இன்றைய ராசி பலன்

 



இன்று (11) விருச்சிகம் ராசியில் கேட்டை பின்பு மூலம் நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று கும்ப ராசியில் புதாதித்ய, சதுர்கிரகி யோகம் உருவாகும் நாள். இன்று மேஷ ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. 


மேஷ ராசி பலன் 


மேஷ ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று உங்களுடைய வருமானம் திருப்திகரமாக இருக்கும். பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு அதிகரிக்க கூடிய நாள். நீங்கள் சுப காரியங்கள் மும்முறமாக பங்கேர்ப்பீர்கள். இந்த ராசி அதிபதி லாப ஸ்தானத்தில் சந்ததிப்பது உங்களுக்கு வேலையில் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வுக்கான நல்ல வாய்ப்பை ஏற்படுத்தும். இன்று குரு மிதுனத்தில் வக்ர நிவர்த்தி அடைகிறார். உங்கள் வேலை, வீட்டு வேலைகளை சரியாக திட்டமிட்டு முடிப்பது அவசியம். 


ரிஷப ராசி பலன் 


ரிஷப ராசி சேர்ந்தவர்களுக்கு செல்வம், மகிழ்ச்சி பெறக் கூடிய நாள். இன்று குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். ஒரு பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். அவர்களின் ஆலோசனை உங்கள் செயல்பாடுகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். இன்று மாலை நேரத்தில் உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபடுவீர்கள். உங்களின் புதிய முயற்சிகளில் குறிப்பிடத்தக்க வெற்றியை தரும். இன்று நீங்கள் நிர்ணயித்த இலக்கை அடைய சாதகமான சூழல் நிலவும். 


மிதுன ராசி பலன் 


மிதுன ராசி சேர்ந்தவர்களுக்கு உங்கள் வேலையில் முன்னேற்றமும் உயர் பதவியை அடைய வாய்ப்பு உள்ளது. இன்று உங்கள் பிள்ளைகளிடம் இருந்து நல்ல செய்திகளை பெறுவீர்கள். உங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும். உங்களுக்கு பிடித்தமான உணவுகளை சுவைக்க வாய்ப்பு கிடைக்கும். ஆடம்பரம், ஆடை, ஆபரணங்கள் மீது நாட்டம் குறையும். உங்களுடைய வேலை மற்றும் தொழில் தொடர்பாக சமூக ஊழியர்களின் ஆதரவு மற்றும் பங்கேற்பு பெறுவதற்கு. இன்று எந்த விஷயத்திலும் சோம்பலை கைவிட்டு சுறுசுறுப்பாக செயல்படவும். 


கடக ராசி பலன் 


கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலை அல்லது தொழில் தொடராக பயணம் இருக்குல்ல வாய்ப்பு உண்டு. உங்களுக்கு குழந்தைகளிடமிருந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று ஏதேனும் ஒரு வழிகளில் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். சிலரிடமிருந்து பரிசு கிடைக்க வாய்ப்பு உண்டு.. சில நாட்களாக இருக்கும் கடினமான மன உணர்வு நண்பர்களின் சந்திப்பால் தீரும். இன்று மாணவர்கள் படிப்பிலும், விளையாட்டு போட்டியில் சிறப்பாக செயல்படுவீர்கள். இன்று சரியான அளவில் ஓய்வு மற்றும் தூக்கத்தை எடுத்துக் கொள்வது அவசியம். 


சிம்ம ராசி பலன் 


சிம்ம ராசியை சேர்ந்த பொருட்களுக்கு இன்று வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடத்தும் நிகழ்ச்சியில் ஈடுபடுவீர்கள்.இது உங்களுக்கு மகிழ்ச்சியை தரக்கூடியதாக இருக்கும். உங்கள் தொழில் தொடர்பான முயற்சிகள் வருமானத்தை அதிகரிக்கும். எதிர்பாராத விதமாக அதிக பணம் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உண்டு. இதனால் உங்களுடைய மன உறுதி அதிகரிக்கும். சனி வக்கிர நிறைவு காரணமாக இன்று நீங்கள் சில சிக்கலை சந்திக்க வாய்ப்பு உண்டு. குறிப்பாக செரிமானம் மற்றும் வாயு பிரச்சினைகள் அசௌகரியத்தை ஏற்படுத்தும். அதனால் உங்கள் உணவுப் பழக்கத்தைக் கட்டுப்படுத்துங்கள். 


