தமிழக முதலமைச்சராகத் தளபதி விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்களும் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், பிரபல நட்சத்திர தம்பதியினரான சினேகா - பிரசன்னா ஆகியோர் தங்களது குடும்பத்துடன் முதல்வர் விஜயை நேரில் சந்தித்துள்ளனர்.
இந்தச் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்து நடிகை சினேகா வெளியிட்டுள்ள உணர்வுபூர்வமான பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சினேகாவின் நெகிழ்ச்சியான பதிவு:
முதலமைச்சருடனான சந்திப்பு குறித்து நடிகை சினேகா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
"விஜய் சேருடன் இரண்டு திரைப்படங்களில் (வசீகரா, கோட்) பணியாற்றியுள்ள நிலையில், இன்று அவரை 'முதலமைச்சர் ஜோசப் விஜய்' என்ற தகைமையில் பார்ப்பது உண்மையிலேயே பெரும் நெகிழ்ச்சியையும் உணர்ச்சிப் பெருக்கையும் தருகிறது. சில தருணங்கள் நம்மைப் பேச முடியாமல் மௌனமாக்கிவிடும்.
அவருடைய இந்த அரசியல் பயணம், வளர்ச்சி மற்றும் அவர் மக்கள் மத்தியில் சம்பாதித்துள்ள மரியாதை ஆகியவை உண்மையிலேயே அனைவருக்கும் ஊக்கமளிப்பவை. எனினும், நான் ஆரம்பத்தில் அறிந்த அதே பணிவான, அன்பான மற்றும் எளிமையான மனிதராகவே அவர் இன்றும் இருக்கிறார் என்பதுதான் என்னை மிகவும் நெகிழ வைக்கிறது. அவருக்கு எப்போதும் வலிமையும் வெற்றியும் கிடைக்க மனதார வாழ்த்துகிறேன்."
இவ்வாறு சினேகா தனது பதிவில் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். முதல்வர் விஜயை சினேகா - பிரசன்னா தம்பதியினர் தங்களது குழந்தைகளுடன் சந்தித்து உரையாடிய இந்த நெகிழ்ச்சியான புகைப்படங்கள் இணையத்தில் கவனத்தை ஈர்த்து வருகின்றன.



