நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயிடமிருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ள விடயம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக குற்றம் சாட்டியே சங்கீதா விவாகரத்து கோரியுள்ளார்.
மேலும் தனக்கு ஜீவனாம்ச தொகையை வழங்க வேண்டும் எனவும் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விடயம் இணையத்தில் புயலையே கிளப்பி வருகின்றது.
இந்நிலையில், விஜய் - சங்கீதா திருமண விவாகரத்து வழக்கில் தீர்ப்பு சங்கீதாவுக்கு சாதகமாக அமையும் பட்சத்தில் ஜீவனாசம்சமாக சங்கீதாவுக்கு விஜய் எவ்வளவு தொகையை கொடுக்க வேண்டும் என்ற விடயம் குறித்து இணையத்தில் வைரலாகியுள்ளது.
விஜய் - சங்கீதாவின் 27 ஆண்டு மண வாழ்க்கை முடிவுக்கு வரப்போகும் நிலையில், விஜய்க்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் சங்கீதாவை திட்டிவருகின்றனர்.
ஒரு சாரார் இது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினை இது குறித்து பொது வெளியில் பேசுவது தவறு என சாடிவருகின்றனர்.
இந்த விடயம் இணையத்தில் பெரும் அதிவலைகளை தோற்றுவித்துள்ள நிலையில், விவாகரத்து வழக்கு சங்கீதாவுக்கு சாதகமாக வந்தால், விஜய் எத்தனை கோடியை சங்கீதாவுக்கு ஜீவனாம்சமாக கொடுக்க வேண்டி இருக்கும் என சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
விஜய் தனது சொத்துகளில் 50 சதவீத தொகையை ஜீவனாம்சமாக கொடுக்க வேண்டியிருக்குமா? என்ற கேள்வியும் பரவலாக எழுந்துள்ளது.
இந்திய , ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு - பிரமிளா ஸ்ரீனிவாசன் விவாகரத்து வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் ரூ.15,000 கோடி ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இந்தியாவின் மிக உயர்ந்த விவாகரத்து ஜீவனாம்ச தொகையாக இது அறியப்படுகின்றது.
பாலிவுட் நடிகர் ஹ்ருத்திக் ரோஷன் தனது மனைவியை விவாகராத்து செய்ததில் ரூ.380 கோடியை ஜீவனாம்சமாக கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தகவல்களின் அடிப்படையில், நடிகர் விஜயின் சொத்து மதிப்பு சுமார் 600 கோடிக்கும் மேல் இருக்கும்.இந்நிலையில் இவர் விவாகரத்து உறுதியானால் 50 சதவீத தொகையை ஜீவனாம்சமாக கொடுக்க வேண்டுமா? என்று கேட்டால் இதற்கு நேரடியாக பதில் கொடுத்துவிட முடியாது.
காரணம் இந்தியாவை பொருத்தமட்டில் மனைவியை விவாகரத்து செய்தால், கணவரின் சொத்தில் 50% மனைவிக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்று சட்த்தில் குறிப்பிடப்படவில்லை.
1995-ம் ஆண்டு இந்து திருமணச் சட்டத்தின் கீழ், திருமணத்திற்கு முன்பு ஒருவருக்குச் சொந்தமான சொத்து அல்லது அவரது பெயரில் வாங்கப்பட்ட சொத்து அவருக்குச் சொந்தமானது என்கிறது.
நீதிமன்றி விசாரணைகளில் யார் எவ்வளவு சம்பாதித்தார்கள்? வீட்டை யார் நிர்வகித்தார்கள்? குழந்தைகளின் தேவைகள் என்ன? வாழ்க்கை முறை செலவு எப்படிபட்டது? போன்ற பல விடயங்களை கருத்தில் கொண்டு தான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
எனவே இந்த வழக்கிலும் இத்தனைய விடயங்கள் கருத்தில் கொள்ளப்படும்.
இந்த விடயத்தில் சங்கீதா ஜீவனாம்சமாக எவ்வளவு கேட்கின்றார் என்பதை உறுதிசெய்த பின்னும் முறையான நீதிமன்ற விசாரணைகளின் "நியாயமான மற்றும் பொருத்தமான" தொகையை நிர்ணயிக்க முடியும். இந்த விதிகள் ஒவ்வொரு வழக்குக்கும் மாறுப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
.jpg)