கன்னி ராசி பலன் 


கன்னி ராசி சேர்ந்தவர்களுக்கு உங்கள் வேலை தொடர்பாக கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும். இன்று நுட்பமான வேலை மற்றும் உங்கள் எழுத்து முன்னேற்றத்தையும் வருமானத்தையும் அதிகரிக்கும். இன்று எந்த சூழ்நிலையிலும் கோபத்தை தவிர்க்கவும். குழந்தைகளின் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். ஏதேனும் ஒரு சொத்து வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உங்கள் சகோதரர்களுடன் இருக்கும் கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். 


துலாம் ராசி பலன் 


துலாம் ராசி சேர்ந்தவர்களுக்கு உங்கள் விருப்பங்கள் நிறைவேற கூடியதாக இருக்கும். இன்று உங்களுடைய பணி பாராட்டை பெற்று தரும். சில விஷயங்கள் உங்களுக்கு சங்கடத்தை தரக்கூடியதாக அமையலாம். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். எதிர்பாராத திடீர் செலவுகள் ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை. இன்று நீங்கள் ஆன்மீகம், இலக்கியம் தொடர்பான விஷயங்களில் மார்க்கம் அதிகரிக்கும். சும்மா சமூக பணி அல்லது நிகழ்வுகளில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டுவீர்கள். 


விருச்சிக ராசி பலன் 


விருச்சிக ராசி சிறந்தவர்களுக்கு இன்று ராசி அதிபதி செவ்வாய் பலத்தை தரும் வகையில் அமர்ந்துள்ளார். இளம் சந்திரனுடன் சேர்ந்து இருப்பதால் இன்று உங்கள் பெற்றோரின் ஆசிர்வாதம் மற்றும் துணை கிடைக்கும். இன்று நீங்கள் சில மாற்றங்கள் செயலை செய்ய வாய்ப்பு உண்டு. இன்று சிலரின் உதவியால் நீண்ட காலமாக உங்களுக்கு வர வேண்டிய பணம் வர வாய்ப்பு உண்டு. இன்று இன்று பிள்ளைகளின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள். 


தனுசு ராசி பலன் 


தனுசு ராசியை சேர்ந்தவர்களுக்கு இன்று குருவின் பார்வை மற்றும், சனியின் அமைப்பு உங்களுக்கு சிரமங்களை தர வாய்ப்பு உண்டு.. வேலைகள் கடின உழைப்பு தேவைப்படும். உங்கள் பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும். சொத்து தொடர்பாக குடும்பத்தில் இருக்கும் தகராறுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்பதால், சூழலை அனுசரித்து செல்லவும். இன்று உங்கள் நிதி நிலை சற்று சங்கடத்தை தரக்கூடியதாக இருக்கும். வரும் நாட்களில் உங்களின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்தவும். இன்று உங்கள் குடும்பத்தினருடன் ஆலோசனை செய்து பெரிய முதலீடு செய்ய திட்டமிடுவீர்கள். 


மகர ராசி பலன் 


மகர ராசியை சேர்ந்தவர்களுக்கு இன்று புதன் மற்றும் ராகுவின் அமைப்பு உங்கள் மனதில் சக்தி மற்றும் மரியாதையை அதிகரிப்பார். இந்த குருவின் அமைப்பை உங்கள் செயல்பாடு, செல்வநிலையை மேம்படுத்துவர். இந்த குடும்பத்தில் உங்கள் புகழ் அதிகரிக்கும். எதிரிகளை எளிதாக முடிக்க முடியும்.இன்று உங்கள் மனதில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். செயல்பாடுகளில் வெற்றி, மகிமையை நல்ல மாற்றங்கள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகளில் நிறைவேறும். 


