ரோஹிணியும், கனகாவும் ஒரே இடத்தில்.. மாட்டிக்கொள்வாரா மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் நடக்கவிருப்பது இதுதான்


 

சின்னத்திரையில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது மனோஜின் இரண்டாம் திருமணம் எபிசோட்கள் விறுவிறுப்பாக போய்க்கொண்டு இருக்கிறது. தனது குடும்பத்திற்கு தெரியாமல் கனகாவை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார் மனோஜ்.

அதுவும் ரோகிணியிடம் இருந்து இன்னும் விவாகரத்து கிடைக்காத நிலையில், மனோஜ் இப்படி செய்திருப்பது மிகப்பெரிய பின்விளைவை அவரது குடும்பத்திற்கு தரப்போகிறது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில், அடுத்த வாரம் சிறகடிக்க ஆசை சீரியலில் நடக்கப்போவது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, அடுத்த வாரம் ஷோரூமில் மனோஜை பார்க்க அவருடைய இரண்டாவது மனைவி கனகா வருகிறார். அதே சமயத்தில் முதல் மனைவி ரோகிணியும் அங்கு வர, அதிர்ச்சியடைகிறார் மனோஜ். இதன்பின், கனகா மனோஜை பார்த்து Husband என அழைக்க, ரோகிணி ஷாக்காகிறார். இதன்பின் என்ன நடக்கப்போகிறது என்பதை வரும் வாரம் பொறுத்திருந்து பார்ப்போம்.



Post a Comment