இந்தி, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஜெனிலியா. நடிகர் ரித்தேஷ் தேஷ்முகை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஜெனிலியா. திருமணத்திற்கு பின் குழந்தை குடும்பம் என்று வாழ்ந்து வரும் ஜெனிலியா ஒருசில படங்களில் நடித்தும் வருகிறார்.
இந்நிலையில், மராட்டிய அரசர் சத்ரபதி சிவாஜி வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படமான ராஜா சிவாஜி படத்தில் முக்கிய ரோலில் ஜெனிலியா கணவர் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் நடித்துள்ளார்.
இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் பேசிய ரித்தேஷ் உணர்ச்சிவசப்பட்டு பேசியுள்ளார். சத்ரபதி சிவாஜி வரலாற்றி எடுக்க 25 ஆண்டுகளாக போராடினேன், உழைத்தேன், என் குழுவினர் கொடுத்த ஆதரவுக்கு நன்றி என்று எமோஷனலாக பேசியிருக்கிறார்.
இதனை கேட்ட ஜெனிலிய கணவர் கண்ணீரை கண்டு மேடையிலேயே கதறி அழுதுள்ளார்.
