YouTube இல் சாதனை படைத்த நடிகர் விஜய்யின் பாடல்!


அரபிக் குத்து பாடல் youtube-ல் 70 கோடி பார்வைகளை கடந்துள்ளது நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவி ஆன விமர்சனங்களை பெற்றிருந்தாலும் ஓரளவு வெற்றி பெற்றது. 

பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களை கவரவில்லை என்றாலும் அனிருத்தின் பாடல்கள் அனைத்தும் பெரிய அளவில் வெற்றியை பெற்றன.

குறிப்பாக அரபிக்குத்து உலகளவில் பிரபலமானது. 

அளவில் பிரபலங்கள் பலரும் அரபிக் குத்து பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ பகிர்ந்தனர் சில கிரிக்கெட் வீரர்களும் அரபிக் குத்துப் பாடலுக்கு நடனமாடிய வீடியோக்களும் வைரலாகின.

அரபி குத்து பாடலை சிவகார்த்திகேயன் எழுதிய அனிருத் மற்றும் யோனிதா காந்தி இருவர் இணைந்து பாடியிருந்தனர். 

ஜானி மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றி இருந்தார் இந்த நிலையில் இப்பாடல் யூடியூபில் 700 மில்லியன் பார்வைகளை கடந்து அசத்தியுள்ளது. 

இதற்கு முன்பாக நடிகர் தனுஷின் ரவுடி பேபி பாடலே இதுவரை youtubeல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் இதை கண்டிப்பா மாற்றிக்கொள்ள வேண்டும்..! ரகசியம் உடைத்த நடிகை திரிஷா..!

 தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் திரிஷா, அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தாலும், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் லீட் ரோலில் நடித்து வருகிறார்.அவர் நடிப்பில் அஜித்தின் “விடாமுயற்சி” வரும் 6 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், திரிஷா நடிகர் விஜய் குறித்து பேசிய பேட்டி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

விஜய்யின் அமைதி

திரிஷா விஜய்யை “போரிங்” என்று கூறியதற்கான காரணத்தை விளக்கினார். “என்னை படப்பிடிப்பில் டீஸ் செய்வது சிம்புதான், ஆனால் விஜய், ரொம்ப போரிங், ரொம்ப அமைதியாக இருப்பார். ஒரு பெரிய சுவரை பார்த்து சும்மாவே உட்கார்ந்திருப்பார். எந்த பிரச்சனையாக இருந்தாலும் சைலெண்ட்டாகத்தான் இருப்பார்,” என்று திரிஷா கூறினார்.

விஜய்யின் இந்த அமைதியான குணம் சில சமயங்களில் அவரைப் போன்று இருப்பதாகத் தோன்றலாம். ஆனால், உண்மையில் அவர் தனது வேலையில் மிகவும் கவனம் செலுத்துகிறார். படப்பிடிப்பில் கூட, அவர் தனது கதாபாத்திரத்தைப் பற்றியும், படத்தின் வெற்றியைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருப்பார்.விஜய்யின் பதில்

விஜய் திரிஷாவின் கருத்துக்கு பதிலளித்தார். “வேலைங்க, அதைப்பத்தி யோசிப்பேன்,” என்று விஜய் கூறினார்.

விஜய் எப்போதும் தனது வேலையில் தீவிரமாக இருப்பார். அவர் தனது கதாபாத்திரத்திற்காக கடினமாக உழைப்பார். அமைதியாக இருந்தாலும், அவர் எப்போதும் தனது வேலையைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார்.விஜய்யின் பதில்

விஜய் திரிஷாவின் கருத்துக்கு பதிலளித்தார். “வேலைங்க, அதைப்பத்தி யோசிப்பேன்,” என்று விஜய் கூறினார்.

திரிஷாவின் கருத்து

திரிஷா விஜய்யின் அமைதியான குணத்தைப் பற்றி மேலும் கூறினார். “அதெல்லாம் இல்லை, சில சமயம் கண்ணை மூடிக்கிட்டு இருப்பார்,” என்று திரிஷா கூறினார்.

விஜய் சில சமயங்களில் ஓய்வெடுப்பதற்காக கண்களை மூடிக்கொண்டு இருக்கலாம். ஆனால், அவர் எப்போதும் தனது வேலையில் கவனம் செலுத்துகிறார்.

திரிஷா, விஜய் தனது மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார். ஆனால், விஜய் “நான் அப்படியெல்லாம் கிடையாது,” என்று பதிலளித்தார்..

