிக் கோட்டில் பிறந்த இவர், "அனசுவரம்" என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் கடந்த 1991 ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானார். 

மலையாள திரைப்படங்கள் மட்டுமின்றி, ஏராளமான இந்தி மொழி படங்களிலும், தமிழில் "சினேகிதியே", "நான் அவன் இல்லை-2" ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சிறந்த நடிகைக்கான கேரள மாநில அரசின் விருதை பெற்றுள்ளார். 

இந்நிலையில் கடந்த ஆண்டு (2025) நடந்த மலையாள நடிகர்கள் சங்க தேர்தலில் போட்டியிட்டு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் மலையாள நடிகர்கள் சங்க முதல் பெண் தலைவர் என்ற பெருமையையும் பெற்றார்.

இந்நிலையில் நடிகை ஸ்வேதா மேனன் மீது கொச்சியை சேர்ந்த மார்ட்டின் என்பவர் எர்ணாகுளம் தலைமை குற்றவியல் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார். அவர் ஆபாச படங்களில் நடித்து பணம் சம்பாதித்ததாகவும், ஆகவே அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் தனது மனுவில் மார்ட்டின் தெரிவித்திருந்தார். 

மலையாள நடிகர்கள் சங்க தேர்தலில் நடிகை ஸ்வேதா மேனன் போட்டியிட்ட நேரத்தில் அவரின் மீது தொடரப்பட்ட இந்த வழக்கு மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகைக்கு எதிரான அந்த மனுவை விசாரித்த எர்ணாகுளம் நீதிமன்றம், நடிகை ஸ்வேதா மேனன் மீது வழக்குப்பதிவு செய்ய பொலிஸாருக்கு உத்தரவிட்டது.

நீதிமன்றின் உத்தரவின் பேரில் நடிகை ஸ்வேதா மேனன் மீது தகவல் தொழில் நுட்ப சட்டம் 67(ஏ) உள்பட 2 பிரிவுகளின் கீழ் கொச்சி மத்திய பொலிஸார் வழக்கு பதிந்தனர். இந்தநிலையில் தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி கேரள உயர்நீதிமன்றில் நடிகை ஸ்வேதா மேனன் மனு தாக்கல் செய்தார். 

அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஸ்வேதா மேனனின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கூறப்பட்ட புகாரின் மீது அவர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய உத்தரவிட்டது.



ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா வெற்றி: டிரம்ப் அறிவிப்பு


 ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்கா முழுமையான வெற்றியைப் பெற்றுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' (Operation Epic Fury) இராணுவ நடவடிக்கை மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இதன் மூலம் ஈரானுக்கு எதிரான தாக்குதலில் அமெரிக்கா வெற்றி பெற்றுவிட்டதாக அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

கடந்த 11 நாட்களில் அமெரிக்க இராணுவம் ஈரானை கிட்டத்தட்ட அழித்துவிட்டது என்றும், குறிப்பாக அந்நாட்டின் விமானப்படை முற்றாகச் சிதைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானிடம் தற்போது போரிடுவதற்கு எதுவுமில்லை எனத் தெரிவித்துள்ள டிரம்ப், அந்நாட்டின் 90% ஏவுகணைகள் மற்றும் 86% ட்ரோன்கள் அமெரிக்காவினால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகத் புள்ளிவிபரங்களுடன் தெரிவித்துள்ளார்.

ஈரானின் பயங்கரவாத ஆட்சியால் ஏற்பட்ட அச்சுறுத்தலைத் தடுக்கவே இந்தத் தீர்மானமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.



ஈரானில் இனி அழிப்பதற்கு எதுவுமில்லை எனக் கூறியுள்ள டிரம்ப், தான் எப்போது வேண்டுமானாலும் இந்தத் தாக்குதலை நிறுத்துவதற்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.






கணவரை விவாகரத்து செய்த ஹன்சிகா!

 


தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் ஹன்சிகா மோத்வானி. 

