சீதாவுடனான விவாகரத்துக்கு பின்னர்.. முதல் முதலாக மனம் திறந்த பார்த்திபன்


நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டு இருப்பவர் தான் பார்த்திபன் ராதாகிருஷ்ணன். 

இவர் தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்புகளுக்கு எப்போது பெயர் பெற்றவராக ஜொலித்து வருகிறார். தொடர்ந்து தனது படங்களை தமிழ்சினிமா வேகமாக சென்று கொண்டு இருக்கும் திசையில் செல்லாமல், இப்படியும் ஒரு வகையான சினிமா உள்ளது என தொடர்ந்து ரசிகர்களுக்கு தெரிவித்து வருகிறார், இவர் நடிகை சீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் அவர்களுக்கு விவாகரத்து ஏற்பட்டது. இந்நிலையில் அவர் தான் ஏன் மறுமணம் செய்து கொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

பார்த்திபன் கடந்த 1989 ஆம் ஆண்டு தனது முதல் படமான புதிய பாதை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சீதா. இவர்கள் இருவருக்கும் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட பழக்கம் காதலாக மாற, 1990ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் இருவரும், 11 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தார்கள். இவர்களுக்கு கீர்த்தனா, ராக்கி மற்றும் அபிநயா என மூன்று குழந்தைகள் உள்ளார்கள். இவர்கள் இருவரும் 2001 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். அதன் பின்னர் பார்த்திபன் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவில்லை. அதேபோல் சீதாவும் மறுமணம் செய்து கொள்ளவில்லை.

இந்நிலையில், பார்த்திபன் சீதாவுடனான மணமுறிவுக்குப் பின்னர் அவர் ஏன் மறுமணம் செய்து கொள்ளவில்லை என்ற காரணத்தைத் தெரிவித்துள்ளார். இது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. அதாவது, இது தொடர்பாக அவர் பேசும்போது, " சீதாவுக்கு பிறகு யாரையும் என் மனைவியாக ஏற்க முடியவில்லை என்பதால் மீண்டும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவரைப் பிரிந்த பின் அவரது தாயார் இறப்பின் போதே அவரை கடைசியாக சந்தித்தேன். இந்த் வேகமான உலகில் உறவுகள் நிலையற்றதாக இருப்பதால், அதனுடன் பயணிக்காமல் அதற்கு பதிலாக நினைவுகளுடன் பயணிக்கத் தொடங்கி விட்டேன். இதுவும் ஒருவிதமான காதலின் வடிவம்" எனத் தெரிவித்துள்ளார். பார்த்திபன் இவ்வாறு கூறியுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.




யாழ்ப்பாணத்தில் சிவகார்த்திகேயனின் பராசக்தி படப்பிடிப்பு

 அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் நடிகர் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் உச்சத்திற்கு சென்றுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி என இரு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் இந்தி திணிப்பு எதிர்ப்பை கதைக்களமாக கொண்டு உருவாகி வரும் திரைப்படம்தான் பராசக்தி.

நடிகர் ரவி மோகன் இப்படத்தில் வில்லனாக நடிக்க, அதர்வா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்

அடுத்தக்கட்ட படப்பிடிப்பு,

தமிழ்நாட்டில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இலங்கையில் துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக, அடுத்த வாரம் படக்குழு இலங்கை செல்கின்றனர். அங்கு, யாழ்ப்பாணம் நூலகம் எரிந்த சம்பவத்தை நினைவுப்படுத்தும் விதமான காட்சிகளை எடுக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.  


  

கூலி படப்பிடிப்பிற்காக சென்னை வந்த நடிகை ஸ்ருதிஹாசன்

 ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் புதிய படம் "கூலி." 

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் ஏற்கனவே சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்.அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குகின்றனர்.


 ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு சிகிடு வைப் என்ற பாடலின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டது. இந்நிலையில் ஸ்ருதிஹாசன் கூலி படப்பிடிப்பிற்காக இன்று சென்னை வந்தார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

விஜய் இதை கண்டிப்பா மாற்றிக்கொள்ள வேண்டும்..! ரகசியம் உடைத்த நடிகை திரிஷா..!

 தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் திரிஷா, அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தாலும், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் லீட் ரோலில் நடித்து வருகிறார்.அவர் நடிப்பில் அஜித்தின் “விடாமுயற்சி” வரும் 6 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், திரிஷா நடிகர் விஜய் குறித்து பேசிய பேட்டி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

விஜய்யின் அமைதி

திரிஷா விஜய்யை “போரிங்” என்று கூறியதற்கான காரணத்தை விளக்கினார். “என்னை படப்பிடிப்பில் டீஸ் செய்வது சிம்புதான், ஆனால் விஜய், ரொம்ப போரிங், ரொம்ப அமைதியாக இருப்பார். ஒரு பெரிய சுவரை பார்த்து சும்மாவே உட்கார்ந்திருப்பார். எந்த பிரச்சனையாக இருந்தாலும் சைலெண்ட்டாகத்தான் இருப்பார்,” என்று திரிஷா கூறினார்.

விஜய்யின் இந்த அமைதியான குணம் சில சமயங்களில் அவரைப் போன்று இருப்பதாகத் தோன்றலாம். ஆனால், உண்மையில் அவர் தனது வேலையில் மிகவும் கவனம் செலுத்துகிறார். படப்பிடிப்பில் கூட, அவர் தனது கதாபாத்திரத்தைப் பற்றியும், படத்தின் வெற்றியைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருப்பார்.விஜய்யின் பதில்

விஜய் திரிஷாவின் கருத்துக்கு பதிலளித்தார். “வேலைங்க, அதைப்பத்தி யோசிப்பேன்,” என்று விஜய் கூறினார்.

விஜய் எப்போதும் தனது வேலையில் தீவிரமாக இருப்பார். அவர் தனது கதாபாத்திரத்திற்காக கடினமாக உழைப்பார். அமைதியாக இருந்தாலும், அவர் எப்போதும் தனது வேலையைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார்.விஜய்யின் பதில்

விஜய் திரிஷாவின் கருத்துக்கு பதிலளித்தார். “வேலைங்க, அதைப்பத்தி யோசிப்பேன்,” என்று விஜய் கூறினார்.

திரிஷாவின் கருத்து

திரிஷா விஜய்யின் அமைதியான குணத்தைப் பற்றி மேலும் கூறினார். “அதெல்லாம் இல்லை, சில சமயம் கண்ணை மூடிக்கிட்டு இருப்பார்,” என்று திரிஷா கூறினார்.

விஜய் சில சமயங்களில் ஓய்வெடுப்பதற்காக கண்களை மூடிக்கொண்டு இருக்கலாம். ஆனால், அவர் எப்போதும் தனது வேலையில் கவனம் செலுத்துகிறார்.

திரிஷா, விஜய் தனது மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார். ஆனால், விஜய் “நான் அப்படியெல்லாம் கிடையாது,” என்று பதிலளித்தார்..

திரிஷாவின் கருத்து ஏன் முக்கியமானது?

திரிஷாவின் கருத்துக்கள் விஜய்யின் ஆளுமையைப் பற்றிய ஒரு புதிய கண்ணோட்டத்தை வழங்குகின்றன. விஜய் அமைதியானவராக இருந்தாலும், அவர் தனது வேலையில் மிகவும் அர்ப்பணிப்புடன் இருக்கிறார் என்பதை திரிஷாவின் கருத்துக்கள் மூலம் நாம் புரிந்து கொள்ள முடியும்.

திரிஷாவின் கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. ரசிகர்கள் பலரும் திரிஷாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

திரிஷா விஜய்யை “போரிங்” என்று கூறியது ஒரு நகைச்சுவையான கருத்து. ஆனால், விஜய்யின் அமைதியான குணம் மற்றும் அவரது அர்ப்பணிப்பு ஆகியவை அவரது வெற்றிக்கு முக்கிய காரணங்களாக இருக்கலாம்.

இயக்குனர் சங்கரின் Game changer திரைப்படத்திற்கு என்ன ஆனது?

 ப்ரோமோஷனுக்காகவே தயாரிப்பாளர் பணத்தை தண்ணியாக செலவு செய்தார். ஷங்கர் கூட பல பேட்டிகள் கொடுத்து படத்தை பிரமோட் செய்தார்.

ஆனாலும் படம் வெளியான பிறகு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் தயாரிப்பாளருக்கு பெரும் தொகை நஷ்டமானது.

