Thanjavur செங்கிப்பட்டி கூட்டத்தில் விவசாயிகளின் நலன் குறித்துப் பேசிய தவெக தலைவர் விஜய், நெகிழ்ச்சியான ஒரு கருத்தைப் பகிர்ந்து கொண்டார்.
எனக்கு அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால், ஒரு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறக்கவே ஆசைப்படுகிறேன்” என்று அவர் கூறியது அங்கிருந்த டெல்டா பகுதி விவசாயிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
மண்ணையும் மக்களையும் நேசிக்கும் ஒருவராகத் தன்னை முன்னிறுத்திய அவர், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே தனது முதன்மையான நோக்கம் என்பதையும் உணர்த்தினார்.
விவசாயம் மற்றும் விவசாயிகளின் முக்கியத்துவம் பற்றிப் பேசிய விஜய், அவர்கள் படும் இன்னல்களைத் தான் அறிவதாகவும், அவர்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என்றும் உறுதி அளித்தார்.
ஏற்கனவே “திமுக ஒரு தீய சக்தி” என அரசியல் அனலைக் கிளப்பியவர், இந்த “விவசாயக் குடும்பம்” குறித்த பேச்சின் மூலம் டெல்டா மக்களின் மனங்களை வெல்லும் உணர்வுப்பூர்வமான முயற்சியை மேற்கொண்டார்.
விஜய்யின் இந்த விருப்பம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
