ஜூனியர்: திரை விமர்சனம்

 


அறிமுக நடிகர் கிரீத்தி ரெட்டி, வி.ரவிச்சந்திரன், ஸ்ரீலீலா, ஜெனிலியா ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள ஜூனியர் தெலுங்கு திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கு பார்ப்போமா.

கதைக்களம்

ரவிச்சந்திரன், சுதா ராணி தம்பதி 45 வயதிற்கு மேல் பெற்றோராகிறார்கள். சுதா ராணி பிரசவத்தின்போது இறந்துவிட, தனது மகன் கிரீத்தி ரெட்டியை தனியாள வளர்க்கிறார் ரவிச்சந்திரன்.

ஆனால், தனது அப்பாவின் முதிர்ச்சியால் சங்கடங்களை சந்திப்பதாக நினைக்கும் கிரீத்தி ரெட்டி அவரைவிட்டு விலகி இருக்க முயற்சிக்கிறார். ரைஸ் சொலூஷன் என்ற கம்பெனியில் காதலி ஸ்ரீலாவுக்காக கிரீத்தி ரெட்டியும் வேலைக்கு சேர்கிறார். முதல் நாளிலேயே டீம் லீடரான ஜெனிலியாவுடன் கிரீத்தி ரெட்டி மோதல் ஏற்படுகிறது.

அதன் விளைவாக அவரை வேறொரு டீமிற்கு மாற்றுகிறார் ஜெனிலியா. அங்கு ஊழல் நடந்திருப்பதை ஜெனிலியாவின் கவனத்திற்கு கொண்டுவருகிறார் கிரீத்தி ரெட்டி. ஆனால் அவர் மீது இருக்கும் கோபத்தால் ஜெனிலியா அதனை அலட்சியப்படுத்த, கிரீத்தி ரெட்டி அவரை பழிவாங்க நினைக்கிறார்.

கம்பெனியின் சிஇஓ ஆக ஜெனிலியா அறிவிக்கப்படும்போது அவரை அவமானப்படுத்தும் வேலையை கிரீத்தி ரெட்டி செய்கிறது. அதன் பின்னர் ஜெனிலியா யார் என்ற உண்மையை கம்பெனியின் ஓனரும், அவரது அப்பாவுமான ராவ் ரமேஷ் கிரீத்தி ரெட்டியிடம் கூறுகிறார்.

அதனைத் தொடர்ந்து கிரீத்தி ரெட்டி எடுத்த முடிவு என்ன? தனது அப்பாவின் பாசத்தை அவர் புரிந்துகொண்டாரா என்பதே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்

60 வயதை கடந்த அப்பாவுக்கும் 20களில் இருக்கும் மகனுக்கமான கதையாக படம் தொடங்குகிறது. ஆனால் இடைவேளைக்கு பிறகு வேறொரு தளத்தில் பயணிக்கிறது. என்றாலும் இந்த திரைக்கதையை இயக்குநர் ராதா கிருஷ்ணா ரெட்டி கச்சிதாக கொண்டு சென்றிருக்கிறார்.

அறிமுக ஹீரோவான கிரீத்தி ரெட்டி நடிப்பு, ஆக்ஷன், டான்ஸ் என எல்லா ஏரியாவிலும் பிண்ணிப்பெடலெடுக்கிறார். அவரது அறிமுக காட்சியில் வரும் சேஸிங் ஆக்ஷன் சீன் மிரட்டல். எனர்ஜிடிக்கான ஹீரோவாக ராம்சரணை கண்முன் நிறுத்துகிறார் கிரீத்தி ரெட்டி.

ஸ்ரீலீலா வழக்கமான தெலுங்கு படங்களில் வரும் ஹீரோயின்தான். அவரது டான்ஸைப் பற்றி சொல்லவா வேண்டும்; ஏற்கனவே இணையத்தில் ஹிட் அடித்த "வைரல் வையாரி" பாடலில் அவரும், கிரீத்தி ரெட்டியும் அதகளம் செய்திருக்கிறார்கள்.