கும்ப ராசி பலன் 


கும்ப ராசியை சேர்ந்தவர்களுக்கு இன்று வேலையில் கூடுதல் பொறுப்புகள் இதற்கெல்லாம் நேரிடும். ஆன்மீக நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உங்கள் செல்வநிலை அதிகரிக்க கூடிய நாள். இன்று எந்த ஒரு செயலுக்காகவும் உங்கள் மனமில்லை நிதானமாக பராமரிப்பதும், இன்று உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடுகளை விலக்கி நிதானமாக செயல்படுவது அவசியம். இன்று நீங்கள் இதன் ஒரு ஆன்மீக நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். சிலர் புனித யாத்திரை செல்ல திட்டமிடுவார்கள். 


மீன ராசி பலன் 


மீன சேர்ந்தவர்களுக்கு இன்று வேலையில் கூடுதல் பொறுப்பு எதிர்கொள்ள வாய்ப்பு உண்டு. குறிப்பாக ஆன்மீக நடவடிக்கைகளில் அதிக ஈடுபாடு காட்டுகிறார்கள். வருமானத்தை அதிகரிக்க கூடிய நாள். இன்று அதிகப்படியான கோபத்தை எதிர்க்கவும். உங்கள் மனைவியுடன் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய நாள். இன்று புதிய சொத்து வாங்குவது அல்லது விற்பதன் மூலம் லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு. அதே சமயம் முடிவு விஷயங்களில் நிதானத்தை கடைபிடிக்கவும். வணிகத்தில் முதலீடுகளை, தயக்கமின்றி செய்யுங்கள்; அது எதிர்காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.



விஜய்யின் இனிஷியலை தூக்கி எறிந்த மகன்!

 


நடிகர் விஜய் மகன் ஜோசப் சஞ்சய் தற்போது சினிமா உலகில் இயக்குநராக தனது பயணத்தை தொடங்கியிருக்கிறார். அவர் இயக்க உள்ள படத்தின் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், சமீபத்தில் வெளிவந்த ஒரு சிறிய விஷயம் கூட சமூக வலைதளங்களில் பெரிய விவாதமாக மாறியுள்ளது. 'விஜய்' இனிஷியல் இல்லாமல் கையொப்பம் பொதுவாக தமிழ் சினிமாவில் பல நடிகர்களின் குழந்தைகள் தங்களது தந்தையின் பெயரின் முதலெழுத்தை பயன்படுத்துவது வழக்கம். 

 ஆனால் ஜேசன் சஞ்சய் தனது புதிய படத்திற்கான டைட்டில் கார்ட் மற்றும் கையொப்பங்களில் தந்தையின் பெயரை குறிக்கும் எழுத்தை பயன்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. அதற்கு பதிலாக அவர் "Jason Sanjay S" என்ற முறையில் கையொப்பமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதில் வரும் 'S' என்பது அவரது தாய் சங்கீதா (Sangeetha Sornalingam) பெயரை குறிக்கிறது என சமூக வலைதளங்களில் பலர் கூறி வருகின்றனர். குடும்ப சர்ச்சை நடுவில் பேசப்படும் விஷயம் கடந்த சில மாதங்களாக நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா குறித்து பல்வேறு வதந்திகளும் விவாதங்களும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில் ஜேசன் சஞ்சய் தனது தந்தையின் பெயரை பயன்படுத்தாமல் தாயின் பெயரை குறிப்பது போன்ற தகவல் வெளியாகியிருப்பது ரசிகர்கள் மத்தியில் மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால் விஜய்யின் பிள்ளைகள் இருவருமே அவரை விட்டு பிரிந்து அம்மாவுடன் மட்டும்தான் இருக்கிறார்கள். 

அம்மாவுக்கு தான் அவர்களுடைய சப்போர்ட் இருக்கிறது என்று தெரிகிறது என பலருக்கு கருத்து தெரிவித்து வருகிறார்கள். 

