பெண்கள் எழுச்சி, சாதிக்கப் பிறந்தவர்கள் பெண்கள் என வசனம் எல்லாம் கைத்தட்டி பாராட்டும் அளவிற்கு இருந்தாலும் கதைக்களம் அப்படி அமையவில்லை என்பது தான் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களின் கவலை.
முன்பு குணசேகரன் வீட்டுப் பெண்களை அடிமைப்படுத்தி தான் மட்டுமே நன்றாக வாழ வேண்டும் என இருந்தார், அதற்காக பல வேலைகள் செய்தார். அப்போதும் அவரது வீட்டுப் பெண்கள் தான் கஷ்டப்பட்டு வந்தார்கள், கொஞ்சம் முன்னேற நினைத்தாலும் அடிமேல் அடி போட்டு வீட்டிலேயே முடக்கிவிடுகிறார்கள்.
இப்போது புதியதாக என்ட்ரி கொடுத்த ராணாவை விட குணசேகரனே மேல் போல என சொல்லும் அளவிற்கு இவரது கதாபாத்திரம் கொடூரமாக அமைந்துள்ளது.
ஆத்திரத்தில் கதிர் அங்கிருந்த பொருளை வைத்து ஜனனி தள்ளி அடிக்கச் சென்றுள்ளார். அப்போது சக்தி தடுக்க அந்த சம்பவத்தை ஈஸ்வரி பார்த்து ஷாக் ஆகிறார்.
