நமிதாவின் போதை உலகம்; நடிகரின் தீராத ஆசை; சீரழிந்து போன சினிமா..

 


மூத்த பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன், Kingwoods யூட்யூப் சேனலில் அளித்த பேட்டியில், தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கோகைன் விவகாரம் மற்றும் அதன் அரசியல் பின்னணி குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டார். 


இந்த விவகாரத்தில் அதிமுக முன்னாள் நிர்வாகி அஜய் வாண்டையார் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த வழக்கு பணப் பரிவர்த்தனை, போதைப்பொருள் விநியோகம் மற்றும் அரசியல் செல்வாக்கு ஆகியவற்றின் கலவையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

பாண்டியனின் கூற்றுப்படி, சென்னை ஈசிஆரில் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலப் பரிவர்த்தனை இந்த விவகாரத்தின் மையமாக உள்ளது. இந்த நிலத்தை வாங்கியவர்கள் திமுகவைச் சேர்ந்த டி.ஆர்.பாலு குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும், விற்பவர்கள் அதிமுகவைச் சேர்ந்த புதிய ராஜ்யசபா உறுப்பினர் தனபால் தரப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. 


இந்தப் பரிவர்த்தனையில் ஒரு கோடி ரூபாய் கமிஷனாக அஜய் வாண்டையார் குழு பெற்றதாகவும், இதில் அதிமுகவின் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுனுக்கு நெருக்கமான பிரசாத் என்ற நபர் முக்கிய பங்கு வகித்ததாகவும் பாண்டியன் குறிப்பிட்டார்.


அஜய் வாண்டையார் கைது, ஆளும் கட்சியின் செல்வாக்கு மற்றும் அரசியல் பழிவாங்கல் நோக்கத்துடன் நடந்ததாக பாண்டியன் சுட்டிக்காட்டினார். "ஆளுங்கட்சி செல்வாக்கு இல்லாமல் காவல்துறை இவ்வளவு விரைவாக நடவடிக்கை எடுக்காது," என்று அவர் கூறினார். 


மேலும், இந்த விவகாரத்தில் பிரசாத் என்ற நபர் கோகைன் வியாபாரத்தில் ஈடுபட்டதாகவும், அவரது கூற்றுப்படி, கோகைன் விற்பனை அவரது "பகுதி நேர தொழிலாக" இருந்ததாகவும் தெரிவித்தார். 


இந்த கோகைன் வியாபாரம், சென்னை ஈசிஆரில் நடைபெறும் பிரபல நடிகர்-நடிகைகளின் பார்ட்டிகளுடன் தொடர்புடையது என்றும், இதில் பல லட்சம் ரூபாய் புழங்குவதாகவும் பாண்டியன் வெளிப்படுத்தினார்.


கோகைன் விவகாரம் திரைத்துறையில் ஆழமாகப் பரவியுள்ளதாகவும், இது கோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் வரை நீண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 


"கோகைன் பயன்பாடு நடிகர்களுக்கு உல்லாச வாழ்க்கைக்கு ஒரு கருவியாக உள்ளது. இது 15 நாள் வரை உடலில் வீரியத்துடன் இருக்கும், மேலும் ரத்தப் பரிசோதனையில் 45 நாள் வரை கண்டறியப்படும்," என்று அவர் விளக்கினார். 


இந்தப் பழக்கம், சினிமா ஆசையில் வரும் இளம் பெண்களை பண்ணை வீடுகளுக்கு அழைத்து, அவர்களுடன் உல்லாசமாக இருக்கும் நடிகர்களின் வாழ்க்கை முறையுடன் தொடர்புடையது என்றும் அவர் கூறினார்.இந்த விவகாரத்தில் காவல்துறையின் பங்கு குறித்து பாண்டியன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். 

காவல்துறைக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டால், 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் கஞ்சா மற்றும் கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியும். ஆனால், அரசியல் செல்வாக்கு காரணமாக, பின்னணி இல்லாதவர்கள் மட்டுமே தண்டிக்கப்படுகின்றனர்," என்று அவர் தெரிவித்தார். 


மேலும், ஸ்ரீகாந்த் போன்றவர்கள் அரசியல் பின்னணி இல்லாததால் மாட்டிக்கொண்டதாகவும், பெரிய அரசியல் பின்னணி உள்ளவர்கள் தப்பித்து விடுவதாகவும் குறிப்பிட்டார்.இந்த வழக்கில், கோகைனை விற்பவர்கள் மற்றும் அதை இறக்குமதி செய்பவர்களை கண்டறிய வேண்டிய அவசியத்தை பாண்டியன் வலியுறுத்தினார். 


