ஜெர்மனியின் பெர்லின் நகரில் பெண்கள் இனிமேல் பொதுமக்கள் பயன்படுத்தும் நீச்சல் குளங்களில் ஆண்களைப் போலமேல் உடை இல்லாமல் (topless) நீந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பெண்கள் மேல் உடை அணிய வேண்டும் என்ற விதிமுறை பாலின பாகுபாடு எனக் கூறி முன்வைக்கப்பட்ட புகார்களைத் தொடர்ந்து இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாலின சமத்துவக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆண்கள் மார்பைப் மறைக்காமல் நீந்த அனுமதிக்கப்பட்டால், பெண்களுக்கும் அதே உரிமை இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டின் அடிப்படையில் பெர்லின் நகரின் அனைத்து பொதுநீச்சல் குளங்களிலும் இந்த புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மாற்றம் பெண்கள்மீது எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்துவதற்காக அல்ல, அவர்களின் விருப்பத்தை மதிப்பதற்காக மட்டுமே என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
பெண்கள் விரும்பினால் மேல் உடை அணிந்தும், விரும்பாவிட்டால் அணியாமலும் நீந்தலாம். இதன் மூலம் நீண்ட காலமாக இருந்த இரட்டை தரநிலை நீக்கப்பட்டுள்ளது.
