தன்னை விட அதிக வயதான ஹீரோவுடன் ரொமான்ஸ்.. நயன்தார செய்யும் கேவலமான வேலை

தன்னை விட அதிக வயதான ஹீரோவுடன் ரொமான்ஸ்.. நயன்தார செய்யும் கேவலமான வேலை


இந்திய சினிமாவில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர் நடிகை நயன்தாரா. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த அவர், இயக்குநர் அட்லீயின் ஜவான் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். 
ஷாருக்கானுடன் இணைந்து நடித்த இப்படம் மாபெரும் வெற்றி பெற்று, அவருக்கு ஹிந்தியில் பல வாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை பாலிவுட்டில் இருந்து புதிய பட அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

தற்போது நயன்தாரா மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பிரம்மாண்டமாகத் தொடங்கப்பட்டு, படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நயன்தாரா மீண்டும் தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தியுள்ளார்.மெகாஸ்டார் சிரஞ்சீவியுடன் இணைந்து அவர் நடிக்கும் புதிய படம், அவரது 157வது படமாகும். இயக்குநர் அனில் ரவிபுடி இயக்கத்தில் உருவாகும் இப்படம், மெகா 157 என்று தற்காலிகமாக அழைக்கப்படுகிறது. இது 2026 சங்கராந்தி பண்டிகையின்போது வெளியாக உள்ளது.

சிரஞ்சீவியும் நயன்தாராவும் இதற்கு முன் சை ரா நரசிம்ம ரெட்டி மற்றும் காட்ஃபாதர் படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இது அவர்களின் மூன்றாவது படமாகும். இருப்பினும், சிரஞ்சீவிக்கும் நயன்தாராவிற்கும் 30 வயது வித்தியாசம் இருப்பது சில விவாதங்களை எழுப்பியுள்ளது.சிரஞ்சீவி 69 வயதிலும், நயன்தாரா 40 வயதிலும் இருக்கின்றனர். இதுபோன்ற வயது வித்தியாசம் தென்னிந்திய சினிமாவில் புதிதல்ல என்றாலும், ரசிகர்கள் இதை எப்படி ஏற்பார்கள் என்பது படத்தின் வெற்றியைப் பொறுத்தே தெரியும். 

அனில் ரவிபுடி, தனது நகைச்சுவை மற்றும் மக்களைக் கவரும் பாணியால் பிரபலமானவர். சங்கராந்திக்கு வஸ்துன்னம் படத்தின் வெற்றிக்குப் பிறகு, இப்படத்தில் அவர் சிரஞ்சீவியை ஒரு புத்துணர்ச்சியான கதாபாத்திரத்தில் காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.நயன்தாராவின் கதாபாத்திரமும் சிறப்பாக இருக்கும் என புரமோஷன் வீடியோக்கள் மூலம் அறியப்படுகிறது. இப்படம் ரசிகர்களுக்கு ஒரு பொழுதுபோக்கு விருந்தாக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

என்னுடைய அந்த உறுப்பை பார்க்காதது போல பார்த்தார்; கணவன் குறித்து அமலாபால்

 என்னுடைய அந்த உறுப்பை பார்க்காதது போல பார்த்தார்; கணவன் குறித்து அமலாபால்


தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான அமலா பால், தனது நடிப்புத் திறமை மற்றும் துணிச்சலான பாத்திரத் தேர்வுகளால் ரசிகர்களைக் கவர்ந்தவர். 
2009-ல் நீலதாமரா மூலம் அறிமுகமான அவர், 2010-ல் மைனா படத்தால் புகழின் உச்சம் பெற்றார். தெய்வத்திருமகள், வேலை இல்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றார். 2019-ல் ஆடை படத்தில் ஆடையின்றி நடித்து, சமூகப் பிரச்சனைகளை எடுத்துரைத்து விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றார். 2014-ல் இயக்குநர் ஏ.எல். விஜய்யைத் திருமணம் செய்த அமலா, 2017-ல் விவாகரத்து பெற்றார். இதன்பின் திரையுலகில் மீண்டும் உச்சம் தொட்டவர், 2023-ல் தொழிலதிபர் ஜெகத் தேசாயை காதலித்து திருமணம் செய்தார். 2024-ல் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. கர்ப்ப காலத்தில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள், மகனுடனான பொங்கல் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. 

சமீபத்தில், தனது காதல் பற்றி அமலா பகிர்ந்தார்: "கோவாவில் ஜெகத்தை முதலில் சந்தித்தேன். அவர் குஜராத்தியாக இருந்தாலும், கோவாவில் வளர்ந்தவர். தென்னிந்திய படங்கள் பார்க்காததால், நான் நடிகை என்பதே அவருக்கு தெரியாது. கர்ப்ப காலத்தில் என் படங்களைப் பார்த்தார். விருது விழாக்களை பார்ப்பதற்கு அவருக்கு மிகவும் பிடிக்கும். அப்படி ஒரு, விருது விழாவின் நான் சிவப்பு கம்பளத்தில் நடப்பதை வியந்து பார்த்தார். நீயா அது.. நிஜமாவே நீயா..? என்பது போல திருமணத்திற்கு பிறகு விருது விழாவில் தோன்றிய என்னையும் அவர் அருகில் இருந்த என்னையும் மாற்றி என்னுடைய முகத்தை இதுவரை பார்க்காதது போல உற்று பார்த்தார். என கூறியுள்ளார் அமலா பால்.இது, அவர்களது உறவின் எளிமையையும் உண்மையான புரிதலையும் வெளிப்படுத்துகிறது. மைனா படத்திற்கு தமிழ்நாடு மாநில விருது, ரன் பேபி ரன் படத்திற்கு சைமா விருது உள்ளிட்டவற்றைப் பெற்ற அமலா, தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் தனது திறமையை நிரூபித்தார். 
விவாகரத்து, விமர்சனங்களை எதிர்கொண்டு மீண்டெழுந்த அவரது வாழ்க்கை, பெண்களுக்கு உத்வேகமளிக்கிறது. அமலா பாலின் காதல், தாய்மை, தொழில் பயணம், உண்மையான மகிழ்ச்சியின் அடையாளமாக விளங்குகிறது.