கன்னட சூப்பர் ஸ்டார் வி.ரவிச்சந்திரன் அமைதியான அப்பா கேரக்டரில் யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படத்தின் கதையே ஜெனிலியாவை சுற்றித்தான். அவரும் தனது ரோலினை கச்சிதமாக செய்திருக்கிறார்.

இவர்கள் அனைவரையும் தாண்டி முதல் படத்திலேயே, குருவி தலையில் பனங்காய் வைத்தது போல் கிரீத்தி ரெட்டிதான் படத்தை தாங்குகிறார். ஆனால், இறுதியில் இந்த குருவி பனைமரத்தையே தாங்கும் என்பதுபோல் காட்சிக்கு காட்சி நம்மை ரசிக்க வைக்கிறார்.


முதல் பாதி ஜாலியாக நகர, இரண்டாம் பாதியின் கதைக்களம் அப்படியே மகேஷ் பாபுவின் ஸ்ரீமாந்துடுவை நினைவுபடுத்துகிறது. எனினும் எமோஷனல் டிராவல் மற்றும் கிளைமேக்ஸ் நம்முடன் கனெக்ட் ஆவதில் நிற்கிறது படம். தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை படத்திற்கு உயிர்கொடுக்கிறது.

அதேபோல் வைரல் வையாரி பாடல் செம குத்து. தெலுங்கு, கன்னடம் என பைலிங்குவல் படமாக இயக்கியிருக்கும் ராதா கிருஷ்ணா ரெட்டி, குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய என்டெர்டைன்மென்ட் படத்தை கொடுத்திருக்கிறார்.  




கூலி திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி வந்திருக்கு தெரியுமா

 


லோகேஷ் கனகராஜ் - சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் எப்போது இணைந்து படம் பண்ணுவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், கூலி திரைப்படம் அமைந்தது.


இப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நாகர்ஜுனா, சௌபின் சாகிர், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மேலும் அனைவரும் சர்ப்ரைஸ் தரும் வகையில் அமீர் கான் இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். வருகிற ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி கூலி திரைப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


இந்த நிலையில், கூலி திரைப்படம் எப்படி வந்துள்ளது, படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

திரைப்பட விளம்பரங்கள்

முதல் விமர்சனம்

கூலி திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் பேட்டியளித்துள்ளார். இந்த பேட்டியில், கூலி திரைப்படம் குறித்து பேசிய அவர், படத்தின் முதல் பாதி எமோஷ்னல் ட்ராமாவாக இருக்கும் என்றும், இடைவேளை காட்சியில் ரஜினியின் Trasformation நடக்கும் என்றும், அதன்பின் முழுக்க முழுக்க ஆக்ஷன்தான் என்றும் கூறியுள்ளார்.


திரைப்பட விளம்பரங்கள்

மேலும் கூலி திரைப்படத்தை சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்துள்ளார். படத்தை பார்த்துவிட்டு, 'எனக்கு இன்னொரு தளபதி கொடுத்திருக்கீங்க லோகேஷ்' என மிகவும் மகிழ்ச்சியுடன் லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டியுள்ளார். ரஜினிகாந்தின் இந்த முதல் விமர்சனம் படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை இன்னும் இரட்டிப்பு ஆக்கியுள்ளது.


ஊருக்கே தெரியவரும் ஆனந்தியின் கர்ப்பம்! எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. சிங்கப்பெண்ணே அடுத்த வார ப்ரோமோ




 சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி அவரது அக்கா திருமணத்தை எப்படியாவது நடந்து முடித்துவிட வேண்டும் என இருக்கிறார். அதுவரை தனது கர்ப்பம் பற்றிய செய்தி யாருக்கும் தெரிய கூடாது என அவர் அனைவரிடமும் சொல்லி இருக்கிறார்.