தனியாக தொடங்கிய சினிமா பயணம் சஞ்சய் தனது சினிமா பயணத்தை தந்தையின் ஆதரவை பெரிதாக பயன்படுத்தாமல் தொடங்க முயற்சி செய்கிறார் என்று கூறப்படுகிறது. சினிமா படிப்பை வெளிநாட்டில் முடித்த பிறகு அவர் இயக்குநராக உருவாக வேண்டும் என்ற நோக்கத்தில் தனியாகவே முயற்சி செய்து வருகிறார். சில காலமாக அவர் London நகரத்தில் வசித்து வந்ததாகவும், அங்கிருந்து படிப்பு மற்றும் சினிமா தொடர்பான பணிகளில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

லண்டனில் இருந்தாலும் சென்னை அல்லது பிற நகரங்களுக்கு சஞ்சய் பெரும்பாலும் தனியாகவே வந்து சென்று வருகிறார். 

குடும்பத்தின் பெரும் பிரபலத்தையும், தந்தையின் அரசியல் மற்றும் சினிமா பின்னணியையும் பயன்படுத்தாமல் தனது பாதையை தனியாக உருவாக்க வேண்டும் என்பதே அவரது நோக்கம் என்று சிலர் கூறுகின்றனர். இந்த காரணத்தாலேயே அவர் வெளிப்படையாக தனது தந்தையின் பெயரை பயன்படுத்தாமல் இருக்கிறார் என்ற கருத்தும் இணையத்தில் பரவி வருகிறது. 

முதல் படத்திற்கான எதிர்பார்ப்பு இப்போது ஜேசன் சஞ்சய் இயக்க உள்ள முதல் படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே ஆர்வம் அதிகமாக உள்ளது. தந்தை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பதால், அவரது மகன் இயக்குநராக வருவது எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. இந்த நிலையில் 'Jason Sanjay S' என்ற கையொப்பம் வெளியான தகவல், அவரது குடும்ப பின்னணி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய விவாதங்களையும் மீண்டும் சமூக வலைதளங்களில் கிளப்பியுள்ளது. இதனால் நடிகர் விஜயின் குடும்பத்தைச் சுற்றி ஏற்கனவே பேசப்பட்டு வந்த விஷயங்களுடன் சேர்ந்து, ஜேசன் சஞ்சயின் இந்த முடிவும் தற்போது புதிய பேசுபொருளாக மாறியுள்ளது.



மீனத்தில் உச்சம் பெற்ற சுக்கிரன் : சுக்கிர திசையால் செல்வத்தை குவிக்கப்போகும் டாப் 3 ராசிகள்!

 


சுக்கிர பெயர்ச்சியினால் அதிர்ஷ்டத்தின் உச்சத்திற்கு செல்லும் 5 ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

சுக்கிர பெயர்ச்சி

ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன், அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு இவற்றிற்கு காரணகாரராகவும் இருக்கின்றார்.

ரிஷப மற்றும் துலாம் ராசியின் அதிபதியாக இருக்கும் சுக்கிரன் மாதத்திற்கு ஒருமுறை தனது நிலையை மாற்றிக் கொள்கின்றார். ஆனால் மிகவும் அரிதாக ஒரு மாதத்தில் இரண்டுமுறை ராசியினை மாற்றுகின்றார்.

ஒரு நபரின் ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருந்தால், செழிப்பான வாழ்க்கையை வாழ்வாராம். கடந்த 3ம் தேதி குரு பகவான் மீன ராசிக்கு நுழைந்து, மாளவ்ய ராஜயோகம் உருவாகியுள்ள நிலையில், இந்த ராசி சுக்கிரன் உச்சம் பெறும் ராசியாக இருக்கின்றது.

மீன ராசியில் சுக்கிரன் உச்சப்பெற்றிருப்பதால், இதன் தாக்கம் 12 ராசியினருக்கும் காணப்படும். ஆனால் இதில் 5 ராசியினர் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அவர்கள் யார் யார் என இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

மீனம்

மீன ராசியில் முதலாம் வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ள நிலையில், ஏராளமான நன்மைகளை இந்த ராசியினர் பெறுகின்றனர். நீண்ட காலம் நிலுவையில் இந்த வேலைகளும் வெற்றியடையும். திருமணமாகாதவர்கள் நல்லதொரு வரன் கிடைக்கும். வீடு வாகனம் வாங்கும் நிலையும், ஆடம்பரமான பொருட்களை வாங்கும் நிலையும் ஏற்படும்.