"ஸ்ரீகாந்த் ஒரு கன்ஸ்யூமர் மட்டுமே. அவருக்கு விற்றவர்கள் யார், அவர்களுக்கு சப்ளை செய்தவர்கள் யார் என்பதை கண்டறிய வேண்டும். ஆனால், இந்த வழக்கு ஸ்ரீகாந்துடன் தொடங்கி அவருடனே முடிகிறது," என்று அவர் கவலை தெரிவித்தார்.


அடுத்த அடுத்த சில கோலிவுட் பிரபலங்கள் இந்த வழக்கில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது தமிழில் விஜய், அஜித், போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமான நடிகை நமீதாவுக்கு இந்த போதை மருந்து வழக்கில் தொடர்பு இருப்பதாகவும், கூடிய விரைவில் நமீதாவுக்கு சமன் அனுப்பி விசாரணை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுத்திகிறது. 


விசாரணைக்கு பின்னர் நமீதா கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும், நடிகைகளின் கட்டுப்பாட்டில் ஒரு போதை சாம்ராஜ்யமே இயங்கி வருகிறது என்றும் தகவல்கள் கூறுகின்றனர். இது பற்றி உறுதி படுத்தப்படாத, சில தகவலால் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்பது தற்போது வரை தெரியவில்லை . 


இவர்களை தவிர இன்னும் பத்திற்கும் மேற்பட்ட பிரபலங்கள் போலீசாரின் கண்காணிப்பில் வந்துள்ளதாகவும், அவர்களை அடுத்தடுத்து விசாரணை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


மேலும், அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் இந்த விவகாரத்தில் தப்பிப்பதாகவும், காவல்துறையின் நடவடிக்கைகள் அரசியல் உள்நோக்கத்துடன் நடப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். 


"சிடி மணி, டி.நகர் சத்யா, வேலுமணி, எடப்பாடி என ஒரு பெரிய நெட்வொர்க் இயங்குகிறது. இவர்களைப் பாதுகாக்கும் அரசியல்வாதிகளே முழு குற்றவாளிகள்," என்று பாண்டியன் கூறினார். 

இந்த விவகாரம், தமிழகத்தில் கோகைன் வியாபாரத்தின் ஆழமான அரசியல் மற்றும் திரைத்துறை தொடர்புகளை வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது. இதில் ஈடுபட்டுள்ள முக்கிய குற்றவாளிகளை கண்டறிந்து, ஐரோப்பிய அல்லது அமெரிக்க பாணி விசாரணையின் மூலம் முழு வலைப்பின்னலை அழிக்க வேண்டும் என்று பாண்டியன் வலியுறுத்தினார். 


இந்த வழக்கு, அரசியல் செல்வாக்கு, காவல்துறையின் வரம்புகள் மற்றும் திரைத்துறையில் நிலவும் போதைப்பொருள் பயன்பாடு குறித்து முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது.

அதை முறுக்கி விட்டு திரையில் மிரட்ட தயாராகும் சிவகார்த்திகேயன்! எந்த படத்துல தெரியுமா?


சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. க்ளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன் போலீஸ் போல அந்த கெட்டப்பில் இருக்கின்றார். இதை வைத்து இந்த கெட்டப் சிவகார்த்திகேயன் மதராஸி படத்திற்காக தான் போட்டுள்ளார் என பேசி வருகின்றனர்

சிவகார்த்திகேயன் தற்போது தான் மதராஸி படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார். ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ருக்மிணி வசந்த் நாயகியாக நடித்திருக்கிறார். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இலங்கையில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் நடந்து முடிந்துள்ளதாம். இந்நிலையில் சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

முறுக்கு மீசை கெட்டப்பில் சிவகார்த்திகேயன் செம மிரட்டலாக இருக்கின்றார். 

மேலும் அவர் மதராஸி படத்திற்காக தான் இந்த லுக்கிற்கு மாறியிருக்கிறார் என சொல்லப்படுகின்றது. 

ஏற்கனவே வெளியான மதராஸி பட போஸ்டர்ஸ் மற்றும் கிலிம்ப்ஸ் வீடியோக்களில் சிவகார்த்திகேயன் தாடி மீசை உடன் இருக்கும் கெட்டப்பில் தான் இருந்தார். மேலும் சமீபத்தில் நாயகி ருக்மிணி வசந்த் கூட மதராஸி படத்தில் சிவகார்த்திகேயனின் கெட்டப் ஹைலைட்டாக இருக்கும் என கூறியிருந்தார்.

வெற்றிக் கூட்டணியுடன் இணையும் விஷால்!


தமிழ் சினிமாவில் இயக்குனர் கவுதம் மேனன், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் ஏற்கனவே ‛மின்னலே, காக்க காக்க, வாரணம் ஆயிரம், வேட்டையாடு விளையாடு, என்னை அறிந்தால்' போன்ற படங்கள் வெளியாகி வெற்றி பெற்றது.