ஆனந்தி அக்கா திருமணத்துக்கு அன்பு, மகேஷ் என எல்லோரும் வருகிறார்கள், ஆனால் ஆனந்திக்கு அதிர்ச்சி கொடுத்தது அன்புவின் அம்மா திடீரென வந்தது தான். ஆனந்தி - அன்பு திருமணத்தை நடத்த வேண்டும் என்கிற ஆசையை நிறைவேற்ற தான் வந்திருப்பதாக நேரடியாகவே அவர் எல்லோரிடமும் கூறிவிட்டார்.


அதன் பின் திருமண நிகழ்ச்சியில் ஆனந்தி திடீரென மயக்கம் போட்டு விழுந்துவிடுகிறார். அவர் கையை பிடித்து பார்க்கும் பாட்டி அதிர்ச்சி ஆகிறார்.

ஆனந்தி கர்ப்பமாக இருப்பதை அவர் கூறினால் அந்த உண்மை மொத்த ஊருக்கே தெரியவந்துவிடும். அதனால் ஆனந்தியின் தோழிகளும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள்.

ப்ரோமோவில் நீங்களே பாருங்க. 



கொக்**ன் அடி.ச்சா தான் நடிகைகள் படுக்க அனுமதி.. உச்ச கட்டத்தில் நடக்கும் விபரீதம்..!

 


மூத்த நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன், ‘புதிய சிந்தனை’ யூடியூப் சேனலில் அளித்த பேட்டியில், நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா உள்ளிட்டோர் போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டது குறித்து பேசினார். 

கிருஷ்ணா 13 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நீதிபதி உத்தரவிட்டதை அவர் குறிப்பிட்டார். 

இந்த விவகாரத்தில் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் ‘கோடு’ (குறியீட்டு வார்த்தைகள்) பயன்படுத்தி போதைப்பொருள் வியாபாரம் நடைபெறுவதாகவும், கிருஷ்ணா சில செய்திகளை அழித்ததால் வசமாக மாட்டிக்கொண்டதாகவும் ரங்கநாதன் தெரிவித்தார். 

அவர், “நான் கொக்கைன் பயன்படுத்தவில்லை. எனக்கு ஆன்ஜியோ சிகிச்சை செய்யப்பட்டுள்ளது, ஆயுர்வேத மருத்துவம் பின்பற்றுகிறேன்,” என்று கூறி, தன்னை இந்த விவகாரத்தில் இருந்து விலக்கினார். 

ஒரு கிராம் கொக்கைன் 12,000 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரை விலை உயர்ந்தது என்றும், இது நரம்பு மண்டலத்தை தாக்கி, பசியை அடக்கி, உடல் எடையை குறைக்க உதவுவதால் நடிகர்கள் மற்றும் நடிகைகள் இதை பயன்படுத்துவதாகவும் விளக்கினார். 

இது உணவு தேவையை குறைத்து, மூன்று நாட்கள் சோர்வின்றி வேலை செய்ய உதவுவதாகவும், ஆனால் நீண்டகால பயன்பாடு மனநிலையை பாதிக்கும் என்றும் எச்சரித்தார். 

கேரளா மற்றும் பெங்களூரில் இந்த வியாபாரம் தொடர்பாக பெரிய அளவில் கைது நடவடிக்கைகள் நடந்து வருவதாகவும், கென்யா, நைஜீரியா போன்ற நாடுகளில் இருந்து இந்த போதைப்பொருள் வருவதாகவும் அவர் கூறினார். 

மேலும், பார்ட்டிகளில் மது மற்றும் போதைப்பொருள் பயன்பாடு சினிமாவில் பழக்கமாகிவிட்டதாகவும், ஆனால் அனைத்து நடிகர்களையும் இதற்கு குற்றவாளிகளாக கூற முடியாது என்றும் தெரிவித்தார். 

மட்டுமில்லாமல், சினிமாவில் ஆண், பெண் வேறுபாடே கிடையாது. அதிலும், இந்த போதை விவகாரத்தில் நடிகைகள் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். சில நேரங்களில், பட வாய்ப்புக்காக படத்திற்கு சம்பந்தமே இல்லாத, வயாதான நபர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டிய சூழலுக்கு உள்ளாவார்கள்.

