லண்டனில் கூத்தடித்த இன்பநிதி மானத்தை காப்பாற்றிய துர்கா ஸ்டாலின். காரணம் தெரியுமா

 



சமீபத்தில், கிங் வுட்ஸ் என்ற யூட்யூப் சேனலுக்கு பேட்டி கொடுத்த பிரபல பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் கருணாநிதியின் கொள்ளு பேரன் இன்பநிதி குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறியதாவது, தமிழக அரசியலில் கருணாநிதி குடும்பத்தின் செல்வாக்கு பல தலைமுறைகளாக தொடர்ந்து வருகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) முன்னாள் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதியின் அரசியல் பயணம் தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

அவரது மகன் மு.க.ஸ்டாலின் தற்போது தமிழக முதலமைச்சராகவும், பேரன் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகவும் பதவி வகிக்கின்றனர். இந்த நிலையில், ஸ்டாலினின் பேரனும், உதயநிதியின் மகனுமான இன்பநிதி, கலைஞர் தொலைக்காட்சியில் முக்கிய பொறுப்பு வகிக்கத் தொடங்கியிருப்பது தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இன்பநிதி, வயது 21-ஐ கூட முழுமையாக நிறைவு செய்யாத இளைஞர். இருப்பினும், கருணாநிதி குடும்பத்தின் அடுத்த தலைமுறை வாரிசாக அவர் தயார்படுத்தப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

கலைஞர் தொலைக்காட்சியில் நிதி நிர்வாகப் பணிகளை மேற்பார்வையிடும் பொறுப்பு இன்பநிதிக்கு வழங்கப்பட்டுள்ளதாக தினமலர் செய்தி தெரிவிக்கிறது. இது, அவரை அரசியல் மற்றும் ஊடகத் துறையில் பொறுப்பு மிக்க இடத்தில் நிறுத்துவதற்கு குடும்பம் எடுக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

இடையில் வெளிநாடு சென்றபோது அங்கே இன்பநிதி அடித்த கூத்துக்கள் எல்லாம் இணைய பக்கங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளாக வெளியானது. இது இன்பநிதியின் பெயரை பொதுமக்கள் மத்தியில் பெரிய அளவில் பங்கப்படுத்தி விட்டது. 

பொதுவாக ஒரு ஆண் வீட்டிலேயே இருக்கிறான் என்றால் அவருடைய மனம் அலைபாய துவங்கிவிடும். அதனால் தான் ஆண்கள் வீட்டிலேயே இருந்தால் கெட்டுப் போய் விடுவார்கள் என்று கூறுவார்கள். 

அதே ஆணுக்கு ஒரு பொறுப்பு.. அல்லது ஒரு வேலை கிடைத்துவிட்டால் அதில் அவனுடைய கவனம் சென்று விட்டால் இது போன்ற சிற்றின்ப விஷயங்களில் அவனுடைய கவனம் வராது என உணர்ந்த ஸ்டாலின் அவர்களுடைய மனைவி துர்கா ஸ்டாலின் தன்னுடைய பேரனை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அவருக்கு ஒரு வேலையை ஒரு பொறுப்பை உருவாக்கி கொடுத்திருக்கிறார்.இன்னும் சொல்லப்போனால் திமுக குடும்பத்தின் மானத்தை காப்பாற்றியுள்ளார். 

கலைஞர் தொலைக்காட்சி, 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று மு.கருணாநிதியால் தொடங்கப்பட்டது. இது திமுகவின் அதிகாரப்பூர்வமற்ற ஊடகக் கருவியாக செயல்படுகிறது. 

இந்த தொலைக்காட்சியில் 60% பங்குகள் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கும், 20% அவரது மகள் கனிமொழிக்கும், மீதமுள்ள 20% மேலாண் இயக்குநர் ஷ்ரத் குமாருக்கும் உள்ளன. 

இந்த ஊடக அமைப்பில் இன்பநிதிக்கு பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது, குடும்பத்தின் செல்வாக்கை அடுத்த தலைமுறைக்கு மாற்றுவதற்கான திட்டமிட்ட முயற்சியாகவே பார்க்கப்படுகிறது

கருணாநிதி குடும்பம் தமிழக அரசியலில் தங்கள் ஆதிக்கத்தை தக்கவைத்துக்கொள்ள எப்போதும் முனைப்பு காட்டி வந்துள்ளது. மு.க.ஸ்டாலினின் அரசியல் பயணம், 1980களில் இளைஞரணி செயலாளராக தொடங்கி, இன்று முதலமைச்சர் பதவி வரை உயர்ந்துள்ளது. 