2000 களில் வெளியான ஷக்கலக்க பூம் பூம் என்ற தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார், அதன்பின் சில ஆண்டுகள் கழித்து ஹிந்தியில் கதாநாயகியாக அறிமுகமானார். 

ஹிந்தியை தொடர்ந்து தெலுங்கிலும் நடித்து வந்தவர் கடந்த 2011 ஆம் ஆண்டு தனுஷின் மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். 

அதன்பின் எங்கேயும் காதல், வேலாயுதம், அரண்மனை, ரோமியோ ஜுலியட், சிங்கம் 2 என தொடர்ந்து பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து வந்தார். 

நடிகை ஹன்சிகா கடந்த 2022 ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சோஹேல் கதுரியா என்பவரை காதலித்து திருமணம் செய்தார். 

ஆனால் திருமணம் ஆன சில வருடங்களிலேயே ஹன்சிகா - சோஹேல் திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. தற்போது மும்பை பந்தாரா குடும்பநல நீதிமன்றம் இந்த தம்பதிக்கு பரஸ்பர சம்மதத்தின் அடிப்படையில் விவாகரத்தை வழங்கியுள்ளனர். 


ஹன்சிகா தனது விவாகரத்து விஷயத்தில் கணவர் சோஹேல் கதுரியாவிடம் இருந்து ஜீவனாம்சமாக எதுவும் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.




விஜய் - த்ரிஷாவுக்கு திருமணம்! பாடகி சுசித்ராவின் பரபரப்பு பேட்டி

 


சமந்தா பாணியில் த்ரிஷா- விஜய் திருமணம் நடைபெறவிருப்பதாக நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளதாக பாடகி சுசித்ரா கொடுத்துள்ள பேட்டி தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் சமந்தா மற்றும் இயக்குநர் ராஜ் நிடிமோரு கோவை ஈஷா யோகா மைய வளாகத்தில் உள்ள லிங்க பைரவி கோயிலில் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இவர்களின் திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

தற்போது விஜய்- சங்கீதா விவாகரத்து சர்ச்சையால் இணையமே போர்களமாக மாறியுள்ளது. நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக குற்றம் சாட்டி நடிகர் மற்றும் த.வெ.க தலைவர் விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரியுள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் விஜய்கு ஆதரவாக பேசி கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.



கல்யாண நாளில் நடிகைகளுடன் சேட்டை செய்த ஆர்யா!

 

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ஆர்யா, ஜிம் வொர்க்கவுட், சைக்கிளிங் உள்ளிட்ட பல விஷயங்களை செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்து வருகிறார். 45 வயதாகும் ஆர்யா, நடிகை சாயிஷாவை 2019 இல் காதலித்து திருமணம் செய்து ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். 

தற்போது மிஸ்டர் எக்ஸ், வேட்டுவம் உள்ளிட்ட படங்களில் நடித்தும் வருகிறார். மார்ச் 10 ஆம் திகதி அன்று ஆர்யா - சாயிஷா தங்களின் 7 ஆவது ஆண்டு திருமண நாளை கொண்டாடினர். 

இந்நிலையில், திருமண நாளின்போது, தன்னுடைய ஆர்யா40 படத்தில் நடித்து வரும் நடிகை நிகிலா விமல் மற்றும் வைஷ்ணவி சைதன்யாவுடன் இணைந்து ஜிம் ஒர்க்கவுட் செய்துள்ள புகைப்படத்தையும், சேட்டை செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ளார். 

ஆர்யாவின் இந்த பதிவு வைரலாக, ஜிம்மில் நடிகைகளுடன் அரட்டை அடிப்பதை நடிகர் சதீஷ் பார்த்துள்ளார். 

இதன்பின் ஆர்யாவின் பதிவிற்கு, நானெல்லாம் ஜிம்முக்குப் போனா, வந்த வேலையை மட்டும்தான் பார்க்குறது ஆர்யா டார்லிங் என கோபமான எமோஜியை போட்டு ஜஸ்ட் ஃபார் யுவர் ஜெனரல் நாலேட்ஜ் என்று கூறி ஆர்யாவின் மனைவி சாயிஷாவின் எக்ஸ் தள பக்கத்தை டேக் செய்துள்ளார். 

