சுக்கிர பெயர்ச்சியினால் அதிர்ஷ்டத்தின் உச்சத்திற்கு செல்லும் 5 ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சுக்கிர பெயர்ச்சி
ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன், அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு இவற்றிற்கு காரணகாரராகவும் இருக்கின்றார்.
ரிஷப மற்றும் துலாம் ராசியின் அதிபதியாக இருக்கும் சுக்கிரன் மாதத்திற்கு ஒருமுறை தனது நிலையை மாற்றிக் கொள்கின்றார். ஆனால் மிகவும் அரிதாக ஒரு மாதத்தில் இரண்டுமுறை ராசியினை மாற்றுகின்றார்.
ஒரு நபரின் ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருந்தால், செழிப்பான வாழ்க்கையை வாழ்வாராம். கடந்த 3ம் தேதி குரு பகவான் மீன ராசிக்கு நுழைந்து, மாளவ்ய ராஜயோகம் உருவாகியுள்ள நிலையில், இந்த ராசி சுக்கிரன் உச்சம் பெறும் ராசியாக இருக்கின்றது.
மீன ராசியில் சுக்கிரன் உச்சப்பெற்றிருப்பதால், இதன் தாக்கம் 12 ராசியினருக்கும் காணப்படும். ஆனால் இதில் 5 ராசியினர் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அவர்கள் யார் யார் என இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மீனம்
மீன ராசியில் முதலாம் வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ள நிலையில், ஏராளமான நன்மைகளை இந்த ராசியினர் பெறுகின்றனர். நீண்ட காலம் நிலுவையில் இந்த வேலைகளும் வெற்றியடையும். திருமணமாகாதவர்கள் நல்லதொரு வரன் கிடைக்கும். வீடு வாகனம் வாங்கும் நிலையும், ஆடம்பரமான பொருட்களை வாங்கும் நிலையும் ஏற்படும்.
கன்னி
கன்னி ராசியின் 7 ஆவது வீட்டில் சுக்கிரன் உச்சமடைவதால்,இவர்களின் பொருளாதார நிலையில் அசுர வளர்ச்சி உண்டாகும். புதிய தொழில் தொடங்குவதற்கான யோம் கூடிவரும்.
சுக்கிரனின் ஆசியால் இதுவரை காலமும் திருமண வாழ்க்கையில் இருந்துவந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபரிகளுக்கு அதிக லாபம் உண்டாகும். வெளிநாட்டு வேலை கிடைப்பதற்கு அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.
பல வழிகளிலும் வருமானம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். குறிப்பாக பரம்பரை சொத்துக்கள் கைக்கு வரக்கூடிய பிராப்தம் உருவாகும்.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் இடம்பெயர்ந்துள்ளதால், இந்த ராசியினரின் வாழ்வில் எதிர்பாராத பல நல்ல திருப்பங்கள் உருவாகப்போகின்றது. தொழில் விடயத்தில் சாதக பலன்கள் கிடைக்கும்.
எதிர்பாராத வகையில் வரும் பண வரவால் மகிழ்ச்சி உண்டாகும் இவர்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குறிப்பாக சுக்கிரன் ஆசியால் ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான நேரத்ததை செலவிடுவதற்கான வாய்ப்புகள் அமையும். கணவன் மனைவி உறவில் இதுவரையில் இருந்து வந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.
.jpeg)