'நாடோடிகள்' படத்தின் மூலம் தமிழில் பிரபலமானவர் நடிகை அபிநயா. தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். மலையாள சினிமாவை சேர்ந்த இவர் வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத் திறனாளியாக இருந்தாலும் அவரது நடிப்புத் திறமையால் பலரது பாராட்டுக்களையும் பெற்றவர். தற்போது தமிழில் மூக்குத்தி அம்மன் 2 உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார்.
அபிநயா 15 ஆண்டுகளாக வெகசனா கார்த்திக் என்பவரை காதலித்து வருகிறார். கார்த்திக் ஐதராபாத்தை சேர்ந்தவர். அபிநயா போன்று இவரும் பேச்சு மற்றும் செவித்திறன் சவால் கொண்டவர். சமீபத்தில் இவர்களுக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது. கார்த்திக் போட்டோவையும் சமீபத்தில் தான் வெளியிட்டார் அபிநயா. தொடர்ந்து திருமணம் தொடர்பான நிகழ்வுகள் நடந்து வந்தன.
இந்நிலையில் அபிநயா - வெகசனா கார்த்திக் திருமணம் ஐதராபாத்தில் குடும்ப பாரம்பரிய முறைப்படி நடந்தது. மணமக்கள் இருவரும் பாரம்பரிய உடை அணிந்திருந்தனர். இதுதொடர்பான போட்டோ, வீடியோக்கள் வைரலாகின.