இதனை பார்த்த நெட்டிசன்கள், வயித்தெரிச்சலில் பொண்டாட்டிக்கிட்ட மாட்டிவிட்டீங்களே சதீஷ் என்று கலாய்த்தபடி கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.






என்னுடைய கர்ப்பம் தான் இதற்கு காரணம்!

 


தென்னிந்திய சினிமா நடிகை திரிஷா இப்போது சமீப காலமாக அடிக்கடி செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். 

தமிழ் சூப்பர் ஸ்டார், தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவர் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த விவகாரம் வைரலாகி வரும் நிலையில், விஜய் - திரிஷா இடையே காதல் உறவு என்ற ஊகங்கள் இப்போது ஹாட் டாபிக் ஆகியுள்ளது. 

சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு விஜயும் திரிஷாவும் ஒரே காரில் வந்ததுடன், ஒரே நிற பட்டு உடைகள் அணிந்து ஜோடியாகக் காணப்பட்டனர். 

இந்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலானது. இருவரும் மணமக்களை வாழ்த்தி மேடையில் நின்ற வீடியோக்களும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்கீதா, விஜயிடமிருந்து விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். 

தனக்கு நியாயம் கிடைக்காவிட்டால் அந்த நடிகை யார் என்று வெளியிடுவேன்" என்று சங்கீதா கடுமையான கருத்துகளை தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. 

இந்த கருத்துகள் வைரலான நிலையில், விஜய் - திரிஷா ஒரே காரில் காணப்பட்டதால், சமூக வலைதளங்களில் அந்த நடிகை திரிஷா தான் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்த சூழலில், திரிஷாவின் பழைய எங்கேஜ்மென்ட் ரத்தான விவகாரம் மீண்டும் வைரலாகி வருகிறது. 2015 இல் சென்னை வியாபாரி வருண் மணியன் உடன் திரிஷாவுக்கு எங்கேஜ்மென்ட் நடந்தது. ஆனால் சில மாதங்களிலேயே அது ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து திரிஷா ஒரு பேட்டியில் கூறியது இப்போது மீண்டும் வைரலாகி உள்ளது. 

என்னுடன் எங்கேஜ் ஆன நபர், பல கட்டுப்பாடுகளை வைத்தார். திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்த வேண்டும் என்றார். அதனால் நான் அவருடன் திருமணம் செய்ய வேண்டாம்" என்று முடிவு செய்தேன். 

நான் கர்ப்பமானால் மட்டுமே சினிமாவில் இருந்து பிரேக் எடுப்பேன். என் கர்ப்பம் மட்டுமே நான் சினிமாவில் நடிப்பதை தடுக்க காரணமாக இருக்கும். 

இல்லையென்றால் என் கடைசி மூச்சு வரை நடிப்பேன். ஹீரோயின் ரோல்கள் வராவிட்டாலும், எனக்கு ஏற்ற கேரக்டர் ரோல்கள் செய்வேன். ஆனால் நடிப்பை ஒருபோதும் விட்டுவிட மாட்டேன்." 


இந்த பழைய கருத்துகள் இப்போது மீண்டும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. 


மறுபக்கம், தற்போது திரிஷா மீது எழும் கருத்துகளுக்கு மத்தியில் அவர் இன்ஸ்டாகிராமில் போட்ட பதிவு வைரலாகி உள்ளது. தன் செல்ல நாய் இஸ்ஸி கிருஷ்ணன் (Izzy Krishnan) தூங்கும் போது தோகை ஆட்டுவதை வீடியோவாக போட்டுள்ளார். அதில் "Currently chasing cats in dreamland" என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். இந்த போஸ்ட் இப்போது வைரலாகி, பலரும் விளக்கம் தேடி வருகின்றனர். 


