நடிகர் தனுஷின் புதிய தோற்றம் ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளது.
நடிகர் தனுஷ், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தன் 55-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தனுஷே தயாரிக்கவும் செய்வதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதில் வில்லனாக நடிகர் மம்மூட்டியும் நாயகிகளாக நடிகைகள் சாய் பல்லவி, ஸ்ரீலீலாவும் நடிக்கின்றனர். மம்மூட்டி காவல்துறை அதிகாரியாக நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இப்படத்தில் தனுஷ் உளவாளியாக நடித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. த்ரில்லர் கதையாக உருவாகும் இதன் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நடிகர் தனுஷ் விமான நிலையத்திலிருந்து வெளியேறும் விடியோவில் ஃபங்க் சிகை வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. முந்தைய படங்களில் அதிக முடியில்லாமல் நடித்த தனுஷ், தன் - 55வது படத்தில் புதிய தோற்றத்தில் உள்ளது அவரது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