திரிஷாவின் கருத்து ஏன் முக்கியமானது?

திரிஷாவின் கருத்துக்கள் விஜய்யின் ஆளுமையைப் பற்றிய ஒரு புதிய கண்ணோட்டத்தை வழங்குகின்றன. விஜய் அமைதியானவராக இருந்தாலும், அவர் தனது வேலையில் மிகவும் அர்ப்பணிப்புடன் இருக்கிறார் என்பதை திரிஷாவின் கருத்துக்கள் மூலம் நாம் புரிந்து கொள்ள முடியும்.

திரிஷாவின் கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. ரசிகர்கள் பலரும் திரிஷாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

திரிஷா விஜய்யை “போரிங்” என்று கூறியது ஒரு நகைச்சுவையான கருத்து. ஆனால், விஜய்யின் அமைதியான குணம் மற்றும் அவரது அர்ப்பணிப்பு ஆகியவை அவரது வெற்றிக்கு முக்கிய காரணங்களாக இருக்கலாம்.

தனது முன்னாள் காதலி திரிசாவையும் சிம்புவையும் பற்றி பேசிய ராணா

 தெலுங்கு நடிகர் ராணாவும், த்ரிஷாவும் காதலித்ததாக முன்பு பல ஆண்டுகளாக பேசப்பட்டது. சென்னையில் த்ரிஷா வீட்டு முகவரி மட்டும் தான் தெரியும் என ராணா கூட நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார். இருவரும் சின்சியராக காதலிக்கிறார்கள், திருமணம் செய்து கொள்வார்கள் என பேச்சாக கிடந்தது. 

ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.த்ரிஷாவோ இன்னும் சிங்கிளாக இருக்கிறார். ராணாவோ மிஹீகா பஜாஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். த்ரிஷாவும் விரைவில் திருமணம் செய்து கொண்டு செட்டிலாக வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.த்ரிஷாவுக்கு விவாகரத்தில் நம்பிக்கை இல்லை. 

அதனால் அவசரப்பட்டு யாரையாவது திருமணம் செய்து கொண்டு அந்த வாழ்க்கை பிடிக்கவில்லை என விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்ற வாசலை மிதிக்க அவர் தயாராக இல்லை. அதனால் தன்னை மாறச் சொல்லாமல் அப்படியே ஏற்றுக்கொள்ளும் நபருக்காக காத்திருக்கிறார் த்ரிஷா.

இந்நிலையில் த்ரிஷாவை காதலித்ததை ராணா ஒரு முறை ஒப்புக் கொண்டது பற்றி தற்போது பேசப்படுகிறது. பிரபல பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் தொகுத்து வழங்கி வரும் காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் முன்பு கலந்து கொண்ட ராணா த்ரிஷா பற்றி கூறியதாவது, 10 ஆண்டுகளுக்கும் மேலாக த்ரிஷா என் தோழியாக இருந்து வருகிறார். நாங்கள் பல காலமாக நண்பர்கள், டேட் கூட செய்தோம். ஆனால் டேட்டிங் ஒர்க்அவுட் ஆகவில்லை என்றார்.

த்ரிஷாவை காதலித்ததாக பேசப்பட்டபோதும் சரி, பிரேக்கப் ஆன போதும் சரி அது பற்றி பேசாத ராணா, கரண் ஜோஹர் நிகழ்ச்சியில் பேசியது பலரின் கவனத்தையும் ஈர்த்தது. எப்பொழுதுமே தன் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேச விரும்பாத த்ரிஷாவோ ராணா விவகாரம் பற்றி பேசியதே இல்லை.

இந்நிலையில் சிம்புவும் சிங்கிளாக இருக்கிறார், த்ரிஷாவும் சிங்கிளாக இருக்கிறார். இருவருக்குமே விவாகரத்து மீது நம்பிக்கை இல்லை. அதனால் சிம்புவும், த்ரிஷாவும் திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்குமே என ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள்.



விஜயின் ஜனநாயகன் முதல் பாடல் ?

 எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‛ஜனநாயகன்'. அவருடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படம் இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில், வருகிற பெப்ரவரி 14ம் திகதி காதலர் தினத்தன்று ‛ஜனநாயகன்' படத்தின் முதல் பாடல் வெளியாக இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே விஜய் நடித்த கத்தி, மாஸ்டர், பீஸ்ட், லியோ போன்ற படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த அனிருத் இந்த படத்திற்கும் இசையமைத்திருப்பதால் இந்த முதல் பாடல் விஜய் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.