விஜய் - திரிஷா ஜோடியாக 5 படங்களில் நடித்துள்ளனர். அதில் 'கில்லி', 'திருப்பாச்சி', 'லியோ' போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்கள் உள்ளன. இந்த பழைய ஜோடி மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளது.





எல்லாவற்றையும் விட்டுட்டு வந்துவிட்டேன்

 


நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கிய பிறகு சினிமாவில் இனி நடிக்கமாட்டேன் என அதிரடியாக அறிவித்துவிட்டார். 

அவரது கடைசி படமான ஜனநாயகன் ரிலீஸில் பல்வேறு சிக்கல்கள் வந்து, இன்னும் சென்சார் சான்றிதழே கிடைக்காமல் இருக்கிறது. 

மறுபுறம் விஜய்யின் மனைவி சங்கீதா தொடுத்திருக்கும் விவாகரத்து வழக்கு, த்ரிஷா உடன் இணைத்து வரும் வதந்திகள் என விஜய் பல சிக்கல்களை சந்தித்து வருகிறார். 

இந்நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் நேர்காணலை நேற்று (10) விஜய் ஆரம்பித்தார். 

எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்து விட்டேன். இனி அரசியலை தவிர எனக்கு வேறு ஒன்றும் இல்லை" என விஜய் கூறினாராம்.

இன்றைய ராசி பலன்

 



இன்று (11) விருச்சிகம் ராசியில் கேட்டை பின்பு மூலம் நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று கும்ப ராசியில் புதாதித்ய, சதுர்கிரகி யோகம் உருவாகும் நாள். இன்று மேஷ ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. 


மேஷ ராசி பலன் 


மேஷ ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று உங்களுடைய வருமானம் திருப்திகரமாக இருக்கும். பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு அதிகரிக்க கூடிய நாள். நீங்கள் சுப காரியங்கள் மும்முறமாக பங்கேர்ப்பீர்கள். இந்த ராசி அதிபதி லாப ஸ்தானத்தில் சந்ததிப்பது உங்களுக்கு வேலையில் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வுக்கான நல்ல வாய்ப்பை ஏற்படுத்தும். இன்று குரு மிதுனத்தில் வக்ர நிவர்த்தி அடைகிறார். உங்கள் வேலை, வீட்டு வேலைகளை சரியாக திட்டமிட்டு முடிப்பது அவசியம். 


ரிஷப ராசி பலன் 


ரிஷப ராசி சேர்ந்தவர்களுக்கு செல்வம், மகிழ்ச்சி பெறக் கூடிய நாள். இன்று குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். ஒரு பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். அவர்களின் ஆலோசனை உங்கள் செயல்பாடுகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். இன்று மாலை நேரத்தில் உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபடுவீர்கள். உங்களின் புதிய முயற்சிகளில் குறிப்பிடத்தக்க வெற்றியை தரும். இன்று நீங்கள் நிர்ணயித்த இலக்கை அடைய சாதகமான சூழல் நிலவும். 


மிதுன ராசி பலன் 


மிதுன ராசி சேர்ந்தவர்களுக்கு உங்கள் வேலையில் முன்னேற்றமும் உயர் பதவியை அடைய வாய்ப்பு உள்ளது. இன்று உங்கள் பிள்ளைகளிடம் இருந்து நல்ல செய்திகளை பெறுவீர்கள். உங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும். உங்களுக்கு பிடித்தமான உணவுகளை சுவைக்க வாய்ப்பு கிடைக்கும். ஆடம்பரம், ஆடை, ஆபரணங்கள் மீது நாட்டம் குறையும். உங்களுடைய வேலை மற்றும் தொழில் தொடர்பாக சமூக ஊழியர்களின் ஆதரவு மற்றும் பங்கேற்பு பெறுவதற்கு. இன்று எந்த விஷயத்திலும் சோம்பலை கைவிட்டு சுறுசுறுப்பாக செயல்படவும். 


