யாழ்ப்பாணத்தில் சிவகார்த்திகேயனின் பராசக்தி படப்பிடிப்பு

 அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் நடிகர் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் உச்சத்திற்கு சென்றுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி என இரு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் இந்தி திணிப்பு எதிர்ப்பை கதைக்களமாக கொண்டு உருவாகி வரும் திரைப்படம்தான் பராசக்தி.

நடிகர் ரவி மோகன் இப்படத்தில் வில்லனாக நடிக்க, அதர்வா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்

அடுத்தக்கட்ட படப்பிடிப்பு,

தமிழ்நாட்டில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இலங்கையில் துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக, அடுத்த வாரம் படக்குழு இலங்கை செல்கின்றனர். அங்கு, யாழ்ப்பாணம் நூலகம் எரிந்த சம்பவத்தை நினைவுப்படுத்தும் விதமான காட்சிகளை எடுக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.  


  

கூலி படப்பிடிப்பிற்காக சென்னை வந்த நடிகை ஸ்ருதிஹாசன்

 ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் புதிய படம் "கூலி." 

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் ஏற்கனவே சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்.அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குகின்றனர்.


 ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு சிகிடு வைப் என்ற பாடலின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டது. இந்நிலையில் ஸ்ருதிஹாசன் கூலி படப்பிடிப்பிற்காக இன்று சென்னை வந்தார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

விஜய் இதை கண்டிப்பா மாற்றிக்கொள்ள வேண்டும்..! ரகசியம் உடைத்த நடிகை திரிஷா..!

 தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் திரிஷா, அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தாலும், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் லீட் ரோலில் நடித்து வருகிறார்.அவர் நடிப்பில் அஜித்தின் “விடாமுயற்சி” வரும் 6 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், திரிஷா நடிகர் விஜய் குறித்து பேசிய பேட்டி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

விஜய்யின் அமைதி

திரிஷா விஜய்யை “போரிங்” என்று கூறியதற்கான காரணத்தை விளக்கினார். “என்னை படப்பிடிப்பில் டீஸ் செய்வது சிம்புதான், ஆனால் விஜய், ரொம்ப போரிங், ரொம்ப அமைதியாக இருப்பார். ஒரு பெரிய சுவரை பார்த்து சும்மாவே உட்கார்ந்திருப்பார். எந்த பிரச்சனையாக இருந்தாலும் சைலெண்ட்டாகத்தான் இருப்பார்,” என்று திரிஷா கூறினார்.

விஜய்யின் இந்த அமைதியான குணம் சில சமயங்களில் அவரைப் போன்று இருப்பதாகத் தோன்றலாம். ஆனால், உண்மையில் அவர் தனது வேலையில் மிகவும் கவனம் செலுத்துகிறார். படப்பிடிப்பில் கூட, அவர் தனது கதாபாத்திரத்தைப் பற்றியும், படத்தின் வெற்றியைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருப்பார்.விஜய்யின் பதில்

விஜய் திரிஷாவின் கருத்துக்கு பதிலளித்தார். “வேலைங்க, அதைப்பத்தி யோசிப்பேன்,” என்று விஜய் கூறினார்.

விஜய் எப்போதும் தனது வேலையில் தீவிரமாக இருப்பார். அவர் தனது கதாபாத்திரத்திற்காக கடினமாக உழைப்பார். அமைதியாக இருந்தாலும், அவர் எப்போதும் தனது வேலையைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார்.விஜய்யின் பதில்

விஜய் திரிஷாவின் கருத்துக்கு பதிலளித்தார். “வேலைங்க, அதைப்பத்தி யோசிப்பேன்,” என்று விஜய் கூறினார்.

திரிஷாவின் கருத்து

திரிஷா விஜய்யின் அமைதியான குணத்தைப் பற்றி மேலும் கூறினார். “அதெல்லாம் இல்லை, சில சமயம் கண்ணை மூடிக்கிட்டு இருப்பார்,” என்று திரிஷா கூறினார்.

விஜய் சில சமயங்களில் ஓய்வெடுப்பதற்காக கண்களை மூடிக்கொண்டு இருக்கலாம். ஆனால், அவர் எப்போதும் தனது வேலையில் கவனம் செலுத்துகிறார்.

திரிஷா, விஜய் தனது மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார். ஆனால், விஜய் “நான் அப்படியெல்லாம் கிடையாது,” என்று பதிலளித்தார்..

திரிஷாவின் கருத்து ஏன் முக்கியமானது?

திரிஷாவின் கருத்துக்கள் விஜய்யின் ஆளுமையைப் பற்றிய ஒரு புதிய கண்ணோட்டத்தை வழங்குகின்றன. விஜய் அமைதியானவராக இருந்தாலும், அவர் தனது வேலையில் மிகவும் அர்ப்பணிப்புடன் இருக்கிறார் என்பதை திரிஷாவின் கருத்துக்கள் மூலம் நாம் புரிந்து கொள்ள முடியும்.

