நேபாள வெள்ளத்தில் சிக்கிய பெற்றோர்கள் - கதறும் நடிகை

நடிகை நிவேதா பெத்துராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு தற்போது கவனம் பெற்றுள்ளது.

அதில், கைலாச மலைக்கு யாத்திரை சென்ற தனது பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள் பலர், நேபாளம் – திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்டுள்ள பேரிடர் சூழ்நிலையைத் தொடர்ந்து தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் சிக்கியுள்ளதாகக் கூறப்படும் தனது பெற்றோர் மற்றும் உறவினர்களின் முழுமையான விவரங்களையும் நிவேதா பெத்துராஜ் தனது பதிவில் பகிர்ந்துள்ளார்.

தற்போது நேபாளம் – திபெத் எல்லைப் பகுதியில் நிலவும் வெள்ளம் மற்றும் மோசமான வானிலை காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நிவேதாவின் இந்த பதிவு ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தனது பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என நிவேதா பெத்துராஜ் எதிர்பார்த்து வரும் நிலையில், அவரது பதிவுக்கு பலரும் ஆதரவும் ஆறுதலும் தெரிவித்து வருகின்றனர்.

Post a Comment