கடக ராசி பலன் 


கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலை அல்லது தொழில் தொடராக பயணம் இருக்குல்ல வாய்ப்பு உண்டு. உங்களுக்கு குழந்தைகளிடமிருந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று ஏதேனும் ஒரு வழிகளில் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். சிலரிடமிருந்து பரிசு கிடைக்க வாய்ப்பு உண்டு.. சில நாட்களாக இருக்கும் கடினமான மன உணர்வு நண்பர்களின் சந்திப்பால் தீரும். இன்று மாணவர்கள் படிப்பிலும், விளையாட்டு போட்டியில் சிறப்பாக செயல்படுவீர்கள். இன்று சரியான அளவில் ஓய்வு மற்றும் தூக்கத்தை எடுத்துக் கொள்வது அவசியம். 


சிம்ம ராசி பலன் 


சிம்ம ராசியை சேர்ந்த பொருட்களுக்கு இன்று வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடத்தும் நிகழ்ச்சியில் ஈடுபடுவீர்கள்.இது உங்களுக்கு மகிழ்ச்சியை தரக்கூடியதாக இருக்கும். உங்கள் தொழில் தொடர்பான முயற்சிகள் வருமானத்தை அதிகரிக்கும். எதிர்பாராத விதமாக அதிக பணம் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உண்டு. இதனால் உங்களுடைய மன உறுதி அதிகரிக்கும். சனி வக்கிர நிறைவு காரணமாக இன்று நீங்கள் சில சிக்கலை சந்திக்க வாய்ப்பு உண்டு. குறிப்பாக செரிமானம் மற்றும் வாயு பிரச்சினைகள் அசௌகரியத்தை ஏற்படுத்தும். அதனால் உங்கள் உணவுப் பழக்கத்தைக் கட்டுப்படுத்துங்கள். 


கன்னி ராசி பலன் 


கன்னி ராசி சேர்ந்தவர்களுக்கு உங்கள் வேலை தொடர்பாக கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும். இன்று நுட்பமான வேலை மற்றும் உங்கள் எழுத்து முன்னேற்றத்தையும் வருமானத்தையும் அதிகரிக்கும். இன்று எந்த சூழ்நிலையிலும் கோபத்தை தவிர்க்கவும். குழந்தைகளின் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். ஏதேனும் ஒரு சொத்து வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உங்கள் சகோதரர்களுடன் இருக்கும் கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். 


துலாம் ராசி பலன் 


துலாம் ராசி சேர்ந்தவர்களுக்கு உங்கள் விருப்பங்கள் நிறைவேற கூடியதாக இருக்கும். இன்று உங்களுடைய பணி பாராட்டை பெற்று தரும். சில விஷயங்கள் உங்களுக்கு சங்கடத்தை தரக்கூடியதாக அமையலாம். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். எதிர்பாராத திடீர் செலவுகள் ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை. இன்று நீங்கள் ஆன்மீகம், இலக்கியம் தொடர்பான விஷயங்களில் மார்க்கம் அதிகரிக்கும். சும்மா சமூக பணி அல்லது நிகழ்வுகளில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டுவீர்கள். 


விருச்சிக ராசி பலன் 


விருச்சிக ராசி சிறந்தவர்களுக்கு இன்று ராசி அதிபதி செவ்வாய் பலத்தை தரும் வகையில் அமர்ந்துள்ளார். இளம் சந்திரனுடன் சேர்ந்து இருப்பதால் இன்று உங்கள் பெற்றோரின் ஆசிர்வாதம் மற்றும் துணை கிடைக்கும். இன்று நீங்கள் சில மாற்றங்கள் செயலை செய்ய வாய்ப்பு உண்டு. இன்று சிலரின் உதவியால் நீண்ட காலமாக உங்களுக்கு வர வேண்டிய பணம் வர வாய்ப்பு உண்டு. இன்று இன்று பிள்ளைகளின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள். 