420 கோடி வரை செலவு செய்யப்பட்டிருந்த இப்படம் 200 கோடியை கூட தொடவில்லை. படத்திற்கான விமர்சனங்களும் கலவையாக அமைந்தது.

ஓடிடியில் வெளியாகும் ஷங்கரின் கேம் சேஞ்சர்

அது மட்டும் இன்றி சங்கர் பல வருடங்களுக்கு பின் தங்கி இருக்கிறார். இன்னும் அப்டேட் ஆகவில்லை என்ற கருத்துக்களும் எழுந்தது. இப்படி தியேட்டரில் மொக்கை வாங்கிய கேம் சேஞ்சர் டிஜிட்டலுக்கு வருகிறது.

தனது முன்னாள் காதலி திரிசாவையும் சிம்புவையும் பற்றி பேசிய ராணா

 தெலுங்கு நடிகர் ராணாவும், த்ரிஷாவும் காதலித்ததாக முன்பு பல ஆண்டுகளாக பேசப்பட்டது. சென்னையில் த்ரிஷா வீட்டு முகவரி மட்டும் தான் தெரியும் என ராணா கூட நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார். இருவரும் சின்சியராக காதலிக்கிறார்கள், திருமணம் செய்து கொள்வார்கள் என பேச்சாக கிடந்தது. 

ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.த்ரிஷாவோ இன்னும் சிங்கிளாக இருக்கிறார். ராணாவோ மிஹீகா பஜாஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். த்ரிஷாவும் விரைவில் திருமணம் செய்து கொண்டு செட்டிலாக வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.த்ரிஷாவுக்கு விவாகரத்தில் நம்பிக்கை இல்லை. 

அதனால் அவசரப்பட்டு யாரையாவது திருமணம் செய்து கொண்டு அந்த வாழ்க்கை பிடிக்கவில்லை என விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்ற வாசலை மிதிக்க அவர் தயாராக இல்லை. அதனால் தன்னை மாறச் சொல்லாமல் அப்படியே ஏற்றுக்கொள்ளும் நபருக்காக காத்திருக்கிறார் த்ரிஷா.

இந்நிலையில் த்ரிஷாவை காதலித்ததை ராணா ஒரு முறை ஒப்புக் கொண்டது பற்றி தற்போது பேசப்படுகிறது. பிரபல பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் தொகுத்து வழங்கி வரும் காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் முன்பு கலந்து கொண்ட ராணா த்ரிஷா பற்றி கூறியதாவது, 10 ஆண்டுகளுக்கும் மேலாக த்ரிஷா என் தோழியாக இருந்து வருகிறார். நாங்கள் பல காலமாக நண்பர்கள், டேட் கூட செய்தோம். ஆனால் டேட்டிங் ஒர்க்அவுட் ஆகவில்லை என்றார்.

த்ரிஷாவை காதலித்ததாக பேசப்பட்டபோதும் சரி, பிரேக்கப் ஆன போதும் சரி அது பற்றி பேசாத ராணா, கரண் ஜோஹர் நிகழ்ச்சியில் பேசியது பலரின் கவனத்தையும் ஈர்த்தது. எப்பொழுதுமே தன் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேச விரும்பாத த்ரிஷாவோ ராணா விவகாரம் பற்றி பேசியதே இல்லை.

இந்நிலையில் சிம்புவும் சிங்கிளாக இருக்கிறார், த்ரிஷாவும் சிங்கிளாக இருக்கிறார். இருவருக்குமே விவாகரத்து மீது நம்பிக்கை இல்லை. அதனால் சிம்புவும், த்ரிஷாவும் திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்குமே என ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள்.



விஜயின் ஜனநாயகன் முதல் பாடல் ?

 எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‛ஜனநாயகன்'. அவருடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படம் இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில், வருகிற பெப்ரவரி 14ம் திகதி காதலர் தினத்தன்று ‛ஜனநாயகன்' படத்தின் முதல் பாடல் வெளியாக இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே விஜய் நடித்த கத்தி, மாஸ்டர், பீஸ்ட், லியோ போன்ற படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த அனிருத் இந்த படத்திற்கும் இசையமைத்திருப்பதால் இந்த முதல் பாடல் விஜய் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.