அப்படி சங்கடமான நேரங்களில் கொக்*ன் பயன்படுத்தி விட்டு தன்னை மறந்த நிலையில் அங்கு செல்வார்கள். இன்னும் சில நடிகை கொக்**ன் அடிச்சா தான் படுக்கைக்கு சம்மதிப்பார்கள். தங்களை மறந்த நிலையில் இந்த தவறுகளை செய்ய சம்மதிக்கிறார்கள். இதெல்லாம், உச்சகட்ட விபரீதம்.


பிரபலங்களின் பெயர்களை தவிர்த்த அவர், “கூகுளில் கொக்கைன் பயன்பாட்டின் அறிகுறிகளை பாருங்கள், யார் மாட்டியிருக்கிறார்கள் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்,” என்று கூறி, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இலங்கை வந்த தமிழ் சினிமாவின் வெள்ளைத் தோல் நடிகை! வாயைப் பிளந்த ரசிகர்கள்


தென்னிந்திய நடிகை ஹன்சிகா மோத்வானி இன்று இலங்கையை வந்தடைந்துள்ளார்.

 நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக அவர் இலங்கை வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இவரை ரசிகர்கள் வாயைப் பிளந்தவாறு பார்த்துள்ளனர்.




வசூலில் ரெட்ரோவை முந்தியதா டூரிஸ்ட் பேமிலி?


சூர்யா நடித்த ரெட்ரோ மற்றும் சசிகுமாரின் டூரிஸ்ட் பேமிலி ஆகிய திரைப்படங்கள் மே 1ந் தேதி போட்டிபோட்டு ரிலீஸ் ஆன நிலையில், அதன் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

 கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ரெட்ரோ திரைப்படம் மே 1-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. அப்படத்திற்கு போட்டியாக சசிகுமார் நடித்த டூரிஸ்ட் பேமிலி திரைப்படமும் திரைக்கு வந்தது. இந்த இரண்டு படங்களுமே வசூலிலும் போட்டி போட்டு வருகின்றன. குறிப்பாக ரெட்ரோவை காட்டிலும் டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதில் எந்த படம் வசூலில் டாப்பில் உள்ளது என்பதை பார்க்கலாம்.

ரெட்ரோ திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். மேலும் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படம் விமர்சன ரீதியா சற்று சறுக்கினாலும், வசூல் ரீதியாக கோடிகளை குவித்து வந்தது. இப்படம் முதல் மூன்று நாட்களில் உலகளவில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்திருந்த நிலையில், 3ம் நாளோடு ஒப்பிடுகையில் 4ம் நாளில் வசூலில் சற்று சரிவை சந்தித்து இருந்தது.

டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தை அபிஷன் ஜீவிந்த் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி இருந்தார். இப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். மேலும் கமலேஷ், யோகிபாபு, ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியாக ஏகோபித்த வரவேற்பை பெற்று வரும் நிலையில், வசூலிலும் நாளுக்கு நாள் பிக் அப் ஆகி வருகிறது.

அதன்படி டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் 3ம் நாளைக் காட்டிலும் 4ம் நாளில் 40 சதவீதம் அதிகம் வசூலித்துள்ளது. 3ம் நாள் 2.29 கோடி வசூலித்திருந்த இப்படம் 4ம் நாளில் 3.2 கோடி வசூலித்து இருந்தது. அதே வேளையில் ரெட்ரோ திரைப்படம் தமிழ்நாட்டில் 3ம் நாள் மற்றும் 4ம் நாள் 5.7 கோடி வசூலித்து இருந்தது. இனி அடுத்து வார நாட்கள் என்பதால் இரண்டு படங்களின் வசூலுமே சரிய வாய்ப்பு உள்ளது. அதிலும் டூரிஸ்ட் பேமிலி படத்தைக் காட்டிலும் ரெட்ரோ வசூல் கடுமையாக சரியும் என கூறப்படுகிறது.