கன்னி

கன்னி ராசியின் 7 ஆவது வீட்டில் சுக்கிரன் உச்சமடைவதால்,இவர்களின் பொருளாதார நிலையில் அசுர வளர்ச்சி உண்டாகும். புதிய தொழில் தொடங்குவதற்கான யோம் கூடிவரும்.

சுக்கிரனின் ஆசியால் இதுவரை காலமும் திருமண வாழ்க்கையில் இருந்துவந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபரிகளுக்கு அதிக லாபம் உண்டாகும். வெளிநாட்டு வேலை கிடைப்பதற்கு அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.

பல வழிகளிலும் வருமானம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். குறிப்பாக பரம்பரை சொத்துக்கள் கைக்கு வரக்கூடிய பிராப்தம் உருவாகும்.

மிதுனம்

மிதுன ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் இடம்பெயர்ந்துள்ளதால், இந்த ராசியினரின் வாழ்வில் எதிர்பாராத பல நல்ல திருப்பங்கள் உருவாகப்போகின்றது. தொழில் விடயத்தில் சாதக பலன்கள் கிடைக்கும்.

எதிர்பாராத வகையில் வரும் பண வரவால் மகிழ்ச்சி உண்டாகும் இவர்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குறிப்பாக சுக்கிரன் ஆசியால் ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான நேரத்ததை செலவிடுவதற்கான வாய்ப்புகள் அமையும். கணவன் மனைவி உறவில் இதுவரையில் இருந்து வந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

ஒரே நிற ஆடையில் த்ரிஷாவுடன் வந்த விஜய்

 

நடிகர் விஜய்யின் மனைவி விவாகரத்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது த்ரிஷாவுடன் ஒரே நிற ஆடையில் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வந்த நடிகர் விஜய், தற்போது தனது சினிமா நடிப்பினை விட்டுவிட்டு அரசியலில் கவனம் செலுத்தி வருகின்றார்.

இவரது தவெக கட்சிக்கு மக்களின் ஆதரவு அதிகமாக இருந்து வரும் நிலையில், இவருக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்போது கட்சி மாநாட்டில் வந்து மக்களிடம் பேசிவரும் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை பெரும் சர்ச்சையில் செல்கின்றது.

இவர் திருமணத்திற்கு மீறிய உறவில் வேறொரு பெண்ணுடன் இருப்பதாக மனைவி சங்கீதா விவாகரத்து பதிவு செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது விஜய் த்ரிஷாவுடன் தான் இருக்கின்றார் என்று அரசியல் பிரபலங்கள் முதல் சமூக வலைத்தளங்கள் வரை பேசப்பட்டது தற்போது உண்மையாகியுள்ளது.

ஆம் பிரபல தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷ் மகனின் திருமண நிகழ்ச்சிக்கு விஜய் வருகை தந்துள்ளார். இதில் ஹைலைட் என்னவெனில் அவர் நடிகை த்ரிஷாவையும் தன்னுடன் அழைத்து வந்துள்ளார்.

மேலும் இருவரும் ஒரே நிறத்தில் ஆடையணிந்து வந்து குறித்த திருமண நிகழ்வில் கலந்து கொண்ட காணொளி இணையத்தில் பயங்கர ட்ரெண்டாகி வருகின்றது.

ஏனெனில் இதே போன்று தான் ஜெயம் ரவி மற்றும் கெனிஷா இருவரையும் இணைத்து சமூகவலைத்தளங்களில் பேசிக்கொண்டிருக்கையில், ஒரே நிறத்தில் ஆடையணிந்து திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு தங்களது பழக்கத்தினை உறுதி படுத்தியதுடன், தற்போது திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றனர்.