தனுசு ராசி பலன் 


தனுசு ராசியை சேர்ந்தவர்களுக்கு இன்று குருவின் பார்வை மற்றும், சனியின் அமைப்பு உங்களுக்கு சிரமங்களை தர வாய்ப்பு உண்டு.. வேலைகள் கடின உழைப்பு தேவைப்படும். உங்கள் பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும். சொத்து தொடர்பாக குடும்பத்தில் இருக்கும் தகராறுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்பதால், சூழலை அனுசரித்து செல்லவும். இன்று உங்கள் நிதி நிலை சற்று சங்கடத்தை தரக்கூடியதாக இருக்கும். வரும் நாட்களில் உங்களின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்தவும். இன்று உங்கள் குடும்பத்தினருடன் ஆலோசனை செய்து பெரிய முதலீடு செய்ய திட்டமிடுவீர்கள். 


மகர ராசி பலன் 


மகர ராசியை சேர்ந்தவர்களுக்கு இன்று புதன் மற்றும் ராகுவின் அமைப்பு உங்கள் மனதில் சக்தி மற்றும் மரியாதையை அதிகரிப்பார். இந்த குருவின் அமைப்பை உங்கள் செயல்பாடு, செல்வநிலையை மேம்படுத்துவர். இந்த குடும்பத்தில் உங்கள் புகழ் அதிகரிக்கும். எதிரிகளை எளிதாக முடிக்க முடியும்.இன்று உங்கள் மனதில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். செயல்பாடுகளில் வெற்றி, மகிமையை நல்ல மாற்றங்கள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகளில் நிறைவேறும். 


கும்ப ராசி பலன் 


கும்ப ராசியை சேர்ந்தவர்களுக்கு இன்று வேலையில் கூடுதல் பொறுப்புகள் இதற்கெல்லாம் நேரிடும். ஆன்மீக நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உங்கள் செல்வநிலை அதிகரிக்க கூடிய நாள். இன்று எந்த ஒரு செயலுக்காகவும் உங்கள் மனமில்லை நிதானமாக பராமரிப்பதும், இன்று உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடுகளை விலக்கி நிதானமாக செயல்படுவது அவசியம். இன்று நீங்கள் இதன் ஒரு ஆன்மீக நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். சிலர் புனித யாத்திரை செல்ல திட்டமிடுவார்கள். 


மீன ராசி பலன் 


மீன சேர்ந்தவர்களுக்கு இன்று வேலையில் கூடுதல் பொறுப்பு எதிர்கொள்ள வாய்ப்பு உண்டு. குறிப்பாக ஆன்மீக நடவடிக்கைகளில் அதிக ஈடுபாடு காட்டுகிறார்கள். வருமானத்தை அதிகரிக்க கூடிய நாள். இன்று அதிகப்படியான கோபத்தை எதிர்க்கவும். உங்கள் மனைவியுடன் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய நாள். இன்று புதிய சொத்து வாங்குவது அல்லது விற்பதன் மூலம் லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு. அதே சமயம் முடிவு விஷயங்களில் நிதானத்தை கடைபிடிக்கவும். வணிகத்தில் முதலீடுகளை, தயக்கமின்றி செய்யுங்கள்; அது எதிர்காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.



விஜய்யின் இனிஷியலை தூக்கி எறிந்த மகன்!

 


நடிகர் விஜய் மகன் ஜோசப் சஞ்சய் தற்போது சினிமா உலகில் இயக்குநராக தனது பயணத்தை தொடங்கியிருக்கிறார். அவர் இயக்க உள்ள படத்தின் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், சமீபத்தில் வெளிவந்த ஒரு சிறிய விஷயம் கூட சமூக வலைதளங்களில் பெரிய விவாதமாக மாறியுள்ளது. 'விஜய்' இனிஷியல் இல்லாமல் கையொப்பம் பொதுவாக தமிழ் சினிமாவில் பல நடிகர்களின் குழந்தைகள் தங்களது தந்தையின் பெயரின் முதலெழுத்தை பயன்படுத்துவது வழக்கம். 

