நடிகர் ஜீவாவின் புதிய படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் ஜீவாவுக்கு பிளாக், தலைவர் தம்பி தலைமையில் ஆகிய படங்கள் வெற்றிப்படமாக அமைந்ததால் இழந்த தன் மார்க்கெட்டை மீண்டும் பிடிக்க நல்ல கதையம்சமுள்ள படங்களைத் தேர்தெடுப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பவர் என்பதால் ஜீவாவின் படங்களின் மீது எதிர்பார்ப்பும் இருக்கும். தற்போது, கிடா படத்தின் இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் மதுரையைப் பின்னணியாகக் கொண்ட கதையில் நடிக்கவுள்ளார். இதனை, மாமன், கருடன் ஆகிய வெற்றிப்படங்களைத் தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது.
விரைவில் படப்பிடிப்பும் தொடங்கவுள்ளதால் இந்தாண்டிலேயே படம் திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