திரிஷாவின் கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. ரசிகர்கள் பலரும் திரிஷாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

திரிஷா விஜய்யை “போரிங்” என்று கூறியது ஒரு நகைச்சுவையான கருத்து. ஆனால், விஜய்யின் அமைதியான குணம் மற்றும் அவரது அர்ப்பணிப்பு ஆகியவை அவரது வெற்றிக்கு முக்கிய காரணங்களாக இருக்கலாம்.

இயக்குனர் சங்கரின் Game changer திரைப்படத்திற்கு என்ன ஆனது?

 ப்ரோமோஷனுக்காகவே தயாரிப்பாளர் பணத்தை தண்ணியாக செலவு செய்தார். ஷங்கர் கூட பல பேட்டிகள் கொடுத்து படத்தை பிரமோட் செய்தார்.

ஆனாலும் படம் வெளியான பிறகு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் தயாரிப்பாளருக்கு பெரும் தொகை நஷ்டமானது.

420 கோடி வரை செலவு செய்யப்பட்டிருந்த இப்படம் 200 கோடியை கூட தொடவில்லை. படத்திற்கான விமர்சனங்களும் கலவையாக அமைந்தது.

ஓடிடியில் வெளியாகும் ஷங்கரின் கேம் சேஞ்சர்

அது மட்டும் இன்றி சங்கர் பல வருடங்களுக்கு பின் தங்கி இருக்கிறார். இன்னும் அப்டேட் ஆகவில்லை என்ற கருத்துக்களும் எழுந்தது. இப்படி தியேட்டரில் மொக்கை வாங்கிய கேம் சேஞ்சர் டிஜிட்டலுக்கு வருகிறது.

தல அஜித் படத்திற்கு நெருக்கடி !

 விடாமுயற்சி படத்தைத் தொடர்ந்து அஜித்தின் குட் பேட் அக்லி படமும் ரிலீஸ் ஆகவுள்ளது. அடுத்தடுத்து இரண்டு படங்கள் ரிலீஸ் ஆவதால் யார் கண் பட்டது என்று தெரியவில்லை. இப்பொழுது அஜித் படத்திற்கு நெருக்கடி வந்துவிட்டது. இந்த படம் ரிலீசில் சிக்கல் உருவாகியுள்ளது.

ஏப்ரல் 10, இந்த திகதியை இரண்டு படங்கள் கூறி வைத்திருந்தது. அதாவது ஏப்ரல் 14ஆம் திகதி தமிழ் வருடப்பிறப்பு என்பதால் அந்த விடுமுறை நாட்களுக்கு தகுந்தார் போல் அஜித்தின் குட் பேட் அக்லி மற்றும் தனுஷின் இட்லி கடை இரண்டு படங்களும் வெளிவருவதாக இருந்தது.

இரண்டு படங்கள் வருவதால் விநியோகத்தர் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் என அனைவரும் நெருக்கடியில் இருந்தனர். ஒரே நேரத்தில் வெளிவருவதால் தியேட்டர்கள் ஒதுக்குவதில் பிரச்சனை காரணமாக இந்த விஷயத்தை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருந்தனர்.

இப்பொழுது அஜித்தின் குட் பேட் அக்லி இந்த ரேஸில் இருந்து பின்வாங்குவது போல் தெரிகிறது. இதுவரை இந்த படத்தின் சாட்டிலைட் இன்னும் வியாபாரமாகவில்லை. ஏற்கனவே இந்த படத்தின் OTT உரிமையை நெட்பிளிக்ஸ் 95 கோடிகள் கொடுத்து வாங்கியுள்ளது. சாட்டிலைட் வியாபாரத்திற்கு சன் டிவியிடம் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.

ஒருவேளை சன் டிவி இந்த படத்தின் சாட்டிலைட் உரிமைகளை கேட்கிற தொகைக்கு வாங்கிவிட்டால் இது ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆகும். அப்படி இல்லை என்றால் அஜித்தின் பிறந்தநாள் மே 1ஆம் தேதி வருகிறது. அன்று இதை ரிலீஸ் செய்வதற்கு திட்டமிடுகிறார்கள். இப்பொழுது தனுஷின் இட்லி கடைக்கே ரூட் கிளியராக இருக்கிறது.

விஜயின் ஜனநாயகன் முதல் பாடல் ?

 எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‛ஜனநாயகன்'. அவருடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படம் இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில், வருகிற பெப்ரவரி 14ம் திகதி காதலர் தினத்தன்று ‛ஜனநாயகன்' படத்தின் முதல் பாடல் வெளியாக இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே விஜய் நடித்த கத்தி, மாஸ்டர், பீஸ்ட், லியோ போன்ற படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த அனிருத் இந்த படத்திற்கும் இசையமைத்திருப்பதால் இந்த முதல் பாடல் விஜய் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.