இதற்கிடையில் இவர்கள் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு கவுதம் மேனன் வேவ்வேறு இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி வந்தார். தற்போது மீண்டும் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கவுதம் மேனன், ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் புதிய படம் உருவாகிறது. 

இதில் கதாநாயகனாக விஷால் நடிக்கவுள்ளார். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.

புதிய நாயகியுடன் இணைந்து கொண்டாட்டம்!


தமிழ் சினிமாவில்‌ பிரபல நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் தனுஷ். தற்போது தனுஷ் நடிப்பில் குபேரா திரைப்படம் வரும் ஜூன் 20 - ம் தேதி வெளிவர உள்ளது.

இதற்கிடையே பாலிவுட்டிலும் தேரே இஷ்க் மெயின் என்ற ஒரு படத்தில் நடித்துவருகிறார் தனுஷ். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சனோன் கமிட்டாகியிருக்கிறார்.

தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் டெல்லியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏற்கனவே தனுஷ் ஹிந்தியில் ராஞ்சனா, ஷமிதாப் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

இதனால் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நேற்று நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டுள்ளது.

இதில், நட்சத்திரங்கள் பலர் ஹோலி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றது. இந்நிலையில், ஆனந்த் எல்.ராய், கீர்த்தி சனோன், தனுஷ் ஆகியோர் ஷூட்டிங்கில் ஒன்றாக ஹோலி கொண்டாடி உள்ளனர். அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. 



      

தல அஜித் படத்திற்கு நெருக்கடி !

 விடாமுயற்சி படத்தைத் தொடர்ந்து அஜித்தின் குட் பேட் அக்லி படமும் ரிலீஸ் ஆகவுள்ளது. அடுத்தடுத்து இரண்டு படங்கள் ரிலீஸ் ஆவதால் யார் கண் பட்டது என்று தெரியவில்லை. இப்பொழுது அஜித் படத்திற்கு நெருக்கடி வந்துவிட்டது. இந்த படம் ரிலீசில் சிக்கல் உருவாகியுள்ளது.

ஏப்ரல் 10, இந்த திகதியை இரண்டு படங்கள் கூறி வைத்திருந்தது. அதாவது ஏப்ரல் 14ஆம் திகதி தமிழ் வருடப்பிறப்பு என்பதால் அந்த விடுமுறை நாட்களுக்கு தகுந்தார் போல் அஜித்தின் குட் பேட் அக்லி மற்றும் தனுஷின் இட்லி கடை இரண்டு படங்களும் வெளிவருவதாக இருந்தது.

இரண்டு படங்கள் வருவதால் விநியோகத்தர் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் என அனைவரும் நெருக்கடியில் இருந்தனர். ஒரே நேரத்தில் வெளிவருவதால் தியேட்டர்கள் ஒதுக்குவதில் பிரச்சனை காரணமாக இந்த விஷயத்தை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருந்தனர்.

இப்பொழுது அஜித்தின் குட் பேட் அக்லி இந்த ரேஸில் இருந்து பின்வாங்குவது போல் தெரிகிறது. இதுவரை இந்த படத்தின் சாட்டிலைட் இன்னும் வியாபாரமாகவில்லை. ஏற்கனவே இந்த படத்தின் OTT உரிமையை நெட்பிளிக்ஸ் 95 கோடிகள் கொடுத்து வாங்கியுள்ளது. சாட்டிலைட் வியாபாரத்திற்கு சன் டிவியிடம் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.

ஒருவேளை சன் டிவி இந்த படத்தின் சாட்டிலைட் உரிமைகளை கேட்கிற தொகைக்கு வாங்கிவிட்டால் இது ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆகும். அப்படி இல்லை என்றால் அஜித்தின் பிறந்தநாள் மே 1ஆம் தேதி வருகிறது. அன்று இதை ரிலீஸ் செய்வதற்கு திட்டமிடுகிறார்கள். இப்பொழுது தனுஷின் இட்லி கடைக்கே ரூட் கிளியராக இருக்கிறது.

விஜயின் ஜனநாயகன் முதல் பாடல் ?

 எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‛ஜனநாயகன்'. அவருடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படம் இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில், வருகிற பெப்ரவரி 14ம் திகதி காதலர் தினத்தன்று ‛ஜனநாயகன்' படத்தின் முதல் பாடல் வெளியாக இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே விஜய் நடித்த கத்தி, மாஸ்டர், பீஸ்ட், லியோ போன்ற படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த அனிருத் இந்த படத்திற்கும் இசையமைத்திருப்பதால் இந்த முதல் பாடல் விஜய் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.