நிறைவடைகிறது ரேஷ்மா முரளிதரனின் செல்லமே செல்லமே தொடர்!

நடிகை ரேஷ்மா முரளிதரனின் செல்லமே செல்லமே தொடர் விரைவில் நிறைவடைகிறது.

சின்ன திரையில் பூவே பூச்சூடவா, அபி டெய்லர், நெஞ்சத்தைக் கிள்ளாதே உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமானவர் ரேஷ்மா முரளிதரன். அண்மையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கிழக்கு வாசல் தொடரில் நாயகியாக நடித்திருந்தார்.

தற்போது, இவர் செல்லமே செல்லமே தொடரில் பிரதான தொடரில் நடித்து வருகிறார். இந்தத் தொடரில் நடிகர் ரேஷ்மா முரளிதரன் உடன் சுந்தரி தொடர் பிரபலம் ஜிஷ்ணு மேனன் இணைந்து நடிக்கிறார்.

சன் தொலைக்காட்சியில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்தத் தொடர், பிரிந்த கனவன் மற்றும் மனைவிக்கு இடையே சிக்கி தவிக்கும் குழந்தைகளை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், இந்தத் தொடரில் அனுராதா, ராமச்சந்திரன் மகாலிங்கம், சர்வேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், செல்லமே செல்லமே தொடரின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும், இறுதிக்கட்ட காட்சிகள் விரைவில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.


ரேஷ்மா முரளிதரனின் கிழக்கு வாசல் தொடர் குறுகிய காலத்தில் நிறைவடைந்த நிலையில், செல்லமே செல்லமே தொடரும் தொடர் ஆரம்பிக்கப்பட்ட சில மாதங்களிலியே நிறைவடைகிறது. 

Post a Comment