 ஆனால் ஜேசன் சஞ்சய் தனது புதிய படத்திற்கான டைட்டில் கார்ட் மற்றும் கையொப்பங்களில் தந்தையின் பெயரை குறிக்கும் எழுத்தை பயன்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. அதற்கு பதிலாக அவர் "Jason Sanjay S" என்ற முறையில் கையொப்பமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதில் வரும் 'S' என்பது அவரது தாய் சங்கீதா (Sangeetha Sornalingam) பெயரை குறிக்கிறது என சமூக வலைதளங்களில் பலர் கூறி வருகின்றனர். குடும்ப சர்ச்சை நடுவில் பேசப்படும் விஷயம் கடந்த சில மாதங்களாக நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா குறித்து பல்வேறு வதந்திகளும் விவாதங்களும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில் ஜேசன் சஞ்சய் தனது தந்தையின் பெயரை பயன்படுத்தாமல் தாயின் பெயரை குறிப்பது போன்ற தகவல் வெளியாகியிருப்பது ரசிகர்கள் மத்தியில் மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால் விஜய்யின் பிள்ளைகள் இருவருமே அவரை விட்டு பிரிந்து அம்மாவுடன் மட்டும்தான் இருக்கிறார்கள். 

அம்மாவுக்கு தான் அவர்களுடைய சப்போர்ட் இருக்கிறது என்று தெரிகிறது என பலருக்கு கருத்து தெரிவித்து வருகிறார்கள். 

தனியாக தொடங்கிய சினிமா பயணம் சஞ்சய் தனது சினிமா பயணத்தை தந்தையின் ஆதரவை பெரிதாக பயன்படுத்தாமல் தொடங்க முயற்சி செய்கிறார் என்று கூறப்படுகிறது. சினிமா படிப்பை வெளிநாட்டில் முடித்த பிறகு அவர் இயக்குநராக உருவாக வேண்டும் என்ற நோக்கத்தில் தனியாகவே முயற்சி செய்து வருகிறார். சில காலமாக அவர் London நகரத்தில் வசித்து வந்ததாகவும், அங்கிருந்து படிப்பு மற்றும் சினிமா தொடர்பான பணிகளில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

லண்டனில் இருந்தாலும் சென்னை அல்லது பிற நகரங்களுக்கு சஞ்சய் பெரும்பாலும் தனியாகவே வந்து சென்று வருகிறார். 

குடும்பத்தின் பெரும் பிரபலத்தையும், தந்தையின் அரசியல் மற்றும் சினிமா பின்னணியையும் பயன்படுத்தாமல் தனது பாதையை தனியாக உருவாக்க வேண்டும் என்பதே அவரது நோக்கம் என்று சிலர் கூறுகின்றனர். இந்த காரணத்தாலேயே அவர் வெளிப்படையாக தனது தந்தையின் பெயரை பயன்படுத்தாமல் இருக்கிறார் என்ற கருத்தும் இணையத்தில் பரவி வருகிறது. 

முதல் படத்திற்கான எதிர்பார்ப்பு இப்போது ஜேசன் சஞ்சய் இயக்க உள்ள முதல் படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே ஆர்வம் அதிகமாக உள்ளது. தந்தை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பதால், அவரது மகன் இயக்குநராக வருவது எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. இந்த நிலையில் 'Jason Sanjay S' என்ற கையொப்பம் வெளியான தகவல், அவரது குடும்ப பின்னணி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய விவாதங்களையும் மீண்டும் சமூக வலைதளங்களில் கிளப்பியுள்ளது. இதனால் நடிகர் விஜயின் குடும்பத்தைச் சுற்றி ஏற்கனவே பேசப்பட்டு வந்த விஷயங்களுடன் சேர்ந்து, ஜேசன் சஞ்சயின் இந்த முடிவும் தற்போது புதிய பேசுபொருளாக மாறியுள்ளது.