தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் ( Vijay Again Controversy ) குறித்து மீண்டும் சர்ச்சை கிளம்பியுள்ளது.
அவரது முன்னாள் உதவியாளராக இருந்த டி.ஆர். ரமேஷ், ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில் விஜயின் தனிப்பட்ட வாழ்க்கை, குறிப்பாக மனைவி சங்கீதா பற்றியும் பல கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
விஜய்-சங்கீதா காதல் திருமணம் செய்துகொண்டது ரசிகர்களுக்கு புதிய விஷயம் அல்ல. ரசிகையாக இருந்த சங்கீதா, பின்னர் விஜயை காதலித்து, இரு குடும்பங்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
பல ஆண்டுகளாக அமைதியாக இருந்த இந்த தம்பதியரைச் சுற்றி சமீபத்தில் விவாகரத்து வதந்திகள் மற்றும் குற்றச்சாட்டு தகவல்கள் பரவி பரபரப்பை ஏற்படுத்தின.
குறிப்பாக, சங்கீதா விஜய் மீது சில குற்றச்சாட்டுகள் முன்வைத்து சட்டரீதியான நடவடிக்கை எடுத்ததாக வெளியான தகவல்கள் சமூக வலைதளங்களில் தீவிரமாக பேசப்பட்டன. இதுகுறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகாத நிலையில், பல தரப்பிலிருந்து கருத்துக்கள் தொடர்ந்து வெளிவருகின்றன.
இந்த நிலையில், டி.ஆர். ரமேஷ் கூறிய சில தகவல்கள் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளன. அவரது பேட்டியில், சங்கீதா விஜய்க்கு நெருக்கமானது அவருடன் பல வருடங்களாக இருந்த உதவியாளர் ராஜன் மூலமாகத்தான் என அவர் தெரிவித்துள்ளார்.
"ஆரம்பத்தில் ராஜன் தான் இப்படிப்பட்ட பெண் நல்லவர், நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்று விஜயிடம் பேசியவர். ஆனால் திருமணத்திற்குப் பிறகு அந்த ராஜனையே வீட்டிலிருந்து விலக்கி வைத்தது சங்கீதாதான்" என்று அவர் கூறியுள்ளார்.
இதன் மூலம் சங்கீதாவின் குணநலன் பற்றி யோசிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது முதல் சர்ச்சை அல்ல. சில மாதங்களுக்கு முன் டி.ஆர். ரமேஷ் மற்றொரு பேட்டியில், தாம் விஜயிடம் உதவியாளராக இருந்தபோது நடந்த சம்பவங்களை பகிர்ந்திருந்தார்.
ஒரு நாள் விஜய் மிகவும் கோபமாக போனில் பேசிக் கொண்டிருந்தார்.
நான் அவருக்கு சாப்பாடு பரிமாறும் போது, சாப்பாட்டில் ஒரு முடி இருந்ததற்காக என்னை எட்டி மிதித்து கீழே தள்ளிவிட்டார்.
அதற்காக மறுநாளும் மன்னிப்பு கேட்கவில்லை" என்று அவர் கூறியிருந்தார்.
மேலும், தன்னுடைய மகள் திருமணத்திற்கு விஜயை அழைத்தபோது, பல வருடங்களாக அவரிடம் உதவியாளராக வேலை பார்த்த போதும், 2000 ரூபாய் மட்டும் மொய் கொடுக்க சொல்லியதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த தகவல்கள் அப்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தின.
இதற்கிடையில், விஜய் சமீப காலமாக அரசியல் தளத்திலும் அதிக கவனம் பெற்றுள்ளார். தனது அரசியல் பயணத்தை தொடங்கியதிலிருந்து பல்வேறு தரப்பினரிடமிருந்து விமர்சனங்களும் எதிர்ப்புகளும் எழுந்து வருகின்றன. குடும்ப விவகாரம், தனிப்பட்ட குற்றச்சாட்டு, அரசியல் விமர்சனம்-இவை அனைத்தும் ஒரே நேரத்தில் விஜயைச் சுற்றி சுழல்கின்றன.
சங்கீதா தொடர்பான வழக்கு குறித்து இதுவரை விஜய் தரப்பிலோ, சங்கீதா தரப்பிலோ விரிவான விளக்கம் வெளியாகவில்லை. ஆனால், சமூக ஊடகங்களில் இதுகுறித்து பல்வேறு ஊகங்கள் மற்றும் ஆதரவு-எதிர்ப்பு கருத்துகள் தொடர்ந்து பரவி வருகின்றன.