அதேபோல, உதயநிதி ஸ்டாலின், சினிமா தயாரிப்பு மற்றும் கலைஞர் தொலைக்காட்சி வாயிலாக பொது வாழ்க்கையில் அறிமுகமாகி, பின்னர் அரசியலில் துணை முதலமைச்சராக உயர்ந்தார். இதே பாணியில், இன்பநிதியை இளம் வயதிலேயே பொறுப்பு மிக்க பதவியில் அமர்த்துவது, அவரை எதிர்கால அரசியல் தலைவராக உருவாக்குவதற்கு முன்னோட்டமாக இருக்கலாம

இந்த அவசரத்திற்கு முக்கிய காரணம், குடும்பத்தின் அரசியல் மற்றும் பொருளாதார அதிகாரத்தை இழந்துவிடக்கூடாது என்ற பயம். தமிழக அரசியலில் திமுகவுக்கு போட்டியாக அதிமுக, பாஜக, மற்றும் புதிதாக உருவாகியிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் (விஜய் தலைமையிலான கட்சி) ஆகியவை எழுச்சி பெறுவது, கருணாநிதி குடும்பத்தை எதிர்காலத்திற்கு தயார்படுத்த வேண்டிய அவசியத்தை உருவாக்கியுள்ளது.

இதனால், இன்பநிதியை இப்போதே பொது மக்கள் மற்றும் கட்சி தொண்டர்களுக்கு அறிமுகப்படுத்துவது முக்கியமாக பார்க்கப்படுகிறது.

கலைஞர் தொலைக்காட்சி, திமுகவின் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மானாட மயிலாட, நம்ம குடும்பம் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடையே பிரபலமான இந்த தொலைக்காட்சி, கருணாநிதி குடும்பத்தின் ஊடக செல்வாக்கை பறைசாற்றுகிறது. 

திமுக என்ற கட்சியே முழுக்க முழுக்க ஊடகத்தால் கட்டமைப்பட்டது. பெரியார், கலைஞர் எல்லாம் பத்திரிக்கை நடத்தினார்கள். பத்திரிகை மூலம் தான் கட்சியே உருவானது.

இப்போதும் கூட, ஊடகங்கள் மூலம் தான் திமுக நிலைத்து நிற்கிறது. ஊடகத்துறை திமுகவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று கூறுகிறார்கள். ஆனால், திமுக வளர்ந்ததே ஊடகத்தால் தான். 

எனவே, இன்பநிதிக்கு ஊடகத்தில் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது, அவருக்கு ஊடக மேலாண்மை அனுபவத்தை வழங்குவதோடு, திமுகவின் அரசியல் கருத்துக்களை மக்களிடையே பரப்புவதற்கு அவரை தயார்படுத்தும் முயற்சியாகவும் இருக்கலாம்.

உதயநிதி ஸ்டாலினின் அரசியல் பயணம், இன்பநிதியின் தற்போதைய நிலையை புரிந்துகொள்ள ஒரு முன்மாதிரியாக அமைகிறது. உதயநிதி, சினிமா தயாரிப்பாளராகவும், நடிகராகவும் தனது பொது வாழ்க்கையை தொடங்கினார். 

பின்னர், கலைஞர் தொலைக்காட்சியில் முக்கிய பங்கு வகித்து, திமுக இளைஞரணி செயலாளராக உயர்ந்தார். இன்று அவர் தமிழகத்தின் துணை முதலமைச்சராகவும், விளையாட்டுத் துறை அமைச்சராகவும் பணியாற்றுகிறார். 

இதேபோல், இன்பநிதியும் ஊடகத்தின் வாயிலாக பொது மக்களுக்கு அறிமுகமாகி, படிப்படியாக அரசியல் பொறுப்புகளை ஏற்க தயாராக்கப்படுகிறார்.ஆனால், உதயநிதியின் அரசியல் பயணத்தில் சில சவால்களும் இருந்தன. அவரது இளம் வயது நண்பர்கள் மற்றும் அவரைச் சுற்றியிருந்த "டவுசர் பாய்ஸ்" என்று அழைக்கப்படும் குழுவினரால், அவரது அரசியல் முதிர்ச்சி குறித்து விமர்சனங்கள் எழுந்தன. 

