சூப்பர் சிங்கரில் பாதியில் பாடலை நிறுத்திய சிறுமி !


சூப்பர் சிங்கர் ஜுனியர் 10 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நஷ்ரீன் இந்த வாரம் தான் பாடிய பாடலை பாதியில் நிறுத்தியுள்ளது நடுவர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல இந்திய தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். தற்போது சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகின்றது.

10வது சீசனில் இருக்கும் இந்த நிகழ்ச்சியில் திறமையுள்ள சிறுவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையினை வெளிக்காட்டி வருகின்றனர்.

குறித்த மேடையில் மழலையின் குரல் தற்போது நடுவர்களை மட்டுமின்றி பார்வையாளர்களையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.

நஷ்ரீன் என்ற சிறுமி இந்த வாரம் Vibe Song ரவுண்டில் பாடல் ஒன்றினைப் பாடியுள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக பாடலை இடையில் நிறுத்தியுள்ளார்.

மீண்டும் மீண்டும் முயற்சித்தும் நஷ்ரீனால் முடியவில்லை... ரசிகர்கள் நடுவர்கள் அதிருப்தியில் காணப்பட்டதுடன், பாடகி சித்ரா எடுக்கும் முடிவு என்ன என்பதை பார்வையாளர்கள் அவதானித்து வருகின்றனர்.




விரைவில் முடியவுள்ள ஹிட் சீரியல்!


சன் டிவி தொடர்களுக்கு போட்டியாக விஜய் தொலைக்காட்சியிலும் நிறைய ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகின்றன.

இப்படி ரசிகர்கள் வரவேற்கும் வண்ணம் நிறைய ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாக ஒரு தொடர் முடிவுக்கு வரப்போகும் செய்தி வெளியாகியுள்ளது.

அதாவது கடந்த வருடம் ஜுன் மாதம் ஒளிபரப்பாக தொடங்கிய பனிவிழும் மலர்வனம் சீரியல் தான் முடிவுக்கு வரப்போகிறதாம்.

தற்போது அது தொடர்பான உத்தியோகபூர்வ தகவலும் வெளியாகியுள்ளது.

இதனால் அத் தொடரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.