சிறகடிக்க ஆசை, அழகான ஒரு குடும்ப கதை, ஆனால் சாதாரண குடும்ப கதையாக இல்லாமல் எப்போதும் பிரச்சனையாகவே இருந்து வருகிறது.
சில வாரங்களுக்கு முன் வீடு கிடைக்குமா இல்லையா என இருந்தது, பெரிய போராட்டத்திற்கு பிறகு முத்து வீட்டை மீட்டார்.
அடுத்து மனோஜ்-ரோஹினி விவாகரத்து பிரச்சனை தொடங்கியது. ரோஹினி மனோஜிடம் ரூ. 5 லட்சம் கொடுத்தால் விவாகரத்து தரேன் என கூற மனோஜ் பணத்திற்காக திருட்டுத்தனமாக ஒரு கல்யாணத்தை செய்துவிட்டார்.
அந்த பிரச்சனை எப்போது வெடிக்கும் என தெரியவில்லை, அதற்குள் மீனா குழந்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இல்லை என்ற சோகமான கதைக்களம் தொடங்கிவிட்டது.
திருமணம் செய்ததற்காக கனகா அம்மாவிடம் ரூ. 5 லட்சம் பணம் வாங்கிய மனோஜ் வீட்டிற்கு வந்து குடும்பத்திடம் பணம் கிடைத்த விஷயத்தை கூறுகிறார்.
விஜயா ரோஹினிக்கு போன் செய்து முதலில் இந்த விஷயத்தை சொல்லச் சொல்ல மனோஜ் அவருக்கு போன் செய்து பணம் ரெடி நீ வந்து விவாகரத்தில் கையெழுத்து போட்டு பணத்தை வாங்கிக்கொள் என்கிறார்.
மனோஜ் சொன்னதை கேட்டு ரோஹினி அப்படியே உடைந்து போகிறார், ஆனால் இதில் பல திருப்பங்கள் இருப்பதாக தெரிகிறது. என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து காண்போம்.