இதேபோல், இன்பநிதியைச் சுற்றியும் இளம் வயது நண்பர்கள் மற்றும் அவரது வாழ்க்கை முறை குறித்து விமர்சனங்கள் எழலாம். இதை தவிர்க்கவே, குடும்பம் அவருக்கு இளம் வயதிலேயே பொறுப்புகளை வழங்கி, அரசியல் மற்றும் ஊடக மேலாண்மையில் பயிற்சி அளிக்க முயல்கிறது.

கருணாநிதி குடும்பம் மீது முக்கிய விமர்சனம், குடும்ப அரசியலை மையப்படுத்தி செயல்படுவது. மு.க.ஸ்டாலின், கனிமொழி, மு.க.அழகிரி, தயாநிதி மாறன் ஆகியோர் அரசியல் மற்றும் ஊடகத் துறைகளில் முக்கிய பங்கு வகித்து வந்துள்ளனர். 

இந்த நிலையில், இன்பநிதியை அடுத்த தலைமுறை வாரிசாக உருவாக்குவது, குடும்பத்தின் செல்வாக்கை தக்கவைப்பதற்கு முக்கியமாக கருதப்படுகிறது. ஆனால், இது கட்சி தொண்டர்கள் மற்றும் பொது மக்களிடையே கலவையான கருத்துக்களை உருவாக்கியுள்ளது.

சிலர், இன்பநிதியின் இளம் வயது மற்றும் அனுபவமின்மையை சுட்டிக்காட்டி, அவருக்கு இவ்வளவு சீக்கிரம் பொறுப்பு வழங்கப்படுவது அவசரமாக தோன்றுவதாக கூறுகின்றனர். 

மேலும், அவரது வெளிநாட்டு கல்வி மற்றும் அது தொடர்பான செலவுகள் குறித்து வதந்திகளும் பரவி வருகின்றன. இவை உண்மையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், இவை குடும்பத்தின் மீதான விமர்சனங்களை மேலும் தீவிரப்படுத்தலாம்.

கருணாநிதி குடும்பத்தின் இந்த அணுகுமுறை, மார்வாடி வணிக குடும்பங்களின் பாரம்பரியத்துடன் ஒப்பிடப்படுகிறது. மார்வாடி குடும்பங்கள், இளம் வயதிலேயே தங்கள் வாரிசுகளுக்கு வணிக பொறுப்புகளை வழங்கி, அவர்களை எதிர்காலத்திற்கு தயார்படுத்துவது வழக்கம்.

இதேபோல், இன்பநிதியை கலைஞர் தொலைக்காட்சியில் பொறுப்பு ஏற்க வைப்பது, அவரை பொறுப்புணர்வுடன் வளர்க்கவும், தவறான பாதைகளில் செல்வதை தடுக்கவும் மேற்கொள்ளப்படும் முயற்சியாக இருக்கலாம்.

தமிழக அரசியலில் திமுகவின் எதிர்காலம், கருணாநிதி குடும்பத்தின் செல்வாக்கை பெரிதும் சார்ந்திருக்கிறது. ஆனால், உதயநிதியைச் சுற்றியுள்ள விமர்சனங்கள், அவரது அரசியல் முதிர்ச்சி மற்றும் நண்பர்கள் குறித்த குற்றச்சாட்டுகள், இன்பநிதியின் எழுச்சியை பாதிக்கலாம்.

இதை உணர்ந்தே, ஸ்டாலின் மற்றும் தயாளு அம்மாள், இன்பநிதியை இளம் வயதிலேயே பொறுப்பு மிக்க இடத்தில் அமரவைக்க முயல்கின்றனர். மேலும், திமுகவின் கூட்டணி கட்சிகளிடம், உதயநிதியை "எதிர்கால தலைவர்" என்று அறிமுகப்படுத்துவது போல, இன்பநிதியையும் படிப்படியாக முன்னிறுத்துவதற்கு திட்டமிடப்படுகிறது.

கருணாநிதி குடும்பத்தின் அரசியல் வாரிசு மரபு, தமிழக அரசியலில் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. இன்பநிதியை கலைஞர் தொலைக்காட்சியில் பொறுப்பு வகிக்க வைப்பது, அவரை எதிர்கால அரசியல் தலைவராக உருவாக்குவதற்கு முதல் படியாக அமைகிறது.

