பிரபலங்கள் என்றாலே ஸ்பெஷல் தான், அதிலும் மக்கள் கொண்டாடிய பிரபலங்கள் நிஜத்தில் இணைகிறார்கள் என்றால் அது மக்களுக்கு மிகுந்த சந்தோஷம்.
அப்படி திரையில் பார்த்து ரசித்த ஒரு சூப்பர் ஜோடி தான் இப்போது நிஜத்தில் இணைய உள்ளனர். அவர்கள் யார் என்பது உங்களுக்கே தெரியும், விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா தான்.
படங்களில் நடித்த போது காதல் ஏற்பட தங்களது காதலை ரகசியமாக வைத்துக்கொண்டிருந்தவர்கள் இப்போது தம்பதிகளாக மாற உள்ளனர்.
உதய்பூரில் திருமண கொண்டாட்டங்கள் அட்டகாசமாக நடந்து வருகிறது. சில புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.
