அடத்தியான முடி வளர்ச்சிக்கு சிறந்த கறிவேப்பிலை ஆயுர்வேத எண்ணெய்!


அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது.


ஆனால் அதனை பெற்றுகொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவே உள்ளது.


இந்நிலையில், எவ்வித செயற்கையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இயற்கையான முறையில் நீளமான கூந்தலை எவ்வாறு பெறலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்


கறிவேப்பிலை - 3 கைப்பிடி

தேங்காய் எண்ணெய் - 3 ஸ்பூன்

தயிர் - 2 ஸ்பூன்

முதலில் கறிவேப்பிலையை நன்கு கழுவி உலரவைத்து வெயிலில் நன்கு காயவைத்து எடுத்துக்கொள்ளவும்.

பின் கறிவேப்பிலை நன்கு காய்ந்ததும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து ஒரு கிண்ணத்தில் கறிவேப்பிலை பொடி, தேங்காய் எண்ணெய் மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.

இதற்கடுத்து இவற்றை முடியின் உச்சந்தலை முதல் நுனி வரை நன்கு தடவி ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும்.

ஒரு மணி நேரம் கழித்து மென்மையான ஷாம்பு கொண்டு கூந்தலை அலசிக்கொள்ளலாம்.

இதனை வாரத்திற்கு ஒரு முறை என தொடர்ந்து பயன்படுத்தி வர முடி நன்கு நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.