இருப்பினும், இந்த அவசரமான முயற்சிகள், கட்சி தொண்டர்கள் மற்றும் பொது மக்களிடையே கலவையான எதிர்வினைகளை உருவாக்கலாம். எதிர்காலத்தில், இன்பநிதியின் செயல்பாடுகள் மற்றும் அவரது அரசியல் முதிர்ச்சி, திமுகவின் அடுத்த தலைமுறை வாரிசாக அவரது இடத்தை உறுதிப்படுத்தும்.



இயக்குனர் சங்கரின் Game changer திரைப்படத்திற்கு என்ன ஆனது?

 ப்ரோமோஷனுக்காகவே தயாரிப்பாளர் பணத்தை தண்ணியாக செலவு செய்தார். ஷங்கர் கூட பல பேட்டிகள் கொடுத்து படத்தை பிரமோட் செய்தார்.

ஆனாலும் படம் வெளியான பிறகு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் தயாரிப்பாளருக்கு பெரும் தொகை நஷ்டமானது.

420 கோடி வரை செலவு செய்யப்பட்டிருந்த இப்படம் 200 கோடியை கூட தொடவில்லை. படத்திற்கான விமர்சனங்களும் கலவையாக அமைந்தது.

ஓடிடியில் வெளியாகும் ஷங்கரின் கேம் சேஞ்சர்

அது மட்டும் இன்றி சங்கர் பல வருடங்களுக்கு பின் தங்கி இருக்கிறார். இன்னும் அப்டேட் ஆகவில்லை என்ற கருத்துக்களும் எழுந்தது. இப்படி தியேட்டரில் மொக்கை வாங்கிய கேம் சேஞ்சர் டிஜிட்டலுக்கு வருகிறது.

தனது முன்னாள் காதலி திரிசாவையும் சிம்புவையும் பற்றி பேசிய ராணா

 தெலுங்கு நடிகர் ராணாவும், த்ரிஷாவும் காதலித்ததாக முன்பு பல ஆண்டுகளாக பேசப்பட்டது. சென்னையில் த்ரிஷா வீட்டு முகவரி மட்டும் தான் தெரியும் என ராணா கூட நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார். இருவரும் சின்சியராக காதலிக்கிறார்கள், திருமணம் செய்து கொள்வார்கள் என பேச்சாக கிடந்தது. 

ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.த்ரிஷாவோ இன்னும் சிங்கிளாக இருக்கிறார். ராணாவோ மிஹீகா பஜாஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். த்ரிஷாவும் விரைவில் திருமணம் செய்து கொண்டு செட்டிலாக வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.த்ரிஷாவுக்கு விவாகரத்தில் நம்பிக்கை இல்லை. 

அதனால் அவசரப்பட்டு யாரையாவது திருமணம் செய்து கொண்டு அந்த வாழ்க்கை பிடிக்கவில்லை என விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்ற வாசலை மிதிக்க அவர் தயாராக இல்லை. அதனால் தன்னை மாறச் சொல்லாமல் அப்படியே ஏற்றுக்கொள்ளும் நபருக்காக காத்திருக்கிறார் த்ரிஷா.

இந்நிலையில் த்ரிஷாவை காதலித்ததை ராணா ஒரு முறை ஒப்புக் கொண்டது பற்றி தற்போது பேசப்படுகிறது. பிரபல பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் தொகுத்து வழங்கி வரும் காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் முன்பு கலந்து கொண்ட ராணா த்ரிஷா பற்றி கூறியதாவது, 10 ஆண்டுகளுக்கும் மேலாக த்ரிஷா என் தோழியாக இருந்து வருகிறார். நாங்கள் பல காலமாக நண்பர்கள், டேட் கூட செய்தோம். ஆனால் டேட்டிங் ஒர்க்அவுட் ஆகவில்லை என்றார்.

த்ரிஷாவை காதலித்ததாக பேசப்பட்டபோதும் சரி, பிரேக்கப் ஆன போதும் சரி அது பற்றி பேசாத ராணா, கரண் ஜோஹர் நிகழ்ச்சியில் பேசியது பலரின் கவனத்தையும் ஈர்த்தது. எப்பொழுதுமே தன் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேச விரும்பாத த்ரிஷாவோ ராணா விவகாரம் பற்றி பேசியதே இல்லை.

இந்நிலையில் சிம்புவும் சிங்கிளாக இருக்கிறார், த்ரிஷாவும் சிங்கிளாக இருக்கிறார். இருவருக்குமே விவாகரத்து மீது நம்பிக்கை இல்லை. அதனால் சிம்புவும், த்ரிஷாவும் திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்குமே என ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள்.